★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, August 31, 2012

கமுதியில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாளி அடித்து கொல்லப்பட்டார்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற  தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி (வயது 70) இவர் கமுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் ருக்குமணி இவர்களுக்கு 2 மகன், 5 மகள்கள் உள்ளனர்.

வெள்ளைச்சாமி தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று அதிகாலையில் வெள்ளைச்சாமி வாக்கிக் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். பின்பு அவர் வீட்டில் இருந்தபோது மேலராமநதியை சேர்ந்த தனசீலன் (வயது 42) என்பவர் வந்தார். அவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெள்ளைச்சாமியை வெட்டினார். அவர் கூச்சல் போட்டு அலறினார். அலறல் சத்தம் கேட்டு மனைவி ருக்குமணி ஓடிவந்தார். அவரையும் தனசீலன் அரிவாளால் வெட்டினார்.

சரமாரியாக வெட்டுப்பட்ட வெள்ளைச்சாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். இதற்கிடையில் வெள்ளைச்சாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இதை அறிந்ததும் தனசீலன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.  ஆனால் அவர்கள் தனசீலனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவரும் பரிதாபமாக  இறந்தார்.


இதுபற்றிய தகவல் கமுதி போலீசாருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த வெள்ளைச்சாமி-தனசீலன் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

முன்னாள் எம்.எல்.ஏ. கொலை செய்யப்பட்ட சம்பவம் கமுதி முழுவதும்  பரவியது. அங்கு ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனால்  அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Monday, August 27, 2012

மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 297 வது பிறந்தநாள் விழா

அருப்புக்கோட்டை ஒன்றிய , நகர மறத்தமிழர் சேனை சார்பாக நெற்கட்டும்செவ்வேல் மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 297 வது பிறந்தநாள் விழா வருகின்ற செப்-1 அன்று அருப்புக்கோட்டை, மதுரை ரோடு, ராமலிங்கா சமுதாய கூடத்தில் மாலை 5.௦௦ மணியளவில் நடைபெறுகிறது.

பிறந்தநாள் விழாவிற்கு அருப்புக்கோட்டை நகர செயலாளர் ச.லட்சுமணபாண்டியன் அவர்கள்  தலைமை தாங்குகிறார். விழாவில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள்,  தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை தலைவர் எஸ்.ஆர்.தேவர் அவர்கள்,  தமிழக மக்கள் பார்வர்ட் பிளாக் தலைவர் Dr.சு.மனோகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.


விருதுநகர் மாவட்ட செயலாளர் மு.ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வகிக்க, அருப்புக்கோட்டை நகர தலைவர் ம.இராமலிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்கள். கூட்டத்தில் மாநில துணைப்பொதுச் செயலாளர் T.R.K.மணிகண்டன் அவர்கள், மாநில இளைஞர் சேனை  செயலாளர் ம.கார்த்திக் அவர்கள், மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன் அவர்கள், மாநில தொண்டர் சேனை செயலாளர் பசும்பொன் மு.முத்துகுமார் அவர்கள், விருதுநகர் மாவட்ட இளைஞர் சேனை  செயலாளர் மு.நாகேந்திரன் அவர்கள், விருதுநகர் மாவட்ட இளைஞர் சேனை  தலைவர் மு.சுப்பிரமணி அவர்கள், விருதுநகர் மாவட்ட மாணவர் சேனை செயலாளர் ம.மாரீஸ்வரன் அவர்கள், விருதுநகர் நகர் செயலாளர் சு.ஹரிபாஸ்கர் அவர்கள், கலந்து கொள்கிறார்கள்.

அருப்புக்கோட்டை நகர் பொருளாளர் ஜெ.செந்தில் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்கள்.



விழா ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் சு.சரவணன் அவர்கள் , நகர இளைஞர்சேனை தலைவர் ப.சதீஸ்குமார் அவர்கள், நகர இளைஞர்சேனை செயலாளர் எம்.சரவணபாண்டி அவர்கள், ஒன்றிய இளைஞர்சேனை செயலாளர் ர.பாண்டியராஜன் அவர்கள் செய்கிறார்கள்.