★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, June 17, 2016

முத்துவடுகநாதத் தேவர் 244 வது வீரவணக்க விழா அழைப்பு

சின்ன மறவர் நாடு, சிவகங்கை சீமை அரசாண்ட இரண்டாவது மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்களும், இளைய இராணி கெளரி நாச்சியார் அவர்களும் 1772 ஆம் ஆண்டு காளையார் கோவிலில் நடந்த போரில் நயவஞ்சகமாக ஆங்கிலேய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது நினைவு நாள் வீரவணக்க நாளாக ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள், முக்குலத்தோர் கட்சித்தலைவர்கள், முக்குலத்தோர் அமைப்புகள், மறவர் அமைப்புகள் மற்றும் மன்னர் வம்சா வழியினர் பங்கேற்று விழாவினை சிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது 25.06.2016 அன்று காலை பத்து மணி முதல் மாலை வரை மன்னரது 244 -ஆவது ஆண்டு வீரவணக்க நாள் விழா காளையார் கோவிலில் அமைந்துள்ள முத்துவடுகநாத தேவர் மாலையீட்டில் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாட்டினை மறவர் கூட்டமைப்பு நிர்வாகிகளும், மன்னர் முத்துவடுகநாத்தேவர் அறக்கட்டளை நிர்வாகிகளும், மன்னரது வம்சத்தை சார்ந்தவர்களும் இணைந்து செய்து வருகிறார்கள். ஆக, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க மறத்தமிழர் சேனை சார்பாக கோரிக்கை விடுக்கிறோம்.