★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, November 29, 2010

கீழத்தூவல் நினைவேந்தல் 2010 - வேங்கைகள் வீரவணக்க நாள்

1957 ம் வருடம் கீழத்தூவல் ( keezhaththooval ) மண்ணில் காமராஜ் நாடாரின் வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட கீழத்தூவல் வேங்கைகள் ஐவருக்கு  53 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம் 14.09.2010 அன்று மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தலைமையில் கீழத்தூவல் கிராமத்தில் நடைபெற்றது. 

கிராம பொதுமக்களின் சார்பில் காலை 10.00 மணியளவில் இறந்துபோன ஐவரின் நினைவாக முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் கட்டப்பட்டுள்ள நினைவுத்தூன் அருகில் பொங்கல் வைத்து, தேங்காய் பழம், மாலைகளோடு  வழிபாடு நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த இளைஞர்கள் பெருந்திரளாக 'நினைவு ஜோதி' எடுத்து ஓடி வந்தனர்.  கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
மாலை 3.00 மணியளவில் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தலைமையில் அபிராமம் தேவர் சிலைக்கு திரைப்பட நடிகர் கருணாஸ் அவர்கள் மாலை அணிவித்து வாகனப் பேரணியை துவக்கி வைத்தார். 200 மேற்பட்ட வாகனங்களும், 100 மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் பங்கேற்ற மாபெரும் பேரணியாக மேலத்தூவல் கிராமத்தில் உள்ள தேவர் சிலைக்கு வந்தடைந்தது. அங்கே கீழத்தூவல் கிராமத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



மேலத்தூவல் கிராமத்திலிருந்து மீண்டும் துவங்கிய பேரணி மாலை 5.00 மணியளவில் முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் உள்ள ஸ்தூபியை வந்தடைந்தது. அனைத்து உறவுகளின் சார்பிலும் மாலை அணிவித்து பின் அங்கிருந்து மாவீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கண்மாய்க் கரையை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.