★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, December 30, 2016

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு மறத்தமிழர் சேனை கடிதம்

அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திருமதி ந.சசிகலா அவர்களுக்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் இன்று (30-12-2016) கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் இது. மக்களாட்சி மலர்ந்துவிட்டதாக சொல்லப்பட்ட இத்தனை ஆண்டு காலங்களில் தமிழர்களின் நலன் சார்ந்து இயங்க வேண்டிய அனைத்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைமைகளும் தமிழர் அல்லாதோர் தலைமைகளில் தான் இருந்திருக்கிறது. முதல்முறையாக நேரடித் தமிழ்ச்சாதியை சார்ந்த தங்களது கைகளில் அதிகவாக்கு செல்வாக்குள்ள; சட்டமன்ற; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பு, அனைத்து அதிமுக தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு வந்திருப்பது வரவேற்கத்தகுந்த நிகழ்வாகும்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தை அரசாட்சி செய்த காமராஜர் அவர்களின் 1954 – 1963 ஆண்டு வரையிலான ஒன்பது ஆண்டுகால தமிழர் ஆட்சியும்கூட இந்திய தலைவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் தான் நடந்துள்ளது. ஆனால், தற்போது தங்களது மேலான வழிகாட்டுதலின் கீழ் செயல்படவிருக்கும் ஆட்சியானது அனைத்து தமிழ்ச்சாதியினர்களும் தமிழ்த் தேசிய அமைப்பினர்களும் விரும்பிய வகையில் அமைந்திருப்பது எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த மன நிறைவை தருவதாக; எழுச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது.

Thursday, December 15, 2016

உறுப்பினர்கள் தகுதி இழப்பு : தலைமை முடிவு

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் (15.12.2016) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
                                                        
“மறத்தமிழர் சேனை இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி, பல்வேறு வகையான தொடர்  சிக்கல்களுக்கு, சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும், கடந்த எட்டு ஆண்டு காலத்தில் இயக்க நலன் சார்ந்து கொள்கை மாறாமல் பயணிக்கும் அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

தங்களின் மேலான அர்ப்பணிப்பு உணர்வு, தியாக மனப்பாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலப்பு மண எதிர்ப்பு – சுய சாதி காப்பு – முக்குலத்தோருக்கான அதிகார மீட்டல் – மேலாதிக்க சுரண்டல் அழிப்பு – தனித்தொகுதி மாற்றல் – வரலாற்று மீட்பு – தியாகிகள் நினைவு போற்றல் – தமிழ்த் தேசிய அரசியல் பார்வை – தனித்தமிழ் வளர்ப்பு – போதையற்ற தமிழர் நிலம் என தொடர்ந்து  மறத்தமிழர் சேனை தனக்கென தனித்த அடையாளங்களோடு செயல்பட்டு வருகிறது. இத்தனைகளையும் சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் இயக்கம் என்றென்றும் கடமைப்பட்டது ஆகிறது.

ஆயினும், இயக்கத்தின் கட்டாய நெறிமுறைகளில் ஒன்றானது, உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தங்களது உறுப்பினர் நிலையை புதுப்பித்துக் கொண்டு புதிய அடையாள அட்டை பெற்றுவிட வேண்டும் என்பது ஆகும். அந்த வகையில், கடந்த 2009 – 2010 – 2012 – 2015 – நவ 2016 ஆகிய வருடங்களை முடிவு கால அளவாகக் கொண்டு, தற்போது வரை புதுப்பித்துக் கொள்ளாமல் நீடித்து வரும் அனைத்து உறுப்பினர்களையும் இன்று முதல் தற்காலிக தகுதி நீக்கம் செய்து அறிவிக்கிறேன்.

உறுப்பினர்கள் / நிர்வாகிகள் தங்களது உறுப்பினர் நிலையை ஜனவரி -15 க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் தகுதி நீக்கம் நிரந்தரமாக்கப்படும் என்பதையும், அந்தந்த இடங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் இதன் மூலம் அறிவுறுத்துகிறேன். கள ஆய்வு / விமர்சனக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும், புதிய உறுப்பினர்கள் அனைவரையும் தொகுத்து வெளியீடாக வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” என வெளியிட்டுள்ளார்.