★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Tuesday, September 19, 2017

நிலத்தடி நீர் பாதுகாப்பு போராளிகள் கைது

ஸ்ரீவைகுண்டம், செப்-18-017. விவசாயத்திற்கும் குடிநீருக்கும் மக்கள் திண்டாடி வரும் சூழலில் பணமுதலைகளின் தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடின்றி நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ள அனுமதித்து, ஆடு மாடுகளுக்கு கூட நீர் இல்லாதபடி விற்பனை செய்வதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆடு, மாடு, கோழிகளுடன் குடிபுகும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி இராஜா தலைமையில் 18-09-17 அன்று ஸ்ரீவைகுண்டம் நகரில் இருந்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். காவல்துறை அனுமதி மறுத்துவிட காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மறத்தமிழர் சேனை துணைப் பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், பச்சை தமிழன் இயக்க மாநில தலைவர் சுப.உதயகுமார், விவசாய சங்கத் தலைவர் அலங்காரம், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் பாகல் சமீர், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலன், பசும்பொன் ரத்ததான கழக மாவட்ட செயலாளர் சுப்பையா, மக்கள் தேசிய தீ கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நாம் உழவர் பாதுகாப்பு அணி பொதுச்செயலாளர் மாணிக்கசாமி, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, திராவிட தேசம் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


முன்னதாக, நிலத்தடி நீர் திருட்டுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பியபடி பத்துக்கும் மேற்பட்ட நாய், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல போராட்டக்காரர்கள் முயன்றனர். அப்போது அனுமதியின்றி ஊர்வலமாக செல்வதாக கூறி துணை கண்காணிப்பாளர் திபு தலைமையில் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், சார்பு – ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட 165 பேரை கைது செய்தனர்.

போராட்டம் குறித்து நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது “தாமிரபரணி ஆற்றின் நீர்வரத்தைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கார், பிசானம், முன்கார் என மூன்று போக சாகுபடிகள் இருந்த நிலைமாறி தற்போது ஒரு போக விவசாயத்திற்கு கூட தண்ணீரை பெற முடியாத அவல நிலையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் காலி குடங்களுடன் பல மைல் தூரம் நடந்து சென்று தண்ணீருக்காக காத்திருக்கும் நிலையும், குடிநீருக்காக போராட்டம் நடத்துவதும் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக நடைபெற்று வரும் நிலத்தடி நீர் திருட்டை நிரந்தரமாக தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பலமுறை மனு அளித்துப் பார்த்தோம். போராட்டங்களும் செய்து பார்த்து விட்டோம். இதனைத் தொடர்ந்தே கால்நடைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடிபுகும் முடிவிற்கு வந்தோம். தற்போது காவல்துறை திருட்டை தடுக்காமல் எங்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். எங்கள் மீது போராட்டத்தில் கலந்து கொண்ட தோழமை இயக்கத்தினர்கள் மீதும் வழக்கு போட்டிருக்கின்றனர். ஆயினும் எங்கள் போராட்டம் தொடரும்” என்று கூறினார்.

Thursday, September 14, 2017

60 ஆம் ஆண்டு கீழத்தூவல் தியாகிகள் ஐவர் வீரவணக்க கூட்டம் மறத்தமிழர் சேனை சார்பில் நடைபெற்றது.

பரமக்குடி, செப்.14, பரமக்குடியில் கீழத்தூவல் தியாகிகள் ஐவர் வீரவணக்க அறுபதாம் ஆண்டு நாளை முன்னிட்டு மறத்தமிழர் சேனை சார்பில் பரமக்குடி தேவர் மகாலில் கீழத்தூவல் தியாகிகள் ஐவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், ஐவர் நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்து மணிமண்டபம் அமைக்க வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளின் உடல்குறித்த உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். வறுமையில் வாடும் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடும், தகுதிக்கு ஏற்ப அரசுப்பணியும் வழங்கிட வேண்டும். பரமக்குடி வைகை ஆற்றை தூய்மைப்படுத்தி குடிநீர் திருட்டை தடுத்திட வேண்டும். வைகை ஆற்றில் கட்டிட, குப்பை கழிவுகளை கொட்டுகிறவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் பாண்டித்துரை தேவர், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் சி.எம்.டி.ராஜா, மறத்தமிழர் சேனை மாநில துணைப்பொதுச் செயலாளர் முத்துக்குமார பாண்டியன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நவநீதன், மறத்தமிழர் சேனை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன், வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மதுரைவீரன் ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை மாநில மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ் தேவன், தேசிய முக்குலத்தோர் கழகம் மாநில பொதுச்செயலாளர் மனோஜ்பாண்டியன், மூமுக மாவட்ட செயலாளர் வீ.எம்.சேகர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாணவர் அணி செயலாளர் அடைக்கலம், அதிமுக நகர் மீனவரணி துணை தலைவர் இராமகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் கார்த்திக்சேதுபதி, துரைப்பாண்டியன், பசும்பொன் தேசிய கழகம் சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய.பாரதி தேவர், வெள்ளைச்சாமி தேவர் பாசறை சிவகங்கை வடக்கு மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் பெரியமந்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மறத்தமிழர் சேனை பரமக்குடி ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

Sunday, September 10, 2017

கீழத்தூவல் படுகொலை

கீழத்தூவல் துப்பாக்கி சூடு மாமறவர்கள் ஐவர் வீரவணக்க நாள் நிகழ்வில் மறத்தமிழர் சேனை பங்களிப்புகள்