★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Saturday, January 13, 2018

தை பொங்கல் திருநாள் வாழ்த்து அறிக்கை

தமிழரின், தமிழின் பண்பாட்டு அடையாளங்களை காத்து, உலகளாவிய அளவில் தமிழ் நிலத்தின் புகழை பரவல் செய்து கொண்டிருக்கும் தமிழ்ச்சாதி தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

உலக அரங்கில் அனைத்துக்கும் காரணம் அமைத்து கடைபிடித்த ஒரே இனமாகிய தமிழர்கள் நாம் என்பதும், அதனின் தலையாய இனக்குழுக்கள் யாம் என்பதும் பிறப்பின் மகிழ்வை ஒவ்வொரு நாளும் உணர்த்திச் செல்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனித வாழ்க்கையின் நியதி. அந்த இயற்கைக்கும், தம்மோடு தோழமையாக நின்று மண்ணை பண்படுத்தி பயனடைய உழைத்த காளைகளுக்கும் நன்றி செலுத்தும் திருநாளாக அமைவதே தை பொங்கல் திருநாள் ஆகும். உலகத்தமிழர்கள் அனைவரும் ஒற்றைக்கருத்தோடு நின்று மகிழும் பொங்கல் திருநாளில் மறத்தமிழர் சேனை குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்கிறது நன்னூல் நூற்பா அதன்படி, தமிழர்கள் அனைவரும் காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதைக்கு உதவாத பழைய சிந்தனை தடைவாதங்களை தவிர்த்துவிட்டு இன்றைய நவீன உலகியலுக்கு உகந்த கருத்தாக்கங்களோடு முன்னோர் கடைபிடித்த, பாதுகாத்த பண்பாட்டு அடையாளங்களோடு வீரியத்தோடு களம் அமைக்க; போராட வேண்டிய நேரமிது.