★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Tuesday, August 2, 2011

சேதுபதி மன்னர்கள் வரலாறு

வகை:பொது
எழுத்தாளர்:பேரா. புலமைவேங்கடாசலம்
பதிப்பகம்:பாவை பப்ளிகேஷன்ஸ்
ISBN :81-7735-831-6
Pages :85
பதிப்பு :1
Published Year :2010
விலை :ரூ.40 


சேதுபதி மன்னர்கள் மறவர் இனத்தில் தோன்றிய மன்னர்கள் ஆவார்கள். இவர்கள் தென்பாண்டிச் சீமையில் புகழ்வாய்ந்த நிலையில்
ஆட்சிப்புரிந்தவர்களாவார்கள். இராமேசுவரமு கோயிலின் புனரமைப்புச் சேதுமன்னர்களால் செய்யப்பட்டு, அவர்களது பராமரிப்பில் தொடர்ந்து இருந்துவந்தது. அதற்கு நன்றி சொல்லும் வகையில் வடநாட்டிலிருந்து இராமேசுவரம்வரும் பக்தர்கள் இராமேசுவரத்தில் தரிசனம் முடித்து ஊருக்குத் திரும்பும்போது, இராமநாதபுரத்திற்குச் சென்று சேதுபதி மன்னர்களைச் சந்தித்துவிட்டுச் செல்வார்கள். இராமநாதபுரத்திலுள்ள இராமலிங்க விலாசம் அரண்மனை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். சேதுபதி மன்னர்களில் மிகவும் புகழ்வாய்ந்தவர்கள். கிழவன் சேதுபதி, பாண்டித்துரைத் தேவர் ஆகியோராவர். பாண்டித்துரைத் தேவர் , மதுரையில் நான்காவது தமிழ்ச்சங்கத்தை ஏற்படுத்தினார். இந்த நூலில் புலித்தேவர் வரலாறு, வேலுநாச்சியார் வரலாறு, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வரலாறு ஆகியவற்றுடன் மறவர் இன மக்களின் வரலாற்றையும் கொடுத்துள்ளேன். புலமை வேங்கடாசலம்.