★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, December 30, 2016

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு மறத்தமிழர் சேனை கடிதம்

அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திருமதி ந.சசிகலா அவர்களுக்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் இன்று (30-12-2016) கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் இது. மக்களாட்சி மலர்ந்துவிட்டதாக சொல்லப்பட்ட இத்தனை ஆண்டு காலங்களில் தமிழர்களின் நலன் சார்ந்து இயங்க வேண்டிய அனைத்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைமைகளும் தமிழர் அல்லாதோர் தலைமைகளில் தான் இருந்திருக்கிறது. முதல்முறையாக நேரடித் தமிழ்ச்சாதியை சார்ந்த தங்களது கைகளில் அதிகவாக்கு செல்வாக்குள்ள; சட்டமன்ற; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பு, அனைத்து அதிமுக தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு வந்திருப்பது வரவேற்கத்தகுந்த நிகழ்வாகும்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தை அரசாட்சி செய்த காமராஜர் அவர்களின் 1954 – 1963 ஆண்டு வரையிலான ஒன்பது ஆண்டுகால தமிழர் ஆட்சியும்கூட இந்திய தலைவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் தான் நடந்துள்ளது. ஆனால், தற்போது தங்களது மேலான வழிகாட்டுதலின் கீழ் செயல்படவிருக்கும் ஆட்சியானது அனைத்து தமிழ்ச்சாதியினர்களும் தமிழ்த் தேசிய அமைப்பினர்களும் விரும்பிய வகையில் அமைந்திருப்பது எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த மன நிறைவை தருவதாக; எழுச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது.

Thursday, December 15, 2016

உறுப்பினர்கள் தகுதி இழப்பு : தலைமை முடிவு

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் (15.12.2016) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
                                                        
“மறத்தமிழர் சேனை இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி, பல்வேறு வகையான தொடர்  சிக்கல்களுக்கு, சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும், கடந்த எட்டு ஆண்டு காலத்தில் இயக்க நலன் சார்ந்து கொள்கை மாறாமல் பயணிக்கும் அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

தங்களின் மேலான அர்ப்பணிப்பு உணர்வு, தியாக மனப்பாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலப்பு மண எதிர்ப்பு – சுய சாதி காப்பு – முக்குலத்தோருக்கான அதிகார மீட்டல் – மேலாதிக்க சுரண்டல் அழிப்பு – தனித்தொகுதி மாற்றல் – வரலாற்று மீட்பு – தியாகிகள் நினைவு போற்றல் – தமிழ்த் தேசிய அரசியல் பார்வை – தனித்தமிழ் வளர்ப்பு – போதையற்ற தமிழர் நிலம் என தொடர்ந்து  மறத்தமிழர் சேனை தனக்கென தனித்த அடையாளங்களோடு செயல்பட்டு வருகிறது. இத்தனைகளையும் சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் இயக்கம் என்றென்றும் கடமைப்பட்டது ஆகிறது.

ஆயினும், இயக்கத்தின் கட்டாய நெறிமுறைகளில் ஒன்றானது, உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தங்களது உறுப்பினர் நிலையை புதுப்பித்துக் கொண்டு புதிய அடையாள அட்டை பெற்றுவிட வேண்டும் என்பது ஆகும். அந்த வகையில், கடந்த 2009 – 2010 – 2012 – 2015 – நவ 2016 ஆகிய வருடங்களை முடிவு கால அளவாகக் கொண்டு, தற்போது வரை புதுப்பித்துக் கொள்ளாமல் நீடித்து வரும் அனைத்து உறுப்பினர்களையும் இன்று முதல் தற்காலிக தகுதி நீக்கம் செய்து அறிவிக்கிறேன்.

உறுப்பினர்கள் / நிர்வாகிகள் தங்களது உறுப்பினர் நிலையை ஜனவரி -15 க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் தகுதி நீக்கம் நிரந்தரமாக்கப்படும் என்பதையும், அந்தந்த இடங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் இதன் மூலம் அறிவுறுத்துகிறேன். கள ஆய்வு / விமர்சனக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும், புதிய உறுப்பினர்கள் அனைவரையும் தொகுத்து வெளியீடாக வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” என வெளியிட்டுள்ளார். 

Monday, November 28, 2016

குற்றப்பரம்பரை அரசியல் - பெருங்காமநல்லூர் வீரம்

பிரித்தானியக் காலனித்துவ ஆட்சி இந்தியாவில் வலுவாக வேரூன்றிய பிறகு, கி.பி. 1800களில் சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. மாகாணத்தை உருவாக்கியதுமே, காலனிய அரசு, கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் அரசின் நிதி நிலையை உயர்த்திட ரெவின்யூ போர்டு (Board of Revenue), டிரேட் போர்டு (Board of Trade & வணிகம்) ஆகியவற்றை நிறுவித் தங்களது நலன்களைப் பெருக்குவதில் தனிக்கவனம் செலுத்தியது. இதே நேரத்தில் உதயமான இந்தியத் தேசியக் காங்கிரஸ்’ (1885) கட்சியின் செயல்பாட்டினால் கலக்கமுற்ற காலனிய அரசு, தன்னுடைய அதிகாரத்தை மேலும் பலப்படுத்த எத்தனித்தது.- குறிப்பாக, ‘சூரத் மாநாட்டில் (1907) காங்கிரசாரிடையே ஏற்பட்ட மிதவாத & தீவிரவாதப் பிளவின் காரணமாக உருவான திலகரின், தலைமையிலான தீவிரவாத அமைப்பினரின் செயல்பாட்டினை எதிர் கொள்ள முடியாது அது திணறியது.

இத் தீவிரவாத அமைப்பை ஒடுக்கி அடக்குவதற்காகச் சட்டவிடிவிலான பல்வேறு சதிகளைப் பிரிட்டிஷ் அரசு தீட்டியது. இதன் மறு பகுதியாக, இங்குப் பரம்பரையாக உடல் வலிமை கொண்டு செல்வாக்குச் செலுத்திவந்த சில தீரமான உள்நாட்டுக் குழுக்களையும் எதிர் கொள்ளும் வகையில் & அவர்களையும் தம் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்து அடிமைப்படுத்தும் நோக்கில் & பல குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் காலனிய அரசு குற்றவியல் பரம்பரைச் சட்டம் & 1871’ (Criminal Tribes Act 1871) போன்ற சட்டங்கள், மேலும், உள்ளூர் பிரஜைகள் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்வதைத் தடுத்து நிறுத்தவும், முஸ்லீம்களைக் காங்கிரசிலிருந்து தனிமைப்படுத்தவும் பல்வேறு தந்திரோபாயங்களை மேற் கொண்டது. (தமிழகத்தில், பிறமலைக் கள்ளர்கள் காங்கிரசில் சேருவதைப் பெரும்பாலும் தடுத்து நிறுத்தியதற்காகக் கள்ளர் சமூக அபிவிருத்திஅதிகாரியாகப் பணி புரிந்த கி.ரி. இராஜா அய்யருக்கு வெள்ளைய அரசு ராவ்பகதூர்பட்டம் வழங்கியது. முஸ்லீம்களுக்குச் சலுகைகள்அளித்துக் காங்கிரசிலிருந்து பிரித்ததை, ‘மிண்டோ மார்லிசீர்திருத்தம் அம்பலப் படுத்தியது. இவற்றையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.)

Thursday, November 17, 2016

தூரி இராமசாமித்தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட மறத்தமிழர் சேனை கோரிக்கை

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சேவகராகவும் வாழ்ந்து மறைந்த பெரியவர் தூரி இராமசாமித் தேவர் அவர்களின் பிறந்த நாளில் அரசு விழா எடுக்கவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இன்று (17.11.16) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இதனை தாங்கள் பல முறை தங்களது சுதந்திர தின உரைகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.

Monday, November 14, 2016

சீர்மரபினர் மக்களின் உண்ணாநிலை அறப்போராட்டம்

ரமக்குடி, 13.11.016 அன்று சீர்மரபினர் பட்டியலில் இருக்கக்கூடிய சாதியினர்களை மீண்டும் டி.என்.டி என அறிவித்து சாதிச் சான்றிதழ் வழங்கிட வலியுறுத்தி தேவரினப் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் தலைமையில் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் அனைத்து அமைப்புகளும் பங்கேற்ற உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் C.M.T.ராஜாஸ் தேவர் அவர்கள், தேவரினப் புலிப்படை மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

சீர்மரபினர் சாதிப் பட்டியலில் வரக்கூடிய 68 சாதிகளுக்கும் துரோகம் இழைக்கும் விதமாகப் போடப்பட்ட அரசாணை எண் 1310 / நாள்: 30.07.1979 ஐ ஆளுகின்ற அதிமுக அரசு உடனே ரத்து செய்திடவும், பத்து சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கிடவும் வலியுறுத்தி அனைவரும் பேசினர்.

மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் பேசுகையில் மறவர் கள்ளர் இன மக்களின் பண்டைய வாழ்க்கை முறை பற்றியும் அவர்களின் மீது குற்றப்பரம்பரைச் சட்டம் புகுத்தப்பட்டதன் காரணங்கள் குறித்தும், இன்றைய தேவரின இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டங்கள் குறித்தும், சுதந்திரத்திற்காக ஒரு சிறு அசைவைக்கூட செய்திடாத தலித் மக்கள் இன்று இட ஒதுக்கீட்டு முறைகளால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிரம்பி வழிகிற நிலைகுறித்தும் விளக்கிப் பேசியதோடு, தமது நீண்ட நாளைய கொள்கை முழக்கமான விகிதாச்சார இட ஒதுக்கீடு கோரிக்கையில் இருந்து தற்போதைய தேவையான டி.என்.டி போராட்டங்களின் அவசியம் குறித்தும் பேசினார்.

Sunday, November 13, 2016

இராமநாதபுரம் சீர்மரபின நல சங்க உண்ணாநிலை போராட்டம்

இராமநாதபுரம் மாவட்ட சீர்மரபினர் நல சங்கம் 13.11.016 அன்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பாக உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது. மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தென்மண்டல தலைவர் மு.செந்தூர்பாண்டியன் அவர்கள், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் C.M.T.ராஜாஸ் தேவர் அவர்கள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி செந்தில் அவர்கள் வழக்கறிஞர் ஜோதிபாசு அவர்கள், மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்க செயலாளர் இராஜேந்திரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் உரிமைகளுக்கு எதிராகப் போடப்பட்ட அரசாணை 1310 / 30.07.1979 ஐ உடனே ரத்து செய்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட வலியுறுத்தி அனைத்து இயக்க முன்னோடிகளும் சிறப்புரை ஆற்றினார்கள்.

Thursday, November 10, 2016

ஸ்ரீ ராஜராஜ தேவர் 1031 வது சதய விழா

உலகப்புகழ் பெற்ற அதிசயங்களில் ஒன்றான தஞ்சை பெருவுடையார் திருக்கோவில் எழுப்பி, அனைத்து மதங்களுக்கும் பொதுவான கொடையளித்து, வரலாற்றில் இனியொருவன் வீரத்திற்காகப் பேசப்படாதபடி சோழப்பேரரசை கலிங்கம் முதல் ஈழம் வரை விரித்த மாமறவன் ஸ்ரீ ராஜராஜ தேவர் என்கிற அருண்மொழித்தேவர் பிறந்த நாள் விழா ஐப்பசி சதய நாளான நவம்பர்-09-2016 அன்று தஞ்சை மண்ணில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்களும், மராட்டிய மன்னர் வழி அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே அவர்களும், உதவி ஆணையர் ஜெ.பரணிதரன் அவர்களும் முன்னின்று ராஜராஜ சோழனின் 1031 வது சதய விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Thursday, July 28, 2016

தேசிய சீர்மரபினர் ஆணையம் தமிழகத்தில் ஆய்வு

தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம் ( Criminal Tribes Act ) நம்மீது புகுத்தப்பட்ட நூற்றாண்டினை கடந்து விட்டோம். ஆயினும், அந்த கொடிய சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நிலத்தின் பழங்குடிகளான நம்முடைய மக்கள் இன்னமும் அவற்றிலிருந்து மீட்சி பெறாமல் பொருளாதார நலிவடைந்த  சமுகமாகவே அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள்.

இந்தியாவை அடிமைப்படுத்தி அரசாட்சி நிகழ்த்திய பிரித்தானிய அதிகாரிகளின் கட்டளைகளுக்கு கட்டுப்படாத; அடிமையாக இல்லாத சமூகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக 1871 இல் முதன்முதலாக குற்றப்பரம்பரை சட்டம் நிறைவேற்றப்பட்டது. வட இந்திய மக்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டாலும் 1911 இல் தென் இந்தியாவிற்கும்; குறிப்பாக தமிழகத்தில் பிரமலைக்கள்ளர் சமூகத்தினர்களுக்கும் புகுத்தப்பட்டது.

1920 ஆம் வருடம் இந்த சட்டத்தினை எதிர்த்து திரண்ட பிரமலைக்கள்ளர்கள் மீது பெருங்காமநல்லூர் கிராமத்தில் வைத்து துப்பாக்கிசூடு நிகழ்த்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அரசுத்தரப்பில் பதினாறு வீரமறவர்கள் என்று உறுதி செய்யப்படுள்ளது. இவர்களில் மாயாக்காள் என்கிற வீரமங்கையும் ஒருவராவார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கள்ளர் குல தெய்வங்களுக்கு தாகம் தணிக்க நீர் ஊற்றியவர்தான் அந்த தாய். இந்த கொடுமையான சட்டத்தின் காரணமாக கள்ளரின வேங்கைகள் இரவானால் காவல்நிலையத்தில் தங்க வேண்டும். கைரேகை வைத்துக் கொள்ள வேண்டும். வெளியூர் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் காவல் நிலையத்தில் சொல்லி அனுமதி வாங்கித்தான் செல்ல வேண்டும்.

ஆங்கிலேய அரசாட்சிக்கு எதிராக வலிமையோடு போராடிய சமூகங்கள் மீதெல்லாம் இந்த குற்றப் பரம்பரைச் சட்டம் பாய்ச்சப்பட்டது. தமிழகத்தில் மட்டும் கள்ளர், மறவர், குறவர், வலையர், ஒட்டர் உள்ளிட்ட 89 சாதியினர்கள் மீது புகுத்தப்பட்டது. இதன் காரணமாக கடுமையான துயரங்களையும், வலிகளையும் அனுபவித்தனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, ஜார்ஜ் ஜோசப் போன்ற ஆளுமைகளின் தொடர் போராட்டத்தினாலும், எதிர்ப்பினாலும் குற்றப் பரம்பரை சட்டம் 1947 இல் ஆங்கிலேய அரசால் திரும்பப் பெறப்பட்டது.

முறைகேடான சட்ட வடிவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தங்களது வாழ்வை சீரமைத்துக் கொள்வதற்கு பள்ளிகளும், நிவாரண திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. அவைகளும் சுதந்திர அரசால் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டுவிட்டன. டி‌என்‌டி என்று வழங்கப்பட்டு வந்த சாதி சான்றிதழும் டி‌என்‌சி என வழங்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து மதுரை சீர்மரபினர் நல சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருவதோடு, மத்திய – மாநில அரசு அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டு வருகின்றது. திரு.காசிமாயன் போன்ற செயற்பாட்டாளர்களின் பெருமுயற்சியின் காரணமாக 23.07.2016 அன்று தேசிய சீர்மரபினர் நல ஆணையம் தமிழகம் வந்தது.

மதுரை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய சீர்மரபினர் நல ஆணைய தலைவர் பிகு ராம்ஜி இதாதே, பழங்குடியின சீர்மரபினர் நல உறுப்பினர் ஷரவன் சிங் ரத்தோட் தலைமையிலான குழுவினர் சீர்மரபின சமூகங்களிடம் குறைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலர் இந்திரவள்ளி, கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் செல்வக்குமார், உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா ஆகியோர் உடனிருந்தனர்.

தேசிய ஆணையத்தலைவர் பிகுராம்ஜி இதாதே அவர்களிடம் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், மறத்தமிழர் சேனை மாநில தொண்டர் சேனை செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன் அவர்கள் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சார்ந்த பல்வேறு இயக்கத்தினர்கள் தங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக மனுவாக அளித்தனர். மேலும், தென்இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் கே.சி.திருமாறன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், பசும்பொன் தேசிய கழகம் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தேவரின கட்சிகளைச் சார்ந்தவர்களும் மனு அளித்தனர்.

கோரிக்கை மனுக்களை பெற்ற ஆணைய தலைவர் பிகு ராம்ஜி இதாதே அவர்கள் “அனைத்து மனுக்களையும் பரிசீலித்து மத்திய அரசின் கவனத்திற்கு நிச்சயம் எடுத்துச் சென்று இழந்த உரிமைகளை மீண்டும் பெற்றுத்தருவேன்” என்று உறுதியளித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து குழுவினர் சீர்மரபின மக்களின் வாழ்விடங்கள், பணியிடங்களை நேரில் ஆய்வு செய்திட மதுரை செல்லூர், கீரைதுறை, வெள்ளக்கல் ஆகிய பகுதிகளை சென்று பார்வையிட்டனர். குழுவினர்களுடன் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், மாநில தொண்டர் சேனை செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன், மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், அகமுடையார் அரண் மாநில ஒருங்கிணைப்பாளர் சோ.பாலமுருகன், சீர்மரபினர் நல சங்க நிர்வாகிகள் திருமதி. மஞ்சு கணேஷ், காசிமாயன் மற்றும் பலர் உடன் சென்றனர்.

தேசிய சீரமரபினர் ஆணையத்தின் சார்பில் இரண்டாம் நாள் ஆய்வுப்பயணம் 24.07.2016 அன்று காலை தென்பரங்குன்றம் பகுதியில் இருந்து துவங்கியது. மறத்தமிழர் சேனை, அகமுடையார் அரண், அகில இந்திய பார்வர்ட் பிளாக், சீர்மரபினர் நல சங்கம் உள்ளிட்ட இயக்கங்களின் நிர்வாகிகளும் உடனிருந்தனர். தென்பரங்குன்றம் மலையடிவாரத்தில் குடில் அமைத்து தங்கியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து பெருங்காமநல்லூர் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடம், நினைவு தூண், உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி, 58 கிராம கால்வாய் திட்ட பணிகள், வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் முடித்து இரவு கோடைக்கானல் வந்தடைந்தனர்.


25.07.2016 அன்று காலை கோடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. மூன்று நாள் ஆய்வுகளிலும் மறத்தமிழர் சேனை மாநில மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர் சோ.பாலமுருகன், கள்ளர் நாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், சீர்மரபினர் நலசங்க நிர்வாகிகள் காசிமாயன், திருமதி மஞ்சு கணேஷ், உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் செட்டில்மெண்ட் துரைமணி, மறத்தமிழர் சேனை மாநில மாநில தொண்டர் சேனை செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன், மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் ஜெயராஜ், ஆந்திர டி‌என்‌டி சங்க தலைவர் சுப்பாராவ், சீர்மரபினர் நலசங்க தலைவர் டாக்டர் ஜெபமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Friday, June 24, 2016

கொடி வழி - புதுமலர் பிரபாகரன் குடும்ப மரம்

                     எனது கொடிவழி : முன்னவர் வேர்களைப் பற்றியது.

வாழையடி வாழையென வாழ்கவென பெரியவர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள். அதன் உள்அர்த்தங்களை அறிந்து கொள்ளும் முனைப்பின்றி கடந்து செல்பவர்களே அநேகம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தலைமுறைகளின் வரலாறு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாகரீக உலகத்தின் அடையாளம் என்று பெற்ற தாய், தந்தையை கூட ஒதுக்கிவிட்டு தனிக்குடித்தனமாக வாழத் துவங்கிவிட்ட இன்றைய சூழலில் தலைமுறைகளின் வாழ்வியலும், அவர்களது கிளை உறவுகளும் தேவையற்ற சுமையாகிப் போனதில் வியப்பில்லை. குடும்ப விழாக்களுக்கு பெயர் போட்டு அச்சடித்து வரும் நிறைய பெரியவர்கள் தனது உறவுமுறை சொல்லி உங்க அய்யாவுக்கு தெரியும். உங்களுக்கு எங்க தெரியப்போகுது. வந்தா போனாத்தானே தெரியும் என நொந்து கொள்வார்கள். காரைக்குடி பகுதி செட்டியார்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் பத்து பதினைந்து தலைமுறைப் பெயர்களைச் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.

நாம் அத்தகைய எவற்றையும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை என்பதைவிட அறிந்துகொள்வது கூட இல்லை. நம்முடைய பேரனுக்குப் பேரன் நம்மை அறிந்திருக்க மாட்டான் என்பது எவ்வளவு கொடுமையானதோ, அதற்கு இணையானது நாம் நமது முன்னோர்களை அறிந்திராமல் வாழ்வது. இன்றைய நாட்களில் ஒன்றிரண்டு தலைமுறை முன்னோர்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கும் நபர்கள் மிகக்குறைவே. எனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிவிட்ட நிலையிலும், எனது சொந்த கிராமத்தினர் கணேசத்தேவர் பேரன் என்றுதான் சொல்ல விரும்புகிறார்கள். நீதிமன்றங்களிலே உரக்கச் சொல்வது போல நாகுத்தேவர் வகையறா என்றுதான் பேசுகிறார்கள். ஆக, நானென்பது நானல்ல இந்த வகையறாக்கள் தான் நான்! இவர்கள்தான் எனது ஆணிவேர். இவர்களது பழமையும், பெருமையும், குடும்ப முறைகளும் எனது குருதியிலே பதிந்து கிடக்கிறது.

Friday, June 17, 2016

முத்துவடுகநாதத் தேவர் 244 வது வீரவணக்க விழா அழைப்பு

சின்ன மறவர் நாடு, சிவகங்கை சீமை அரசாண்ட இரண்டாவது மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்களும், இளைய இராணி கெளரி நாச்சியார் அவர்களும் 1772 ஆம் ஆண்டு காளையார் கோவிலில் நடந்த போரில் நயவஞ்சகமாக ஆங்கிலேய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது நினைவு நாள் வீரவணக்க நாளாக ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள், முக்குலத்தோர் கட்சித்தலைவர்கள், முக்குலத்தோர் அமைப்புகள், மறவர் அமைப்புகள் மற்றும் மன்னர் வம்சா வழியினர் பங்கேற்று விழாவினை சிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது 25.06.2016 அன்று காலை பத்து மணி முதல் மாலை வரை மன்னரது 244 -ஆவது ஆண்டு வீரவணக்க நாள் விழா காளையார் கோவிலில் அமைந்துள்ள முத்துவடுகநாத தேவர் மாலையீட்டில் நடைபெற உள்ளது.

Sunday, June 12, 2016

இராமலிங்க விலாசம் அரண்மனை

லகப்புகழ் பெற்ற போர் மரபினர்களில் முதன்மையானவர்கள் மறவர்கள் ஆவர். போரெனில் புகழும் புனைகழல் மறவர் கூட்டமென்று புறநானூறு பாடியது. தனக்குதானே தந்தலை கொய்து மன்னவர் மண்காக்க உயிரைக் கொடையாக தந்து நடுகல் ஆகிப்போன வீரமறவர்கள் ஏராளம். மறத்தமிழர் சேனை வந்தால் மண் சிவக்கும், பகைவர் குருதி தெறிக்கும்; சென்ற இடமெல்லாம் செருக்களம் அமைத்து வெற்றியை மட்டுமே வென்ற இனமாகிப் போன மறவர்களில் ஒரு பிரிவினரான செம்பிய நாட்டு மறவர்கள் அரசாண்ட சீமையாம் பெரிய மறவர் நாட்டின் தலைநகராக முதலில் விரையாதகண்டன் என்கிற ஊரும், பின்பு புகழுர் என்கிற இன்றைய போகலூர் கிராமமும் இருந்து வந்திருக்கிறது.

கி.பி.1678 ஆம் ஆண்டு முதல் 1710 வரை அரசாண்ட ஏழாவது மன்னராகிய கிழவன் சேதுபதி என்று வரலாறு போற்றுகிற இரகுநாத சேதுபதி தன்னுடைய தலைநகரை இராமநாதபுரத்திற்கு மாற்றி பாண்டியர்கள் காலத்திலே கட்டப்பட்டு சிதைவடைந்திருந்த மண்கோட்டையை அகற்றிவிட்டு, செவ்வக வடிவில் பலமான கற்கோட்டையாக அரண்மனையை எழுப்பியிருக்கிறார். 

Saturday, June 11, 2016

புத்தர் சிலை : புதிய வரலாற்று சான்று

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஆனந்தூர் அருகில் சம்மந்தவயல் என்ற ஊரில் கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை அங்குள்ள வயல் வரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தர் சிலைகள் ஏற்கனவே இராமேஸ்வரம் அரியான்குண்டு பகுதியிலும், திருவாடானை அருகே மணிகண்டியிலும், சுந்தரபாண்டியன்பட்டினத்தில் உள்ள சிவன் கோயிலிலும், கிடைத்துள்ளன. இலங்கையின் தொடர்பால் இம்மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் புத்த மதம் செழித்து இருந்ததாக கூறப்பட்டாலும் அதற்கான தடயங்கள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. ஏற்கனவே கிடைத்த  சிலைகளும் கடலோரப்பகுதிகளில் கிடைத்துள்ள நிலையில் இச்சிலை மாவட்டத்தின் உள்பகுதியில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

ஐந்தடி உயரம் உள்ள இச்சிற்பத்தில் புத்தர்  அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளார். இதன் கீழ்பகுதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. மார்பில் சீரை என்ற மேலாடையையும், இடுப்பில் ஆடையையும் அணிந்து நீண்ட காதுகளுடன் காணப்படுகிறார். அவர் கையில் உள்ள தர்மச் சக்கரமும், தலையில் உள்ள சுருள்முடியும் சிதைந்த நிலையில் உள்ளன. சுருள்முடிக்கு மேல்  தீச்சுடர் காணப்படுகிறது.  அதில் துளை உள்ளது. இது நவரத்தினக் கற்கள் பதிப்பதற்காக உருவாக்கப் பட்டிருக்கலாம். புன்னகை புரியும் இதழ்களுடன் மிக அழகாக  சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 8, 2016

தனித்தொகுதிகள் துயரத்தின் நிழல் - பாகம் மூன்று

                                                        -புதுமலர் பிரபாகரன் 

“சுதந்திரமானது இன்னும் களத்தடி நெல்லாகவே இருக்கிறது. கருக்காய், கரும்புழுதி, இடையிடையே வைக்கோல், செத்தையெல்லாம் நிரம்பியதாகவே இருக்கிறது. இது அப்படியே களஞ்சியத்திற்கு போய் சேருமா? சேராது. சேரக்கூடாது. காலம் வரும்போது காற்றில் தூற்றி கழிக்க வேண்டியவற்றைத் தானாகவே கழித்து விட வேண்டும்.”
                   -தேவர் திருமகனார்.

 உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்கிற பெருமிதங்களுக்கு மத்தியில் சுதந்திர இந்தியாவில் பிறந்திருந்தும், மக்கள் செல்வாக்கு அமைந்திருந்தும் தம் வாழ்நாள் முடிவதற்குள் ஒருமுறையேனும் சட்டமன்ற: நாடாளுமன்ற அவைகளுக்குள் நுழைந்து விட முடியாதா என்கிற ஏக்கத்துடன் தமது அரசியல்  சுதந்திரத்தின் எல்லை குறித்த எவ்வித விவாதமுமின்றி கடந்து செல்லும் தலித்துகள் அல்லாத 83சதவிகித இந்திய பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களும்,  கிருத்துவ, முஸ்லீம் சிறுபான்மை மக்களும் மிகக்சரியாக தமது எதிர்கால அரசியல் குறித்த பார்வைகளை / உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது. 
        இந்திய அரசியலமைப்பை ஒருங்கிணைத்த அம்பேத்கார்கூட தனித்தொகுதி ஒதுக்கீடுகள் பத்தாண்டுகளுக்கு இருந்தால் போதுமென்றுதான் கோரிக்கை வைத்தார். அடிமை இந்தியாவில் முஸ்லீம்கள் கிருத்துவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் தலித்துகள் என அனைவருக்குமே இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட்டன. கால நீட்சியில் அவை ஒவ்வொன்றாக நீக்கப்பட்டுவிட்டன. ஆனால், சுதந்திர இந்தியாவில் சகல அறங்களையும் துடைத்துவிட்டு தலித்துகளுக்கு மட்டுமே இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
        தலித் என்கிற அடையாளத்தின் பிறிதொரு முகமாக நிரந்தர வாய்ப்புகள் என்பது வலுவாக கட்டமைக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களும் எஸ்.சி./எஸ்.டி ஊழியர்களால் நிரம்பி வழியும் இன்றைய சூழலிலும், அரசியலில் முழுமையான ஆதிக்கசக்தியாக தலித்துகள்  மாறிவிட்ட நிலையிலும்   தனித்தொகுதி அரசியல் நீக்கப்படாமல், காலநீட்டிப்பு செய்யப்பட்டு நூற்றாண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அதனினும் கொடுமையாக பல தொகுதிகள்  தொடர்ந்து 53 வருடங்களுக்கும் மேலாக தனித் தொகுதிகளாகவே இருந்து வருவதும், அவை மீண்டும் மீண்டும் பொதுத்தொகுதிகளாக மாற்றப்படாமல் தனித்தொகுதிகளாகவே நீட்டித்து வரப்படுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.

தனித்தொகுதிகள் துயரத்தின் நிழல் - பாகம் இரண்டு

                                               -புதுமலர் பிரபாகரன் 

“கொள்கை புனிதமாக இருந்தால் மட்டும் போதாது; அதற்கான வேலைத்திட்டமும் தூய்மையானதாக இருக்க வேண்டும்”
        –மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

இந்திய அரசியல் சூழலுக்குள் சிக்கித் திணறும் தமிழக பெரும்பான்மை சமூகங்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை பறித்துவரும் தனித்தொகுதிகளின் பரிணாம வளர்ச்சியானது ஆங்கிலேய சுரண்டல் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியிலிருந்து பிறப்பெடுத்த வறட்டுவளர்ச்சி சிந்தனையாகும்.

தமிழ் மண்ணில் சுதந்திரமாக ஆட்சி செலுத்திய அரசர்கள் ஆலயங்களுக்கும், அந்தணர்களுக்கும் கணக்கற்ற கொடைகளை வழங்கிட, ஏனைய தமிழ்ச்சாதியினர் உற்பத்தி, வணிகத்தில் தன்னிறைவாக செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். கால ஓட்டத்தில் மதத்தால் வேறுபட்ட நவாபுகள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியால் புறக்கணிக்கப்பட்ட பிராமணர்கள் வருமானத்திற்கான மாற்று வழி தேடலாயினர்.
ஆங்கிலத்தை நீச மொழி யென்று விமர்சித்து வந்திருந்த நிலையில், கடுமையான உடல் உழைப்பின்றி மாத ஊதியம் பெறும் புதிய ஊழிய வர்க்கத்தின் துவக்கம் அறிந்து, ஆங்கிலம் கற்று ஆங்கிலேயர்களுக்கு தொண்டு புரியலாயினர். இதே ஊழியத்தில் வேளாளர், முதலியார் சாதிகளும் முன்னணியில் இருந்தன. ஆங்கிலேய உற்பத்தியின் விற்பனை சந்தையாக தமிழகம் மாறிய போது, இங்குள்ளவர்களின் பொருளாதாரம் நசிவடைந்து வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. கொஞ்சம் காலந்தாழ்ந்து ஆங்கிலம் கற்கவும் வேலையில் சேரவும் மற்ற சமூகங்களும் முற்பட்டபோது பிராமணர்களின் ஆதிக்கம் அவர்களுக்கு தடையாக அமைந்தது. ஆகவே மற்ற சமூகங்கள் பகைமை கொண்டதோடு பிராமணர்களின் ஆதிக்கத்தை அடக்கவும், முடக்கவும் அனைத்து வகைகளிலும் போராடி வந்தன.

தனித்தொகுதிகள் துயரத்தின் நிழல் - பாகம் ஒன்று

                                  -புதுமலர் பிரபாகரன்    
                       
                         மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
                      பழித்தது ஒழித்து விடின்  –குறள்

       லகிலேயே மக்களாட்சி நடைபெறும் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா ஆகுமென பள்ளிப்பருவம் முதல் பாடத்திட்டம் வாயிலாக நமக்குள் புகுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை அதுவாக இல்லாமல் வாக்களிக்க மட்டுமே உரிமையுள்ள குடிமகன்களாக அரைநூற்றாண்டு காலம் நம்மை புறக்கணிக்கும் வரலாற்று சூதுகளின் துவக்கத்தையும் அறியவேண்டியது அவசியமாகிறது. பல்வேறு மொழி, மதம், நாகரிகம், பண்பாடு, வரலாறு, பழக்கவழக்கங்கள் கொண்ட ஒன்றோடொன்று தொடர்பில்லாத பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்தியா என்கிற நாடு கட்டமைக்கப்பட்ட வழித்தடம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது மட்டுமல்ல பல வேடிக்கைகளும் நிறைந்தது ஆகும்.


       இந்தியப் பெருநாடு மண்வளம், தட்ப-வெப்பநிலை, உணவுமுறை, கலாச்சாரம், வழிபாடு, தெய்வநம்பிக்கை ஆகியவைகளில் பெருமாறுதல் கொண்ட சிறிய, பெரிய தனித்தனி நாடுகளாக செயல்பட்டு வந்தநிலையில், பழங்காலந்தொட்டு இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்நிய படையெடுப்பு, பண்பாட்டு தாக்குதல்களை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியின் கீழ்தான் ஒரே ஆட்சிக்குட்பட்ட நாடாக இந்தியா உருப்பெற்றது. ஆங்கிலேய கொடுங்கோலாட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்ட காலங்களில்  இது ஒரே நாடு நாம் ஒரே மக்கள் என்கிற எண்ணம் தொடர் போராட்டங்களால் மக்கள் மனதில் ஏற்படுத்தப்பட்டது.


Tuesday, June 7, 2016

maraththamizhar senai state organizer pudhumalar prabhakaran visiting card

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் வரவேற்பு அட்டை. (புதுமலர் பிரபாகரன் விசிட்டிங் கார்ட்) பயன்பாட்டாளர்களுக்காக......


புதுமலர் பிரபாகரன் முகவரி

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின்  முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்.

சு.புதுமலர் பிரபாகரன், முதுகலை., ஆய்வியல் நிறைஞர்., (வரலாறு)
மாநில அமைப்பாளர்,
மறத்தமிழர் சேனை,
12/338, திருவரங்கம் சாலை,
நேதாஜி நகர்,
பரமக்குடி- 623707.
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழர் நாடு.
அகவி : 99421 33644, 99521 33644.

pudhumalar prabhakaran address

maraththamizhar senai state organizer pudhumalar prabhakaran address.

S.Pudhumalar Prabhakaran, M.A., M.Phil., (History)
State Organizer,
Maraththamizhar Senai,
12/338, Thiruvarangam Salai,
Nethaji Nagar,
Paramakudi- 623707.
Ramanathapuram -District,
Thamizhar Nadu.
Cell No: 99421 33644, 99521 33644.

Sunday, May 1, 2016

இராமநாதபுரத்தில் சிங்கம் கூட்டணி வேட்புமனு தாக்கல்

மறத்தமிழர் சேனை, அகில இந்திய பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, தீ அமைப்பு ஆகியவைகள் இணைந்து சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்க பார்வர்ட் பிளாக் கட்சியின் சிங்கம் சின்னத்தோடு  'சிங்க கூட்டணி' அமைத்தது.


சிங்க கூட்டணியின் சார்பில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் மு.செந்தூர் பாண்டியன் அவர்கள் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு கடந்த 29-04.2016 அன்று நண்பகல் 1.45 மணியளவில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மறத்தமிழர் சேனை, தேசிய மறுமலர்ச்சி இயக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக வந்து இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்

Friday, April 22, 2016

சிங்க கூட்டணி சிங்கம் சின்னத்தில் அமைக்கப்பட்டது

தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை நோக்கி முரண்பாடான பல கூட்டணிகளை உருவாக்கி பிரச்சாரத்தை துவக்கிவிட்ட நிலையில் தேவரின கட்சிகள் தங்களுக்குள் கூட்டமைப்பு ஏற்படுத்தி தனித்து நிற்பதென முடிவெடுத்து மதுரை அ.இ.மூ.முன்னணி கழக அலுவலகத்தில்  21.04.2016 அன்று அனைத்து கட்சிகள் கூட்டத்தை நடத்தியது.

Thursday, February 11, 2016

மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை திறக்கப்பட்டது


பெரிய மறவர் நாடு என வரலாறு போற்றும் இராமநாதபுரம் சீமையானது தனது வரலாற்றை செங்குருதியால் எழுதிக்கொண்டு, மரணத்திற்கு அஞ்சாத பல மாமறவர்களை தந்திருக்கிறது. அப்படிதான் 1760 ஆம் வருடம் மார்ச்-30 இல் பிறந்த முத்து விஜயராஜ முத்துராமலிங்க சேதுபதி தமது 12 வயதில் இராமநாதபுரம் மறவர் சீமையின் மன்னராக முடிசூட்டப்பட்டவர் ஆவார். ஆங்கிலேயர்கள், நவாபுகளின் கட்டற்ற வணிகத்தை முடக்க விற்பனை வரி, சுங்கவரி விதித்தவர், அந்நிய மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்ததன் விளைவாக 2-06-1772 இல் தனது தாயார், சகோதரியோடு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பத்தாண்டுகள் சிறையிலேயே வாடிய மன்னரின் தாயார் சிறையிலேயே மரணமடைந்தார்.


மறவர் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியதும் அஞ்சிய ஆங்கிலேயர்கள் 1782 இல் மன்னரை விடுதலை செய்தனர். மீண்டும் நல்லாட்சி செய்யத்துவங்கிய இவரது காலத்தில்தான் உலகப்புகழ் பெற்ற இராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரம் கட்டப்பட்டது. அதனைப்போலவே கடுகு சந்தை, தேவிபட்டினம், கோட்டைப்பட்டிணம் அன்னசத்திரங்கள் கட்டப்பட்டன. ஆயிரமாயிரம் பரப்பளவு கொண்ட நிலங்கள் முறையாக அளவிடப்பட்டன. மீண்டும் வலுவடையத் துவங்கிய மறவரது ஆட்சியை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் மன்னரைக் கைது செய்து திருச்சி சிறையிலும், பின்பு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் சிறை வைத்த நிலையில் 1809 வருடம் ஜனவரி 23 ஆம் நாள் சென்னை சிறையிலேயே உயிர் துறந்த மாமன்னரை ரிபெல் என மக்கள் அழைக்கத் துவங்கினர்.

  இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இராமநாதபுரம் சீமையை அரசாண்ட மாமன்னரும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து 24 ஆண்டுகள் திருச்சி, சென்னை சிறைகளில் அடைக்கப்பட்டு சிறையிலேயே உயிர் நீத்தவருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக 1990 ஜனவரி 23 ஆம் நாள் தமிழக சட்டசபையில் 181 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தமிழக அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக தொடர்ந்து கொண்டாடி வருகிறது.