★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, May 18, 2012

கூடங்குளம் இன்னொரு போபால் ஆகிறதா?

நமது நிலத்தை காக்கும் போராட்டத்தில் ஒன்று நாம் வென்றாக வேண்டும் -
இல்லையெனில் நாம் கொல்லப்படுவோம். ஏனெனில் தப்பியோடுவதற்கு
நமக்கு வேறு நிலங்கள் இல்லை

-கென் சரோ விவா
 
 
சமீபத்தில் உலகையே உலுக்கிய ஒரு விசயம் ஜப்பானின் புகுசிஹிமா அணு உலை விபத்து.1986 இல் செர்நோபிள் நடந்தபின்னர் மற்றொரு பெரிய அணு உலை விபத்து இது. அணு உலையின் ஆபத்துகளை உலகம் உணர்ந்த நாள் என்று கூட சொல்லலாம். இதன் பின்னால் ஜப்பான் தனது அனைத்து அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்து உள்ளது. இதே போல ஜெர்மனியும். உலகின் மற்ற சில நாடுகளும் கூட இது குறித்து முடிவுகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அணு உலைகளை எதிர்த்து இதற்கான ஒரு அமைதிப் போராட்டம் நடப்பது தெரியுமா உங்களுக்கு?

எதை பற்றி பேசுகிறேன் என்று சிலர் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆம்.. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை பற்றி தான் பேசுகிறோம். 15000 பேருக்கு மேலும் ஒன்று கூடி போராடும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 127 பேர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு அதில் 24 பேர் கவலைகிடமாக கிடக்கின்றனர். இந்த அணு உலையால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு உள்ள போதும் அவ்வூர் மக்கள் இதனை எதிர்க்க என்ன காரணம்?
  • ஜப்பான் போல இங்கு நடந்து விட்டால்?
  • பாதுகாப்பு குறைவு
  • மிக முக்கியம் அணு உலை அமைந்துள்ள இடம்

இதுவரை நாம் பராமரித்து வந்த அணு உலைகள் கூடங்குளம் அணு உலையை விட சக்தி குறைந்தவை. அதனால் தான் ரஷியா உதவியுடன் இதை செய்கிறோம்.இது 1000Mwe ஆற்றல் உடையது, 2020 ஆண்டுக்குள் 20,000Mwe மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது அரசு. செர்நோபிள் நடந்த அணு உலை விபத்தும் 1000Mwe ஆற்றல் வாய்ந்த உலை ஆனால் வேறு வகை. இவ்வளவு ஆற்றல் உள்ளது என்ன பலம் கொண்டுள்ளது என்றால் மிகப் பெரிய கேள்வி எழுகிறது.
நிறைய பேர் இது ஏதோ நேற்று ஆரம்பித்த போராட்டம் என்று நினைக்கின்றனர், அது தவறு 1987-இல் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் இதன் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர்.(நன்றி : விக்கிபீடியா)
கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடம் சுனாமி வரக்கூடிய பகுதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது நாம் கவனிக்க வேண்டிய ஒரு விசயம். நமது கட்டுமானம் நன்றாக உள்ளது என்று கூறுகிறது இந்திய அணுசக்தி துறை. ஆனால் அந்த பகுதி எம்.எல்.ஏ ஒருவரே இந்த கட்டுமானத்தில் கடல் மணல் கலக்கப்படுவதாக புகார் அளித்து உள்ளார். ஒரு மக்கள் பிரதிநிதியே குறை சொல்கிறார் என்றால் அணுசக்தி துறை கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்று புரியும்.
கூடவே கூடங்குளம் அணு உலைக்கு மூன்றரை கிலோமீட்டர் தூரத்தில் கல்குவாரி ஒன்று அமைந்து உள்ளது. அங்கு வேலைபாடுகள் நடக்கும் போது அதிர்வலைகள் கிளம்ப வாய்ப்புகள் உண்டு. அத்தகைய சமயத்தில் அணு உலை கட்டடங்கள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். அணு உலை கட்டுமானம் என்பது தரைக்கு மேலே மட்டும் கவனிக்கக் கூடிய விசயம் அல்ல. கட்டுமானத்தில் சிறு விரிசல் வந்தாலும் பெரிய பிரச்சினைதான். காரணம் கூடங்குளம் பகுதியானது 200 மீட்டர் ஆழம் வரை மட்டுமே கெட்டியான பாறைகளை கொண்டது. ஒரு அணு உலை அமைக்க இது 40KM என்ற அளவில் இருத்தல் அவசியம். இதனால் ஒரு சிறு எரிமலை வெடிப்பு வந்தாலும் அணு உலை மிகப் பெரிய அளவில் பாதிப்பை பெறும். 
இதை எல்லாம் விட மிக முக்கியம் இது குறித்து மக்களிடம் எதுவும் கூறாதது. விழிப்புணர்வு குறித்து எதுவும் சொல்லவில்லை, அணு உலை குறித்த எல்லா விசயங்களும் மிக ரகசியமாக உள்ளன. ஒரு அணு உலையோ அல்லது ஏதேனும் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செய்கையை செய்யும் போது குறிப்பிட்ட பகுதி மக்களிடம் கலந்து பேசவேண்டும், அதுமட்டுமின்றி முதலில் திட்டவணை காட்டி மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஊர்தலைவர் மற்றும் சுற்றுவட்ட பகுதி மக்கள் அனைவரையும் கூட்டி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மக்கள் கூட்டம்(Public hearing) நடத்தி இருக்க வேண்டும். திட்டவணை அப்ரூவல் ஆன பிறகு அதை குறிப்பாக செய்திதாள்களில் வெளியிட்டுவிட்டு அதன் நகலை சம்பந்தபட்ட பஞ்சாயத்து போர்டுகளுக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். இவை எதுவுமே செய்யப்படாமல் இருக்கிறது.
அனைத்து விதிமுறைகளையும் மீறி கட்டப்பட்டு வருகிற இந்த அணு உலை மிக பெரிய உயிரழிக்கும் ஆபத்தை கொண்டது என்று தான் சொல்லவேண்டும். ஆம் அணு உலை உள்ள ஏரியாவில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் தான்12,000 பேர் இடிந்தகரை கிராமத்தில் வசிக்கின்றனர். அத்தோடு கூடங்குளம் கன்னியாகுமரிக்கு 26 .4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஒரு பெரிய நகரம் இவ்வளவு அருகே இருக்கக் கூடாது. கூடவே நாகர்கோவில் கூட அருகில்தான் உள்ளது. அணு உலை விபத்து என்பது கிட்டத்தட்ட முப்பது கிலோ மீட்டர் தூரம் பாதிக்கும். 30கி.மீ., தூரத்தில் 1 மில்லியனுக்கு மேலான மக்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது. ஆனால் மறைமுக ஆபத்து என்பது 1000 கிலோமீட்டர் வரை இருக்கும். 
நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் வெறும் மூன்று சதவிகித (?) மின்சார உற்பத்தி மட்டுமே நமக்கு கிடைக்கக் போகிறது அணு உலைகளால். இன்னும் என்னனவோ வளங்கள் உள்ளன பயன்படுத்தப்படாமல் உள்ளன நாட்டில். அணு உலை ஆபத்தானது என்பதை எல்லா நாடுகளும் உணரத் தொடங்கி விட்டது. ஆனால் நம் நாடு இன்னும் அணு உலைகளை விட மாட்டேன் என்கிறது. 1986 இல் செர்நோபிள் விபத்து நடந்த இரண்டு வருடங்களில் அவர்களிடம் புதிய அணு உலைக்கு நாம் ஒப்பந்தம் போடுகிறோம். என்டோசல்பானுக்கே ஐந்து வருடம் அனுமதி கேட்ட நாடு இது அணு உலைக்கு எத்தனை ஆண்டுகள் கேட்கும்?
சென்ற ஆண்டு அணு சக்தி கழக தலைவர் எஸ்கே ஜெயின் குறிப்பிடும் போது இன்னும் 14 அணு உலைகள் இந்தியாவில் எழும்ப போவதாக சொன்னார். அதில் இப்போது கட்டிக்கொண்டிருக்கும் 2 கூடங்குளம் அணு உலைகளோடு கூடுதலாக நான்கு அணு உலைகள் இணைக்கப்படுகின்றன. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர், தமிழகத்தின் சுகாதார துறையினர் கடல்சார் பாதுகாப்பு அம்சங்களை மீறுவதால் மீதி 4 அணு உலைகளுக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், இப்போது அங்குள்ள மக்களின் கொதிப்பு என்ன.? கட்டபட்டிருக்கும் 2 அணு உலைகளுக்கு மட்டும் அந்த அம்சங்கள் அனைத்தும் பின்பற்றப்பட்டு இருக்கிறதா என்பதையே..!
சில ஆண்டுகளுக்கு முன்னரில் இருந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் முன்னரே இயங்கும் 19 அணு உலைகள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இன்னும் அதற்கான செயல்பாடுகளில் அவர்கள் தீவிரம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது போன்ற ஒரு தாக்குதல் நடந்தால் அது மக்களை எப்படி பாதிக்கும் என்பதை அரசு உணர்ந்திருக்கிறதா? அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? இப்படி எல்லாம் சாமனிய மக்களுக்கும் கேள்விகள் எழத்தான் செய்கின்றன. இருந்தாலும் இன்னும் இந்த அரசாங்கம் பாதுகாப்பானது தான் என்று பிதற்றி வருகிறது.
இருந்தாலும் இதற்கு அரசாங்க தரப்பில் இருந்து எவ்வகையில் சப்போர்ட் செய்யப்படுகிறது.? கூடங்குளம் அணு மின் நிலையம் கடல் மட்டத்தில் இருந்து 7.5மீட்டல் உயரத்தில் இருப்பதாகவும் இதனால் சுனாமி வந்தால் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. அப்படியா.? சரி.. போன முறை சுனாமி வந்த போதும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஜப்பானில் பல அதிர்வுகளும் சிறு சிறு கடல் சீற்றங்களும் அடிக்கடி எழும்பும் ஆனால் இப்போதைய சுனாமி தானே அணு மின் நிலைய பாதிப்புக்கு காரணம். அத்தகைய சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு கொண்ட ஜப்பானின் அணு மின் நிலையமே ஆட்டம் காணும் போது நீங்கள் கூறும் வாக்குறுதியை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும். இயற்கையின் பலத்தை மதிப்பிட மனிதனுக்கு இன்னும் பலம் போதவில்லை எனபதற்கு ஜப்பான் நிகழ்வே சாட்சி.
உலைகளை குளிர்விக்க வழக்கமாக 1 ஜெனரேட்டர் உபயோகிக்கப்படும். ஆனால் கூடங்குளத்தில் 4 ஜெனரேட்டர்கள் உபயோகிக்கப்படவுள்ளன என்று மீண்டும் சப்பை கட்டு கட்டி பொதுமக்கள் வாயை அடைத்திட நினைக்கிறது இந்த அரசாங்கம். எத்தனை முறை எடுத்து உரைத்தாலும் பாதுகாப்பானது தான் என்னும் ஒற்றை வார்த்தையை பிடித்து பிதற்றி வருகிறது.
அப்படி பாதுகாப்பானது என்று அரசாங்கம் கருதினால் பாராளுமன்றத்துக்கு அருகில் வைக்க வேண்டியது தானே? அங்கே தான் எல்லா பாதுகாப்பும் உள்ளதே? அணு உலைக் கழிவுகளை நாம்தான் சுத்திகரிக்க என்று சொல்லி விட்டது ரஷ்யா. தெரு குப்பையை கூட ஒழுங்காக சுத்திகரிக்க முடியாத நாமா அணு உலை கழிவுகளை சுத்திகரிக்க போகிறோம். அதையும் எதாவது ஒரு ஆற்றில் கலந்து எம் மக்களை கொன்றாலும் கொல்லும் இந்த அரசாங்கம். ஏற்கனவே போபால் விஷயத்தில் அமெரிக்கா நம்மை அடித்தது, இப்போது ரஷ்யா . இன்னும் எத்தனை நாடுகளிடம் அடி வாங்க வேண்டும் இந்தியக் குடிமகன்?
சரி.. அன்னா ஹசாரே என்னும் ஒற்றை மனிதன் ஊழலை எதிர்த்தபோது ஊடகங்கள் எந்த அளவுக்கு உறுதுணையாய் இருந்ததோ அதில் கால் பங்கு கூட இந்த விடயத்தில் இல்லையே.! ஊழலை விட உயிர் பெரிதில்லை என்று நினைத்திட்டார்களோ..! இல்ல ஊடகங்களுக்கு வெறும் ஒருவரை ஹீரோவாக வைத்து சித்தரிக்க மட்டும் தான் தெரியுமா..?
ஜப்பானிய பாதிப்புக்கு பின்னர் தமிழகத்தின் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை பரிசோதித்து அது முற்றிலும் பாதுகாப்பற்ற ஒன்று என்று சொல்லப்பட்டது. கல்பாக்கம் அணு மின் நிலையம் தொடங்கும் முன்பும் இப்போது செய்வது போல பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன தான்.. ஆனால் இன்று அது பாதுகாப்பே அற்றது என சொல்லப்படுகிறது. தமிழகத்தின் வளத்தை பொறுத்த வரையில் அணுமின் நிலைய விபத்தை தாங்கும் சக்தியற்றது தமிழகம் என்றும் அதன் பின்னர் சொல்லப்பட்டது. இருப்பினும் அதிகாரிகளுக்கு இதை பற்றி கவலை இல்லை.
1988, 98 மற்றும் 2001 என்று பரிசீலிக்கப்பட்ட இந்த அணு மின் நிலைய கட்டுமான பணிக்கான தொகை சில பல மாற்றங்களுக்கு பின்னர் 2001ல் 13,171 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டது. இதில் 6,775 கோடி இந்தியா செலுத்துகிறது. மீதி பணம் அனைத்தும் ரஷ்யாவிடமிருந்து 4 சதவீத வட்டிக்கு வாங்கபடுகிறது. கடன் வாங்கி வீட்டை கொளுத்தி ஆட்டையில் போடுவது இங்கு தவிர்த்து எங்கு நடக்கும்.
மேற்கு வங்கத்தில் மம்தாவின் அரசு ரஷ்யாவின் அணு மின் நிலையும் அமைக்கும் பணியை ஹரிபூரில் நிறுத்திவிட்டு தங்கள் மாநிலத்தில் அணு மின் நிலையம் தேவையில்லை என்னும் அறிக்கையை விட்டிருக்கின்றது. மேலும் நமது அண்டை மாநிலமாகிய கேரளத்தில் அணுமின் நிலையம் தேவையற்றது என்று சொல்கின்றனர். நம் தமிழக மக்கள் மட்டும் வாங்கி வைத்துகொண்டு என்ன சிரிப்பா சிரிக்க போகின்றனர்.?
இங்கு விபத்தே நடக்காவிடிலும் இந்த அணுமின் நிலையத்திலிருந்து ஐயோடின், சீசியம் போன்ற பல கனிம வெளிபாடுகள் உண்டாகும். அது காற்றோடு கலந்து விலை நிலங்கள், கால்நடைகள், கடல் என அனைத்தையும் பாதிக்க கூடும். இதில் உள்ள பொட்டாசியம் தாவரங்களால் உட்கொள்ளபட்டு நம் உணவிற்கு வரும் மெல்லக் கொல்லும் விஷம். முன்னரே தெற்கு கடல் சார் பகுதி மக்களுக்கு கேன்சர், மூளை பாதிப்பு, குறைபாடுடன் பிறப்பு போன்ற பல பாதிப்புகள் அரசாங்கத்தின் கடல் வழி ஆராய்ச்சி மற்றும் தோரியம் கண்டுபிடிப்புகளால் நிகழ்ந்தேரி வருகின்றன. அப்படியானால் அரசாங்கம் ஒட்டுமொத்த கடல் சார் மக்களை எல்லாம் அழிக்க வழிமேல் வழிவகுத்து தருகிறதா என்ன.?
அணு உலை வேண்டாம் என்று சொல்லும் போது மாற்று வழி என்ன என்று நீங்கள் கேட்கலாம். அது குறித்த பதிவு இங்கே... இனி சூரியன் போதுமே நண்பர்களே கூடங்குளம் மட்டுமல்ல மற்ற எல்லா அணு உலைகளையும் எதிர்க்க இதுவே வாய்ப்பு குரல் கொடுங்கள் நண்பர்களே.!! ஒன்றிணைந்து நம்மின் தெளிவான புறப்பாடு நம்மை வஞ்சிக்க நினைத்திடும் அரசாங்கத்தை புறம் தள்ளி வெற்றி காண்போம்..!