★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Sunday, November 13, 2016

இராமநாதபுரம் சீர்மரபின நல சங்க உண்ணாநிலை போராட்டம்

இராமநாதபுரம் மாவட்ட சீர்மரபினர் நல சங்கம் 13.11.016 அன்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பாக உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது. மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தென்மண்டல தலைவர் மு.செந்தூர்பாண்டியன் அவர்கள், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் C.M.T.ராஜாஸ் தேவர் அவர்கள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி செந்தில் அவர்கள் வழக்கறிஞர் ஜோதிபாசு அவர்கள், மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்க செயலாளர் இராஜேந்திரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் உரிமைகளுக்கு எதிராகப் போடப்பட்ட அரசாணை 1310 / 30.07.1979 ஐ உடனே ரத்து செய்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட வலியுறுத்தி அனைத்து இயக்க முன்னோடிகளும் சிறப்புரை ஆற்றினார்கள்.