★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Thursday, August 25, 2011

வேங்கைகள் வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம்

1957 ம் வருடம் கீழத்தூவல் ( keezhaththooval ) மண்ணில் காமராஜ் நாடாரின் வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட கீழத்தூவல் வேங்கைகள் ஐவருக்கு  வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற உள்ளது.

செப்-14 மாலை 4 .00 மணியளவில் நடைபெறுகின்ற பேரணியிலும், மாலை 6.00 மணியளவில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்திலும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் P.V.கதிரவன் அவர்கள், திரைப்பட நடிகர் கருணாஸ் அவர்கள், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள், பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி அவர்கள், தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை தலைவர் எஸ்.ஆர்.தேவர் அவர்கள்,  தமிழ்நாடு தேவர் பார்வர்டு பிளாக் தலைவர் இரா.ஜெயச்சந்திர தேவர் அவர்கள், தேவர் தேசிய பேரவை தலைவர் K.C.திருமாறன் அவர்கள்,வீரகுல அமரன் இயக்க தலைவர் கி.இரா.முருகன் அவர்கள், முக்குலத்தோர் எழுச்சி கழகம் தலைவர் V.K.கவிக்குமார் அவர்கள், வீரத்தமிழர் முன்னணி தலைவர் மு.இரா. சிறுவயல் ரமேஷ் அவர்கள், கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.

Saturday, August 20, 2011

மறத்தமிழர் சேனை



வாழ்க தேவரினம்!
வளர்க நம் தேவர் சமுதாய வீரமக்கள்!.

மணிடமண்டபம் கட்டும் மறத்தமிழர் சேனை... தடுக்கப்புறப்படும் தலித் அமைப்புகள்! உச்சகட்ட டென்ஷனில் முதுகுளத்தூர்

தமிழ்நாட்டு அரசியல், சமூக வரலாற்றில் 1957-ல் நடந்த முதுகுளத்தூர் சாதிக் கலவரம் முக்கியமானதாகும். இம்மானுவேல் சேகரனின் கொலையைத் தொடர்ந்து நடந்த அந்தக் கலவரத்தை அடக்க காங்கிரஸ் அரசு பல வழிகளில் முயன்றது.

அதன் ஒரு கட்டமாக, கொலையாளிகளைத் தேடி நாலாபுறமும் போலீஸ் படைகள் புகுந்து புறப்பட்டன. 1957, செப்டம்பர் 14&ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள் கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்த போலீஸார், தவசியாண்டித் தேவர், ஜெனநாத தேவர், முத்துமணித் தேவர், சித்திரவேல் தேவர், சிவமணித் தேவர் என்ற ஐந்து இளைஞர்களை அந்த ஊர் கண்மாய்க்குள் அழைத்துச் சென்று அவர்களின் கண்களைக் கட்டி கருவேல மரத்தில் கட்டி வைத்து சுட்டுக் கொன்றார்கள்.

இளவட்டக்கல்


இளவட்டக்கல்
இது ஒரு திறன் சோதிக்கும் விளையாட்டாகும். மறவர் இனத்தவர் மணவினை கொள்வதற்கு
இவ்விளையாட்டைப் பயன்படுத்துவர். முறைப் பெண்ணினைத் திருமணம் செய்வதற்கும்
விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் இத்திறன் சோதிக்கும் விளையாட்டு
தேர்வு நிலையாக உள்ளது. ஒரு பெண்ணினைப் பலரும் விரும்புவர். அப்போது பெண்ணின்
தந்தை’யார் இளவட்டக் கல்லினைத் துக்கி உயர நிறுத்துகிறாரோ? அவருக்கு என்
பெண்ணைத் தருவேன்’ என்று அறிவித்து விடுவார்.


விழாக்காலத்தில் ஊருக்குப் பொதுவான இடத்தில் இதற்கான போட்டி நடைபெறும்.
போட்டியில் கலந்து கொள்பவர் இளவட்டக் கல்லைத் துக்கித் தலைக்கு மேலே
பிடித்துக் கீழே போட வேண்டும். இவ்வாறு செய்தவர் வென்றவராகக் கருதப்படுவார்.
கிராமத்துப் பெரியவர் இதற்குப் பஞ்சாயத்துக்காரராக முன்னிற்பார். இவர் கூறும்
நடுநிலைத் தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். பண்டைக் காலத்திய மக்களுக்குக்
கையினால் பெரிய கல்லினைத் துக்குவதும் நகர்த்துவதும் வாழ்க்கையோடு சேர்ந்த
தேவையாய் இருந்தது. நாகரிக வளர்ச்சியில் அத்தேவை இல்லாமல் போகவே, அதுவே
உடல்திறன் காட்டும் விளையாட்டாக வளர்ந்தது.
மறவர் இனத்தவர் பணம், நகை போன்றவைகளை முதன்மையாக கருதுவது இல்லை. பெண்ணை
மணந்து கொள்கின்றவன் உடல்திறன் உடையவராக இருக்க வேண்டுமென்பதையே விரும்புவர்.
அவ்வடிப்படையில் இன்றளவும் அவர்களிடையே நிலை பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் மதுரை மாவட்டத்திலும் அதன் சுற்றுபுறங்களிலும் இவ்விளையாட்டு நிலவி வருகிறது.

Monday, August 15, 2011

கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்ற முயற்சி; நிர்வாகிகள் கைது

ந்திய நாடு தமது 65 வது சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த அதே  தருணத்தில் நமது "தேசிய கொடியை" கச்சத்தீவில் ஏற்ற இராமேஸ்வரம் நகரில் ஊர்வலமாக  சென்ற மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி, இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் பல்லடம் அண்ணாதுரை ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கச்சதீவை நோக்கி கோஷமிட்டபடி புறப்பட்ட பொழுது தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

    உடன் வருகைதந்த இயக்கத்தின் முன்னணி நிர்வாகிகள் உட்பட 200 பேர் கைதுசெய்யப்பட்டு திருமண மகாலில் தங்க வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப் பட்டனர்.


Sunday, August 14, 2011

மறவர்களின் உரிமை; கச்சதீவை கைப்பற்றுவோம்

 மறவர்களின் மரபுரிமை சொத்தான கச்சத்தீவை கைப்பற்றுவது நமது தலையாய கடமைகளில் ஒன்றாகும். எனவே இந்திய தேசம் 65 வது சுதந்திர தினம் கொண்டாடிக்கொண்டிருக்கிற அந்த தருணத்தில் நமது "தேசிய கொடியை" கச்சத்தீவில் ஏற்றுகின்ற போராட்டத்தை அறிவித்துள்ளோம். 

இன மானம் போற்றுகின்ற என் உயிர் பங்காளிகளே !
உணர்வோடு அணிதிரண்டு வாரீர்!

Monday, August 8, 2011

மருது பாண்டியர்




      Thadagam - Trotsky Marydhu - Vaarapur Valari
    என் தந்தை புரட்சியாளர் டிராட்ஸ்கியின் இயக்கம் சார்ந்தவர் என்பதால் புரட்சியாளர்களைகப் பற்றி அரிய புத்தகங்களை நிறைய சேகரித்து வைத்திருந்தார். எங்கள் இளம் வயதிலேயே அவற்றை நாங்கள் படிக்கத் தூண்டுவார். குஞ்சலி மரக்காயர் , திப்பு , கான்சாகிபு கம்மாத்தான் , புலித் தேவர் , மருது பாண்டியர் , கட்டபொம்மன் போன்றவர்கள் பற்றிய சிறு சிறு புத்தகங்களை எங்களுக்கு அளிப்பார். திப்புதான் அப்போதைய என் இளம் வயது “HERO”. 

பின்பு என் குடும்பத்தோடும் கல்லூரி மாணவர்களோடும் இம்மாதிரியான மனிதர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது அப்போது மகிழ்வான ஒன்று. இப்போதும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையேனும் திப்புவின் கல்லறை செல்வது வழக்கம். 

மருது பாண்டியர்

மருது பாண்டியர்கள்.இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்.
ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. மொக்க பழனியப்பர் சிறந்த பக்திமானாகவும் வீரராகவும் திகழ்ந்தார். இவர் சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவர்களான பெரியமருதுவும் சின்ன மருதுவும் எதற்கும் அடங்காதவர்களாகவும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர் . தாயார் பொன்னாத்தாள் அவர்களுக்கு வீரர்களின் வரலாற்றை சொல்லி துணிவையும்

தொண்டைமான் செப்பேடுகள்


எழுத்தாளர் / தொகுப்பாளர் : இராசு.செ
பதிப்பு :முதற் பதிப்பு (2004)
விலை :70 .00  In Rs
பிரிவு :தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் :232
பதிப்பகம் :தமிழ்ப் பல்கலைக்கழகம்
முகவரி :திருச்சி சாலை
தஞ்சாவூர்   613005
தமிழ்நாடு
இந்தியா
புதுக்கோட்டை, அறந்தாங்கி தொண்டைமான்கள் செப்பேடுகள் 48 ( 24 + 24 )அடங்கியுள்ளது. மாணிக்கவாசகர் அருள் பெற்ற திருப்பெருந்துறை பற்றிய 10 செப்பேடுகள் உள்ளன. மாணிக்கவாசகரை எழுந்தருளச்செய்து, பின்னே திருவாசகம் ஓதிச் சென்றதை ஒரு செப்பேடு கூறுகிறது. முதல் முறையாக அறந்தாங்குத் தொண்டைமான் அரச மரபு விளக்கம் பெறுகிறது.

பூலித்தேவன்



ஆசிரியர்: செவல்கு
ளம் ஆச்சா
வெளியீடு: வின் வின் புக்ஸ்
பகுதி: வரலாறு 
விலை:  ரூ.30

  ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை தகர்த்தெறிந்து, நம் நாடு சுதந்திரம் பெற போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பூலித்தேவன். 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்தே ஆற்காடு நவாப்பையும், ஆங்கிலேயர்களையும் எதிர்த்து வந்தார் பூலித்தேவன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.
பாளையக்காரர்களிடமிருந்த ஒற்றுமையின்மை, திருவாங்கூர் மன்னரின் துரோகம், கான்சாகிப் யுத்தம் தென் தமிழ்நாடு ஆங்கிலேயர் வசமாவதற்கு காரணமாயிற்று.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை படித்தால், பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட நம் வருங்கால சந்ததியினர் முன் வருவர். அதற்கு இத்தகைய நூல்கள் உதவும்.
 
  

வீரன் பூலித்தேவன். poolithevar


காத்தப்ப பூலித்தேவனுக்கு ஒரு நெடியவரலாறு இருக்கிறது.சரித்திரத்தின் சுழற்சியில் வரலாற்றுக் குறிப்பு சுவடுகளின்அடிப்படையில் 1378 ஆம் ஆண்டு வரகுராம சிந்தாமணிபூலித்தேவர் தொடங்கி இந்தாண்டோடு சரியாக 633 ஆண்டுகள்ஆகின்றனவழிவழியாக ஒவ்வொரு பிள்ளைக்கும் பெயர்சூட்டுகிற போது பாட்டனின் பெயரை பேரனுக்குச் சூட்டுகிறவழக்கம் நம் நாட்டில் பல குலங்களில் உள்ள காரணத்தால்காத்தப்ப பூலித்தேவன் என்ற பெயர் தொடர்ந்து பேரன்களுக்குநான்காவது பெயராக 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதிசித்திரபுத்திர தேவருக்கும் சிவஞான நாச்சியாருக்கும்பிள்ளையாக பிறந்த மாமன்னன் தான் காத்தப்ப பூலித்தேவர்ஆவார். 11 வயதிலேயேஅரியணைக்கு வரநேர்ந்தசின்னஞ்சிறு பிள்ளையான மாவீரன்தான் காத்தப்பபூலித்தேவன். 2015 ம் ஆண்டு வந்தால் 300 பிறந்து ஆண்டுகளாகிறது.

மாவீரன் பூலித்தேவன்

முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!!
சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.இவரை மட்டும் அல்ல முக்குலத்தோரையே அப்படித்தான் செய்கிறது. 

மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன்.

பூலித்தேவனின் வீரச்சமர்

                                                                                பூலித்தேவனின் வீரச்சமர் 


“நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே”
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வீரவாழ்க்கை வாழ்ந்தவன். பாளையக்காரர்களில் கும்மிப்பாடல் தாலாட்டுப்பாடல் என பாட்டுடைத்தலைவனாக இருந்த ஒரு சிலரில் பூலித்தேவனும் ஒருவன். 1715-ல் சித்திரபுத்திரதேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் பிறந்து நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பாளையக்காரனாக மாறினான். தனது 35வது வயதிலிருந்து 52 ம் வயது வரை ஆற்காட்டு நவாபு படைகளையும். கும்பினியர்கள் படையையும் எதிர்த்துப் போராடினான்.
1736-ல் மதுரைநாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாளையங்கள் திறை செலுத்த மறுத்து தனித்தே செயல்பட ஆரம்பித்தன. மதுரையை வெற்றிகொண்ட ஆற்காட்டு நவாபு முகமது அலி தனது சகோதரன் அப்துல் ரஹீம் என்பவன் தலைமையில் 1751-ம் ஆண்டு 2500 குதிரைப் படைகளையும் 300 காலாட்படைகளையும் 30 ஐரோப்பியர் பட்டாளத்தையும் அனுப்பி பாளையங்களை அடக்கி வரியை பிடுங்கிவர உத்திரவிட்டான். இப்படையை கும்பினியர் தளபதி லெப்டினட் இன்னிசு வழிநடத்திச் சென்றார். இதை அறிந்த பூலித்தேவன் சுற்றுவட்டாரப்பாளைங்களை ஒன்று திரட்டி எதிர்க்கத் தயாரானான். படை கண்டு அடங்கி கப்பம் கட்டுவார்கள் என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு பூலித்தேவனின் படைபலம் கண்டு பின்வாங்கிச் சென்றனர்.

கள்ளர் குல பேரரசி செம்பியன் மாதேவியார்.


செம்பியன் மாதேவி

பெருமை வாய்ந்த சோழ வம்சத்தின் மருமகளான செம்பியன் மாதேவியாரும் தம் காலத்தில் ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தன், முதல் மகனான ராஜாதித்தன் போரில் உயிர் துறந்தபின் கண்டராதித்த சோழன் கி.பி. 953ல் அரியணை ஏறினார். இவரின் மனைவியே மழவராயர் குடும்பத்தில் பிறந்த செம்பியன் மாதேவியார்.இவர்களுக்குப் பிறந்த மகனே மதுராந்தக உத்தமசோழன். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்தான். மகனை வளர்க்கும் பொருப்பு செம்பியன் மாதேவியாரைச் சேர்ந்தது. கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 - 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

Thiyagaraja Kaduvettiyar


Thiyagaraja Kaduvettiyar photo

Picture


Veeriya Vandaiyar

 Rao Bahadur Sri. A. Veeriya Vandayar, popularly known as Poondi Vandayar, was a Pilanthropist, Founder of Sri Pushpam College- Poondi and Long-standing Leader for Kallar Mahajana Sangam.Early Life.
Veeriya Vandayar was born in 1899 at Poondi in Tanjure District, Tamilnadu. In the Royal Family of Poondi.

Picture

Social Welfare
Vandayar Founded 
Sri Pushpam College in 1956, at that time there were no College for technical education in Tanjure, except Kudanthai  Arasu  Kalluri, he started college for the upliftment of economically backward people, Late Rao Bahadur Sri. A. Veeriya Vandayar after visiting European countries established the college with a vision of new ideas. The institution is named after the family deity Sri Pushpa Vaneswara. This college named after him is a fitting tribute paid to the beacon light to shatter the ignorance of the rural mass. The entire family members are serving the society in this area for the upliftment of economically backward people.Social Welfare
He was the Long-standing Leader for 
Kallar Mahajana Sangam until it was merged intoMukkulathor Sangam, he led nationwide campaigns for upliftment of his society and economically backward people.Death
Till death he served for 
economically backward people, his Society and poors, he died on 1970 in Poondi, Tanjure.

N.P.Manicham

PictureN.P.MANICHAM N.P. Manicham Errthaandaar (ந.பா.மாணிக்கம் ஏற்றாண்டார்), popularly Known as Makkal Thondar Manichanar, was a Major Philanthropist, Poprietor-Editor of Urimai Murasu Weekly magazine, Founder of Mukkulathor School, Tamilnadu Manavar Illam, Parimanam Primary School and General secretary of Mukkulathor Sangam. 
Early Days
N.P. Manicham Errthaandaar was born in 1917 at Errthandar Patti, also known as Natarajapuram, a Small Village in Trichirapalli District, Tamilnadu, to Parimanam Errthandar and Unnamalai Ammal in a Kallar Landlord Family. 

For his higher secondary education he joined in ER Higher Secondary School, those days there were only Brahmin students studying in ER school, some of his Collogues (From Brahmin Society) have asked him why he has to study while he has more wealth and vast agricultural land. Manichanar was upset because of there behavior, This discriminatory attitude made him moved to Government Higher Secondary school Lalgudi, and Become Close Friend to Anbil P. Dharmalingam, during school days itself he provided food for the poors, then he and Anbil P. Dharmalingam have Started Kallar Hostel (Kallar Manavar Viduthi) in Lalgudi for Poors, Mr. Chandrahassan I.A.S, Former Leader- Raja Rajan Kalvi Panbattu Kalagam (Official organization for Kallars) was also staying in that Hostel. 

பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார்

காலத்தால் அழியா புகழ் பெற்ற கள்ளர் சரித்திர நாயகன்ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
தமிழக மக்களால் நாட்டர் ஐயா என
பாசமுடன் அழைக்கப்படும் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார்.அவர்கள் தஞ்சைமாவட்டத்தில்திருவையாற்றுக் கருகிலுள்ள  நடுக்காவேரி என்னும் சிற்றூரில் கள்ளர்குலத்தோன்றலாகிய வீ. முத்துச்சாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும்நன்மகனாய்12-04-1884 
இல் பிறந்தார்.Picture

இலக்கியங்களையும் சைவ சித்தாந்த நூல்களையும் ஐயம்திரிபரப்பயின்றுமதுரை தமிழ் சங்கம் நடத்திய பிரவெச பண்டிதம்பால பண்டிதம்பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் மூவாண்டில் (1905, 1906, 1907)முறையாகஎழுதி முதன்மையாக தேர்ச்சி பெற்றுமதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தபெருமாகனாராகிய பண்டித் துரை தேவர் அவர்களால்தங்கப் பதக்கக்ங்களும். தங்கத்தோடாவும் அளிக்கப் பெற்றுப் பெருமை அடைந்தார்கள்.தாமே பயின்ற தமிழ்பேராசிரியரின் அறிவாற்றலை அறிந்து அவரைப் ப்ணிபுரிய அழைத்த கல்வி நிருவனங்கள்பல.கோயம்பத்தூர் தூய மைக்கேல் மேல் நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக ஒரு ஆண்டும்திருச்சி பிஷப் கல்லூரியில்தலைமை தமிழ் பேராசிரியரரக 24 ஆண்டுகளும்  அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் தமிழ பேராசிரியராக ஆண்டுகளும் பணி புரிந்து ஒய்வு பெற்றார்.பின் தமிழ் வேள் உமா மகேஸ்வரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தை புலவர் கல்லூரியில்ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணி செய்துசிரப்பித்தார்கள்.

தேவர் குல மரபு எது ?

மறத்தமிழர் சேனை இயக்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கை 

                                                                 தேவர் குல மரபு 


மரணமடையாமளிருப்பதால் வாழ்ந்து கொண்டிருக்கிற பலரை பார்க்கும்
போது எதையுமே தீர்மானிக்க முடியவில்லை.  தங்களுக்கு ஒரே ஒரு முறை  
கிடைத்த  இந்த மகத்தான வாழ்க்கையை நன்கு அனுபவித்து, வேறெந்த 'வலி'களுமின்றி இறந்து போகலாமென எண்ணுகின்றார்கள் போலும். மண்ணுலகைவிட்டு நீங்கி பல நூற்றுஆண்டுகளாகியும் வாழ்ந்து கொண்டிருக்கும் 'அவர்களைப்' பற்றிய நினைவு இவர்களுகேது ? சாவு பற்றிய பயமே , வாழ்வை இறுகப் பற்றிக் கொள்ளச்செய்கிறதோ!  ஒரு யுத்தத்தை வென்றவர்களில் சிலர் அரியணைக்கும் வேறு சிலர்  சிறைச்சாலைக்கும்
போவார்கள் . இது உலக நியதேயே ! சிறைச்சாலைகளின் 'நெடிய துயரங்களை '
எண்ணி போரைத் துறக்கும் மரபினர் அல்ல நாமனைவரும் .

Sunday, August 7, 2011

மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”
இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.

வீரத்திலகம் வேலுநாச்சியார் (1780-1789)

மறத்தமிழர் சேனை இயக்கத்தின் அதிகாரபூர்வ கட்டுரை 

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள 'சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி - கேள்விகளில் சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார் போர்க்களம் சென்று, வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார். அவர் ஒரு சிறந்த வீராங்கணையாக உருவாக்கப்பட்டார். சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கு, வேலுநாச்சியார் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார்.

Friday, August 5, 2011

மறவர் முன்னேற்ற சங்க 4 ஆண்டு துவக்கவிழா

மறவர் முன்னேற்ற சங்க 4 ஆண்டு துவக்கவிழா புகைப்பட காட்சிகள்



மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்துகின்றனர்.

மாட்சிமை தங்கிய இராமனாதபுரம்  மன்னர் ந.குமரன்சேதுபதி அவர்கள் விழாவிற்கு வருகைதருகிறார். உடன் எஸ்.ஆர்.தேவர், புதுமலர் பிரபாகரன, வீ.கே. இராமசாமி தேவர்.

Tuesday, August 2, 2011

சமூக நினைவுகளும் வரலாறும்

                                                                             சமூக நினைவுகளும் வரலாறும்
                                                                                          ஆ.சிவசுப்பிரமணியன்

சமூகத்தின் வரலாறு என்பது பல்வேறு வகைமைகளாகப் பார்க்கத்தக்கது. இதில் பண்பாட்டு வரலாறும் ஒன்றாகும். பண்பாட்டு வரலாற்று வரைவிற்கான தரவுகளில் ஒன்றாக ‘சமூக நினைவு’ அமைகிறது. பீட்டர் பர்க் என்பவர் ‘சமூக நினைவாக வரலாறு’ (History as social memory) என்று இதைக் குறிப்பிடுவார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு எப்படி அச்சமூகத்தின் நினைவுகளில் வாழ்கிறதோ அதுபோல் ஒரு குறிப்பிட்ட ஆட்சி மரபின் செயல்பாடுகளும் சமூக நினைவாகத் தொடர்கின்றன. இந்நினைவானது அடித்தள மக்களின் வரலாற்று வரைவிற்குப் பெரிதும் துணைநிற்கும் தன்மையது.

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி

வீரமும் மானமும் விஞ்சியவர் தமிழ் மறவர். இவர்களது தொன்மையையும், வாழ்க்கைச் சிறப்பையும் சங்க இலக்கியங்களான அகநானுhறு , புறநானுhறு, நற்றினை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை ஏற்றிப் போற்றுகின்றன. விழுடககொடை மறவர், பினைகழல் மறவர், பெருந்தொடை மறவர் என்பன அந்த இலக்கியங்கள்மறவர்களுக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள்.

எதிரி எமனாக இருந்தாலும் அவனை அழித்து ஒழிப்பவர் மறவர் என, பகை என கூற்றம் வரினும் தொலையான் என்பது மறவர்களுக்குக் கூலித் தொகை கூறும் கட்டியமகும். பத்தாம் நுhற்றாண்டில் சோழர்கள் பெரும் நிலை எய்துவதற்கும், பதின்மூன்றாம் நுhற்றாண்டில் பிற்காலப் பேரரசர்களாகப் பாண்டியர் பெருமிதம் கொள்வதற்கும் அரசப்படையாக நின்று உதவியவர்கள் இந்த மறவர்கள். இவர்கள் மிகுதியாகவும் தொகுதியாகவும் வாழ்ந்த நாடு (இன்றைய இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகள்) மறவர் சீமை என வாலாற்றில் குறிக்கப்படுகிறது.
இவர்களது மூத்தகுடிமகனான மறவர் சீமை மன்னர், ” புனித சேது காவலன்” என வழங்கப்பட்டார். கி.பி. பதினைந்தாம் நுhற்றாண்டு முதல் தமிழ்மொழிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள மகத்தான பங்கு காலத்தால் மறைக்க முடியாதது. அவர்களது வீரம், கொடை, புலமை ஆகியவற்றைப் போற்றும் இலக்கியப் படைப்புகளும் தனிப் பாடல்களும் ஏராளம். அவர்களிடமிருந்து முத்தமிழ் புலவர்களும், கலைஞர்களும் பெற்ற ஊர்களும், மான்யங்களும் இன்னும் மிகுதியானவை.
இத்தகைய புகழுக்குரிய வரலாற்று நாயகர்களான சேதுமன்னர்கள் இந்திய நாட்டு விடுதலை வேள்வியிலும் தங்களது முத்திரையைப் பதித்துச் சென்று இருப்பது நம்மையெல்லாம் வியக்க வைக்கின்றது.

சேதுபதி மன்னர்கள் வரலாறு

வகை:பொது
எழுத்தாளர்:பேரா. புலமைவேங்கடாசலம்
பதிப்பகம்:பாவை பப்ளிகேஷன்ஸ்
ISBN :81-7735-831-6
Pages :85
பதிப்பு :1
Published Year :2010
விலை :ரூ.40 


சேதுபதி மன்னர்கள் மறவர் இனத்தில் தோன்றிய மன்னர்கள் ஆவார்கள். இவர்கள் தென்பாண்டிச் சீமையில் புகழ்வாய்ந்த நிலையில்

மறவர் படையின் வீர மிகுதி -குறள்

குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
விளக்கம் : பகைவரே! இதற்குமுன் என் தலைவனது வலிமை அறியாமல் அவனுக்கு எதிர் நின்று போரேற்று இறந்த பின்பு நடுகல்லில் நின்ற மறவர் பலராவர் ஆகையால் நீவிரும் அங்கனம் நடுகல்லில் நில்லாமல் உம் உடலோடு நிற்க விரும்பினால் என் தலைவன் எதிரே போரேற்று நிற்காதீர்.

தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா, ஒரு கண்ணோட்டம்.

வரலாறு காணாதபடி, பெரும் பனிப்பொழிவு ஆட்கொண்ட பூமியில், இளவேனிற் காலம் திரும்பியிருந்தது. கூடவே, மலையெனக் குவிக்கப்பட்ட பனிப்பொழிவும் முழுவதுமாய்க் கரைந்து விட்டிருந்தது. குளிரில்லாத இதமான காற்று தழுவிய நேரமது; பிற்பகல் சரியாக மணி இரண்டு!!

மேரிலாந்து மாகாணத்தில் இருக்கும் கொலம்பியா நகரம். அமெரிக்காவிலேயே முனைவர்கள் அதிகமாக வாழும் ஊர் இதுவாகத்தான் இருக்கும்! அந்நகரத்தின் மைய நூலகத்தில் தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனாருக்கு நூற்றாண்டு விழாவும், புறநானூற்றுக் கருந்தரங்க நிகழ்ச்சியும்.

Monday, August 1, 2011

மறவர் உறவு முறை








எழுத்தாளர் / தொகுப்பாளர் : சின்னத்தம்பி.எம்.ஏ
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூன் 2002)
விலை : 150 .00  In Rs
பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 368
ISBN :
பதிப்பகம் : இளவழகன் பதிப்பகம்
முகவரி : 16, முதல் தளம்ஞ இரண்டாவது தெரு

பாலாஜி நகர்

சென்னை   600014

இந்தியா
உறவுமுறையானது, தனது வீச்சையும் வீரியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்ற காலமிது. மரத்தை மண்ணோடு சேர்த்துப் பிடித்து பிணைத்துக் கொண்டிருக்கும் ஆணி வேராகவும், பக்க வேர்களாகவும் உற்றார் உறவினர், குடும்பத்தைச் சமூகத்தோடு சேர்த்துப் பிடித்து பிணைத்துக் கொண்டிருந்த காலத்தில் உறவு முறையானது கொடிகாட்டிப் பறந்துகொண்டிருந்தது......

இராமநாதபுரமும் சிவகங்கையும் - வரலாறு.

இப்போது இராமநாதபுரம் மாவட்டமாக உள்ள பகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதி பாண்டிய நாட்டின் கீழ்த்திசைப் பகுதியாக இருந்தது. இந்த நிலப்பரப்பு மறவர் நாடு என்றும் அழைக்கப்பட்டது. மறவர் நாடு பாண்டிய பேரரசி...ன் ஆட்சிக்குள் அடங்கிய பகுதியாகவே எப்போதும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மறவர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி பாண்டியகள் என்றே சாதாரணமாக அழைக்கப்படுகின்றார்கள். சாதாரணப் பொது மக்களும் பெருமையோடு தாங்களுக்குப் 'பாண்டியர்” என்று பெயர் வைத்துக் கொள்கின்றார்கள். மறவர் நாடு பிற்காலத்தில் 'சேதுநாடு” என்றழைக்கப்பட்டது. 'சேது” என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு புராண காலச் செய்தி ஒன்று உள்ளது. 'சேதுநாடு” என்று அழைக்கப்படும் இன்றைய இராமநாதபுரம் இராமாவதாரத்தோடு பெரிதும் இணைத்துப் பேசப்படுகிறது. இராவணனின் நாடாக இருந்த இலங்கைத் தீவுச் சீதாதேவி சிறை அடைக்கப்பட்டிருப்பதை அனுமார் வழியாக தெரிந்து கொண்ட இராமபிரான் அங்கு செல்ல வேண்டிச் சுக்கீரவனின் வானரப் படைகளைக் கொண்டு பாலம் அமைத்தார். அந்தப் பாலத்திற்குத் திருவணை என்றும் 'சேது” என்றும் பொருள் உள்ளது. அந்தப் புனிதமான பாலத்திற்கு சேதுவிற்கு பொருத்தமான காவலர்களை நியமிக்க நினைத்தாராம் இராமபிரான். அச்சமயம் அந்த பகுதியில் வீரத்தோடு விளங்கிய மறவர்குலத் தலைவர் ஒருவரை நியமித்தார். அவருக்கு சேதுபதி என்று பெயராகி வந்ததாம். அப்படிப்பட்ட புனிதமான வழியில் வந்தவர்கள் சேதுபதிகள் என்று புராண கால வழி வந்த செய்திகள் கூறுகின்றன. இந்த சேதுபதி மரபினருக்கு 'திருவணை”க் காவலன் என்ற பெருமைக்குரிய பெயரும் உண்டு. இராமபிரானுக்கு பாலம் கட்ட உதவி செய்து வானரர்கள் கட்டிய பாலத்திற்குக் காவல் உதவி சேது என்ற பாலத்தைக் காத்து, சேதுபதி திருவணைக் காவலன் என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றது என்பது எல்லாம் புராண காலச் செய்திகள் என்று சொல்பவர்களும் உண்டு. மதுரையை ஆட்சி செய்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் வரலாற்று ஆவணங்கள் இராமநாதபுரம் சீமையை ஆண்ட அரசர்களை சேதுபதி என்றே அழைக்கின்றனர்.

அஞ்சா மறவர்

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். 


  • குறள் எண் : 778




  • அதிகாரம் : படைச்செருக்கு




  • இயல்: படையில்




  • பால் : பொருட்பால்







  • திரு மு.வரதராசனார் உரை

    போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.







  • திரு மு.கருணாநிதி உரை

    தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.




  • திரு சாலமன் பாப்பையா உரை

    போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.




  • திரு.பரிமேலழகர் உரை

    உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் - தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும்,'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.)








  • மறவர் maravar

     செங்கை மறவர் என்ற பாடலைப் பற்றி பார்ப்போம். 

      இப்பாட்டின் பெயர் செங்கை மறவர் என்பது. சிவந்த
    கையினையுடைய மறவர் என்பது இதன் பொருள்.
    பாட்டின் கருத்து
        யானைகள் பரந்து செல்ல, விரைந்து செல்லும் குதிரைகள்
    வீரர்களோடு அணியாகச் செல்ல, கொடியுடைய தேர்கள்
    சுழன்று செல்ல, வேற்படை வீரரைக் கொண்ட காலாட்
    படையினரும் வேந்தரும் குறுநில மன்னரும் ஒருங்கே சேர்ந்து
    செல்ல, மிக்க வலிமையோடு மனம் செருக்கி வந்தான் மோகூர்ப்
    பழையன். அவனுடைய படைத்திறன் சிதையுமாறு தாக்கினர்
    சேர வீரர்கள். பகைவரின் குருதியில் நனைந்ததனால் போர்
    வீரர்களின் கைகள் சிவந்தன. வீரர்களின் மார்பிலிருந்து ஒழுகிய
    குருதி மண்ணில் பாய்ந்து மழைநீர்க் கலங்கலைப் போல்
    பள்ளம் நோக்கிப் பாய்ந்தது. பகைவரின் பிணங்கள் குவியுமாறு
    ஊர்கள் பலவற்றையும் பாழ் செய்தான் குட்டுவன். வெற்றி முரசு
    முழங்கப் பழையனின் செல்வம் முழுவதும் கெட்டொழிய அங்கு
    வாழ்ந்தோர் பலரையும் கொன்றான். கரிய கிளைகளைக்
    கொண்ட காவல் மரமான வேம்பு குட்டுவனால் வீழ்த்தப்
    பெற்றது.
        சினமிக்க போர் செய்த குட்டுவனைக் கண்டு வருவதற்காக
    நாங்கள் போகிறோம். அசையும் கூந்தலையும் ஆடும்
    இயல்பையும் கொண்ட விறலியர்களே! நீங்களும் வாருங்கள்.
    இசைப்பாட்டில் திறமை மிக்க உங்கள் சுற்றத்தார் உடையும்
    உணவும் பெறுவர்''. இவ்வாறு சேரன் கொடைச் சிறப்பைப்
    படைச் சிறப்போடு சேர்த்துப் புகழ்கிறார் பரணர். அவன்
    நாடுகளை வெல்வதே விறலியர் பாணர் போன்றவர்களுக்குப்
    பரிசு வழங்குவதற்காகத்தான் என்கிறார்.
        அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கை சிவந்து போகும்
    போதுதான் அதைச் செங்கை என்று பாராட்டுவது வழக்கம்.
    இங்குச் சேர வீரரைச் செங்கை மறவர் என்கிறார் பரணர்.
    ஆனால் அவர்களது கை பகைவரின் இரத்தத்தால் செங்கை
    ஆனது. நம் போன்ற கலைஞர்களுக்குப் பொன், பொருளை
    வாரிக் கொடுப்பதற்காகப் போர் செய்ததால் அந்தக் கை அன்றே
    சிவந்து - வள்ளலின் செங்கை ஆகிவிட்டது என்று நயமாகக்
    குறிப்பு மொழியால் சொல்கிறார். இந்தப் பாடல் செங்கை
    மறவர் என்று பெயர் பெற்றது ஏன் என்று புரிந்து கொண்டீர்கள்
    அல்லவா?
    பாட்டின் துறை முதலியன
        இப்பாட்டின் துறை விறலியாற்றுப்படை. விறலி என்பவள்
    நடனம் ஆடுபவள். வேந்தனிடம் பரிசில் பெற்ற ஒருவன்
    விறலியை நோக்கி, அவனிடம் சென்றால் இவ்வாறு நீயும்
    பரிசில் பெறலாமென்றும், எம்முடன் வந்தால் இன்னது
    பெறலாமென்றும்    கூறுவது    விறலியாற்றுப்படை ஆகும்.
    வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே.
    பாட்டின் பெயர் செங்கை மறவர்.



    -maraththamizhar senai

    மறவர் கதைப்பாடல்கள்

    ஆசிரியர்: முனைவர் மு.ஞானத்தாய்
    வெளியீடு: காவ்யா பதிப்பகம்
    விலை:  ரூ.150

     காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024. (பக்கம்: 304)
    இனவரைவியல் ஆய்வு நூல் இது. திருநெல்வேலி மாவட்ட மறவர் இனக் கதைப்பாடல்கள் பற்றியது. முக்குலத்தோரில் கள்ளர், அகமுடையார் குறித்துப் பொதுவாகவும், மறவர் பற்றிச் சிறப்பாகவும் "மறவரின் வரலாறும் வாழ்வும்' என்னும் முதல் இயல் பேசுகிறது.
    கள்ளர் சோழர் வழித்தோன்றல், அகமுடையார் சேரர் வழித்தோன்றல், மறவர் பாண்டியர் வழித்தோன்றல் எனக்குறித்து அவற்றுக்குரிய புராணம், இலக்கியம், வரலாற்றுச் செய்தி, வரலாற்று ஆய்வாளர் கருத்து என்பவற்றை ஆதாரமாகக் காட்டி எதிர்கால ஆய்வு ஆழம் காணப் பல வித்துக்கள் இவ்வியலில் ஊன்றப்பட்டுள்ளன.

    "இனவரைவியலும் கதைப்பாடல்களும்' என்னும் இரண்டாம் இயல் இனவரைவு குறித்த விளக்கம், கதைப் பாடல்களின் கதைச் சுருக்கம் என்பவற்றைக் கொண்டுள்ளது. பாடல்கள் வாயிலாக அறியலாகும் கதை நிகழ்ந்த காலம், சூழல் பற்றிய விளக்க முடிவு படிப்பவருக்கு தெளிவை தருகிறது. சீவலப்பேரி பாண்டி நாவல், திரைப்படம் என்னும் வடிவங்களில் மக்களை அடைந்திருப்பது குறிக்கப்பட்டுள்ளது. 1981ம் ஆண்டு நிகழ்ச்சிக்குப் பின் 18 ம் நூற்றாண்டின் கதை இடம் பெறுகிறது. கால வைப்புமுறை நெருடுகிறது."மறவரினக் கதைப்பாடல்களில் சமூகப் பண்பாடுகள்' என்னும் மூன்றாம் இயல் சமூகவியல் நோக்கில் ஆராயப்பட்டுள்ளது. சாதிப்பிரிவு, சிறுதெய்வ வழிபாடு, சகுனம், குறிபார்த்தல், சோசியம், தலையெழுத்து என்பவை பற்றிய மறவர்களின் வாழ்வியல், தனிமனித வாழ்வு, சமுதாய வாழ்வு என்னும் இரண்டிலும் அறியப்படும் வகை, ஆசிரியரின் ஆய்வு முயற்சி அருமைக்கு உரைகல்.

    "நாட்டுப்புற (மறவரின)க் கதைப்பாடல்களில் வரலாற்றுச் சான்றுகள்' என்னும் நான்காவதான இறுதி இயல், விடுதலைப் போரில் இவர்கள் ஆற்றிய பங்கினைப் பேசுகிறது. இரண்டாம் இயலின் தொடர்ச்சியாக இருப்பதால், அங்கு உள்ள பல செய்திகளும் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. நூலுக்கு ஒரு முடிவுரை இருந்திருந்தால் இனவரைவியல் ஆய்வுலகுக்குக் கிடைத்துள்ள அருமையான வரவு முழுமை பெற்றிருக்கும். "காவ்யா வெள்ளி விழாச் சிறப்பு வெளியீடு' என்னும் சிறப்புக்குப் பொருந்தும் சிறப்பு இந்நூலுக்கு உண்டு.
     

    செங்கை மறவர்

    துறை: விறலியாற்றுப்படை
    வண்ணம்: ஒழுகு வண்ணம்
    தூக்கு: செந்தூக்கு
    பெயர்: செங்கை மறவர்

    யாமும் சேறுக நீயிரும் வம்மின்
    துயிலுங் கோதைத் துளங்(கு)இயல் விறலியர்
    கொளைவல் வாழ்க்கைநும் கிளைஇனி(து) உணீஇயர்
    களிறுபரந்(து) இயலக் கடுமா தாங்க
    ஒளிறுகொடி நுடங்கத் தேர்தி஡஢ந்து கொட்ப 5
    எஃகுதுரந்(து) எழுதரும் கைகவர் கடும்தார்
    வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
    மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்
    வலம்படு குழூஉநிலை அதிர மண்டி
    நெய்த்தோர் தொட்ட *செங்கை மறவர்* 10
    நிறம்படு குருதி நிலம்படர்ந்(து) ஓடி
    மழைநாள் புனலின் அவல்பரந்(து) ஒழுகப்
    படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
    படுகண் முரசம் நடுவண் சிலைப்ப
    வளன்அற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் 15
    கருஞ்சினை விறல்வேம்(பு) அறுத்த
    பெருஞ்சினைக் குட்டுவன் கண்டனம் வரற்கே.