★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, November 29, 2010

மறவர் அரசியல் உரிமை மாநாடு 18.07.2010

றத்தமிழர் சேனை கட்சி இராமநாதபுரம், மண்டபம் ஒன்றியங்களின் சார்பில் 18-07-2010 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இராமநாதபுரம் வெங்கடேஸ்வரா மஹாலில் “மறவர் அரசியல் உரிமை மாநாடு மற்றும் முனைவர் ந.இராசையா படத்திறப்பு விழா” நடைபெற்றது.

மறவர் அரசியல் உரிமை மாநாட்டிற்கு மறத்தமிழர் சேனை கௌரவத் தலைவர் முகவைத்தம்பி இ.கணபதி தேவர் அவர்கள் தலைமை வகித்தார். ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்கத்தலைவர் சி.சுந்தரசாமித்தேவர் அவர்கள் முன்னிலை வகித்தார்.

கீழத்தூவல் நினைவேந்தல் 2010 - வேங்கைகள் வீரவணக்க நாள்

1957 ம் வருடம் கீழத்தூவல் ( keezhaththooval ) மண்ணில் காமராஜ் நாடாரின் வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட கீழத்தூவல் வேங்கைகள் ஐவருக்கு  53 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம் 14.09.2010 அன்று மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தலைமையில் கீழத்தூவல் கிராமத்தில் நடைபெற்றது. 

கிராம பொதுமக்களின் சார்பில் காலை 10.00 மணியளவில் இறந்துபோன ஐவரின் நினைவாக முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் கட்டப்பட்டுள்ள நினைவுத்தூன் அருகில் பொங்கல் வைத்து, தேங்காய் பழம், மாலைகளோடு  வழிபாடு நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த இளைஞர்கள் பெருந்திரளாக 'நினைவு ஜோதி' எடுத்து ஓடி வந்தனர்.  கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tuesday, August 24, 2010

மறவர் மண்ணுரிமை மாநாடு

றத்தமிழர் சேனை சார்பில் மறவர்களின் மரபுரிமை சொத்தான கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி இராமேஸ்வரம், பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நகரில் 21-08-2010 சனிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் மறவர் மண்ணுரிமை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இராமேஸ்வரம் வேர்கோடு, தேவர் நகர் பகுதி பொதுமக்கள் தூரி முனியசாமித்தேவர் அவர்கள் தலைமையில் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மறத்தமிழர் சேனை மாநில பொருளாளர் இ.ரவிராஜ சேதுபதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.