★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Wednesday, May 23, 2012

சிலப்பதிகாரத்தில் காணப்படும் கற்பு நெறி



கண்ணகி... மாதவி...கோப்பெருந்தேவி...
கவிக்கோ இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோப்பெருந்தேவி மற்றும் மாதவி என நாம் 3 கற்புக்கரகியர்களை காணலாம். இந்த மூவரில் கற்பு நெறியில் சிறந்தவர் யார் என்பதை ஆராயப் போகிறோம். சிலப்பதிகார கற்பு நெறியை 3 வகையாக பிரிக்கலாம், அது முதற்கற்பு, இடைக்கற்பு மற்றும் கடைக்கற்பு ஆகும்.

கோவலனை மணந்ததால் கண்ணகி அவனது மனைவியானாள். மனைவி என்பவள் கணவனுக்கு கட்டுப்பட்டவள். கோவலன் என்ன தவறு செய்தாலும் அதை கண்ணகி பொறுத்து கொள்ளதான் வேண்டும். கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டவளாக, கற்பு நெறி காப்பவளாக இருப்பது ஆச்சரியமில்லை. அது அவளது கடமை. எனவே கண்ணகியின் கற்பு நேறி கடமையாகிவிடுகிறது.

ஆனால் மாதவி அப்படியல்ல. தேவதாசி குடும்பத்தில் பிறந்தவள். கோவலனின் ஆசை நாயகி. அவனது மகளான மணிமேகலையை கருவில் சுமந்து பெற்றெடுத்து, அப்பெண்னை துறவியாக வளர்த்தவள். கோவலன் பிரிந்து சென்ற பிறகு மாதவி நினைத்திருந்தால் வேறொரு செல்வந்தருக்கு ஆசை நாயகி ஆகி இருக்கலாம். ஆனால் அவள் அப்படி செய்யவில்லை. கோவலனை மானசீக கணவனாக ஏற்று வாழ்ந்தவள், கற்பு நெறி காத்தவள். மாதவியின் கற்பு நெறி போற்றுதலுக்குரியது.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பதற்கு எடுத்துக் காட்டு, மதுரையை ஆட்சி செய்த பாண்டியன் நெடுஞ்செழியன் மன்னன். கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கியதாலும் கண்ணகிக்கு அநீதி இழைத்ததாலும், அவையில் உடைபட்டு கிடந்த சிலம்பை போல நெஞ்சு வெடித்து உயிரிழந்தான். நெடுஞ்செழிய மன்னரின் மனைவி, அரசி கோப்பெருந்தேவி கணவன் உயிரிழந்ததை கண்ட அதிர்ச்சியில் அவளும் உயிரிழந்தாள். கணவன் இறந்த பிறகு உயிர் வாழ நினைக்காத மனைவியின் கற்பு நெறி போற்றுதலுக்குரியதுதான், இருந்தாலும் கண்ணகியை போல கோப்பெருந்தேவியின் கற்பு நெறியும் கடமையாகிவிடுகிறது.

எனவே சிலப்பதிகாரத்தில் காணப்படும் கற்பு நெறி ஆய்வுபடி முதற்கற்பு மாதவிக்கும் இடைக்கற்பு கோப்பெருந்தேவிக்கும் கடைக்கற்பு கண்ணகிக்கும் கிடைக்கிறது. கண்ணகிக்கு ஏன் கடைக்கற்பு? கோப்பெருந்தேவிக்கு ஏன் இடைக்கற்பு? என்றால், கணவன் கொலையுண்டதால் கண்ணகி மதுரையை எரித்தாள். ஆனால் கோப்பெருந்தேவி, கணவன் உயிரிழந்தால் தனது உயிரையே நீத்தாள். உயிரைவிட கண்ணகியின் கோபம் பெரிதல்ல என்பதால் கோப்பெருந்தேவிக்கு இடையும் கண்ணகிக்கு கடையும் கொடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, May 22, 2012

திருச்சி பி. இரத்தினவேலு தேவர் நினைவுகள்

திருச்சிராப்பள்ளி நகர வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியோர்கள் பலரில் நகராட்சித் தலைவராயிருந்த பி. இரத்தினவேல் தேவர் அவர்கள் முதன்மையானவர். 1883 ஆம் ஆண்டு பிராச்சிலையில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்தவர். எஸ்.பி.ஜி. பள்ளியிலும் பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

                   பொது வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேவர் 1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி வேட்பாளராகத் திருச்சிராப்பள்ளி நகரமன்ற உறுப்பினருக்குப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். பின்னர் நகரமன்றத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந் தெடுக் கப்பட்டார். 1924இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924முதல் 1946 வரை 4 முறை நகராட்சித் தலைவர் பொறுப்பேற்று நகர வளர்ச்சிக்கு அரும்பணியாற்றினார். 1946இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவர், பிற்காலத்தில் நீதிக்கட்சியோடு கருத்து வேறுபாடு கொண்டார். திலகரும், காந்தியாரும் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். காந்தியடிகளின் போதனைகளை மக்களிடம் பரப்பினார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அதனால் பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். ராஜாஜி மன்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் அன்புக்குப் பாத்திரராகவும் இருந்தார்.        

Friday, May 18, 2012

கூடங்குளம் இன்னொரு போபால் ஆகிறதா?

நமது நிலத்தை காக்கும் போராட்டத்தில் ஒன்று நாம் வென்றாக வேண்டும் -
இல்லையெனில் நாம் கொல்லப்படுவோம். ஏனெனில் தப்பியோடுவதற்கு
நமக்கு வேறு நிலங்கள் இல்லை

-கென் சரோ விவா
 
 
சமீபத்தில் உலகையே உலுக்கிய ஒரு விசயம் ஜப்பானின் புகுசிஹிமா அணு உலை விபத்து.1986 இல் செர்நோபிள் நடந்தபின்னர் மற்றொரு பெரிய அணு உலை விபத்து இது. அணு உலையின் ஆபத்துகளை உலகம் உணர்ந்த நாள் என்று கூட சொல்லலாம். இதன் பின்னால் ஜப்பான் தனது அனைத்து அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்து உள்ளது. இதே போல ஜெர்மனியும். உலகின் மற்ற சில நாடுகளும் கூட இது குறித்து முடிவுகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அணு உலைகளை எதிர்த்து இதற்கான ஒரு அமைதிப் போராட்டம் நடப்பது தெரியுமா உங்களுக்கு?

Wednesday, May 16, 2012

மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல்!

முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்குஏற்கனவே  சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இன அழிப்பின்  பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.

                       

                              இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல்.


நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



மூன்று வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக்கையில் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும்  மறத்தமிழர்  சேனையின்  கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும்

தலித் அரசியலின் அவலம் : சிலைகள் அமைத்ததில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல்: அகிலேஷ் யாதவ் தகவல்

See more of Dalit politics: Bahujan Party Chairman kansiram, Mayawati and the party's election mascot, the elephant statues, set up the corruption in the Rs .40 crore: Minister Akhilesh Yadav Information

                               லக்னோ: உ.பி.,யில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின்போது, மாயாவதி, கன்ஷிராம் மற்றும் யானை சிலைகளை அமைத்ததில், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பியுள்ளன. "இது தொடர்பாக எந்த விதமான விசாரணை நடத்துவது என்பது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்' என, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

                                        உத்தரபிரதேசத்தில், 2007 முதல் 2012ம் ஆண்டு வரை, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடந்தது. முதல்வராக மாயாவதி பதவி வகித்தபோது, லக்னோ மற்றும் நொய்டாவில் பிரமாண்டமான பூங்காக்கள் அமைக்கப்பட்டதோடு, அவற்றிலும், வேறு பல இடங்களிலும், பகுஜன் கட்சி நிறுவனத் தலைவர் கன்ஷிராம், மாயாவதி மற்றும் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சிலைகள், ஏராளமான அளவில் அமைக்கப்பட்டன.

                             முறைகேடு எவ்வளவு? இதற்கு அரசு பணம் செலவிடப்பட்டது. இதில், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக, சட்டசபை தேர்தலின் போது, முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியது. தற்போது மாநிலத்தில், அக்கட்சியே ஆட்சியில் அமர்ந்துள்ளதால், இது குறித்து நேற்று தலைநகர் லக்னோவில், முதல்வர் அகிலேஷ் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் சிலைகள் அமைத்ததில், நடந்துள்ள முறைகேடுகள் எவ்வளவு என்பதை பத்திரிகைகள் சொல்ல வேண்டாம். அதை, 5 ஆயிரம் கோடி ரூபாயாகவும் குறைக்க வேண்டாம். நாங்கள் (சமாஜ்வாதி) சட்டசபை தேர்தலின்போதே, இந்த விவகாரத்தில், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது என்பதை தெரிவித்துள்ளோம். எவ்வளவு நடந்துள்ளது என்பதை, மாநில அரசு கணக்கிடும். சிலைகள் அமைத்தற்கான செலவுகளை கணக்கிடும் போது, சிலைகள் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கணக்கில் கொள்ளப்படவில்லை.

                                        விசாரணை எப்படி? சிலைகள் அமைத்த போது, ஒப்பந்ததாரர்களுக்கு அதிக அளவில் பணம் தரப்பட்டுள்ளது. ஒரு சிலைக்கு, 5 லட்ச ரூபாய் செலவாகிறது எனில், மாநில அரசு நிறுவனம் ஒவ்வொரு சிலைக்கும், 60 லட்ச ரூபாய் கொடுத்ததாக கணக்கு உள்ளது. பல கட்டடங்கள் கட்டப்பட்டு, பின் இடிக்கப்பட்டது எல்லாம் கணக்கில் காட்டப்படவில்லை. அதேபோல், எல்லைச் சுவர்கள் அமைக்கப்பட்டு, பின் இடிக்கப்பட்டதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்த மோசடிகளில் பலம் அடைந்தது யார் என்பதை எல்லாம், குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடிப்பர். மேலும், மோசடி தொடர்பாக, எந்தவிதமான விசாரணை நடத்தப்படும் என்பது குறித்து, மாநில அரசு விரைவில் முடிவு செய்யும். இவ்வாறு, முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

Tuesday, May 15, 2012

இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்ள மானியம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை,மே.15: சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாள நாட்டில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு செல்ல விரும்பும் இந்துக்களின் பயணச் செலவுக்கு மானியம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
                              இதுகுறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
                               கிறிஸ்தவ பெருமக்கள் ஜெருசலம் புனித யாத்திரை மேற்கொள்ளவும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப்படும் என்று 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் வாக்குறுதி அளித்து இருந்தேன்.

Saturday, May 5, 2012

அலங்காநல்லூர் ஒன்றிய பிரதிநிதி இல்ல காதணி விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய பிரதிநிதி C.பிரபாகரன்  அவர்களின்  இல்ல காதணி விழா 7-5-2012 அன்று தெத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வ கோவிலில் மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.