★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, December 14, 2015

வேலுநாச்சியார் நினைவு நாள் - வீரமங்கையர் தினம் - மறத்தமிழர் சேனை கோரிக்கை.

மறத்தமிழர் சேனை இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காலை 10.00 மணியளவில் பரமக்குடியில் மாவட்ட செயலாளர் ம.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி ஒன்றிய செயலாளர் வ.முருகன் வரவேற்புரை ஆற்றிட மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சே.சேகர் முன்னிலை வகித்தார்.

மாநில தலைவர் புதுமலர் பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர்-25 அன்று சிவகங்கை ராணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 219 நினைவு நாளை சிவகங்கையில் சிறப்பாக கொண்டாடுவது எனவும், அவரது நினைவு நாளை வீரமங்கையர் தினமாக மத்திய அரசு அறிவித்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழக அரசின்  சார்பில் வீரதீர செயல் புரியும் பெண்களுக்கு வேலுநாச்சியார் பெயரில் விருது வழங்கிடவும், ஏழ்மையில் வாடும் வேலுநாச்சியார் வம்சா வழியினருக்கு மாதாந்திர பென்ஷன் வழங்கிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.


கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ம.முருகன், பரமக்குடி நகர் இளைஞர் அணி செயலாளர் மு.பிரபாகரன், பரமக்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மா.பாலமுருகன், முத்தருள், கவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பரமக்குடி நகர் செயலாளர் இ.மலைமேகம் நன்றியுரை ஆற்றினார்.