★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Saturday, March 10, 2012

மிகப்பெரிய மாநிலத்திற்கு இளம்வயது முதல்வர் அகிலேஷ் யாதவ்

லக்னோ, மார்ச் 10 : இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமாகக் கருதப்படும் உத்தரப்பிரதேசத்திற்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் மிக இளம் வயது முதல்வராக பதவியேற்க உள்ளார்.இது குறித்த முடிவு இன்று சமாஜ்வாடி கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் அகிலேஷ் யாதவ் உரிமை கோர உள்ளார்.  அம்மாநில ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த பிறகு,  மார்ச் 15ம் தேதி அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.


                                      அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டால், அம்மாநிலத்தில் மிக இளம் வயதில் முதலமைச்சராக பொறுப்பேற்றவராக அகிலேஷ் யாதவ் திகழ்வார். இந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவரான ஆஸம் கான், முலாயமின் தம்பி ஷிவ்பால் சிங் யாதவ் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை அளிப்பதாகக் கூறி அஸம் கானையும், நமக்கு வயதாகி விட்டது. எனவே இளம் தலைமுறையினருக்கு வழி விட வேண்டும் என்று கூறி தனது தம்பியையும் முலாயம் சிங் யாதவ் சமாதானப்படுத்தியுள்ளார்.எனினும், சமாஜ்வாடிக் கட்சிக் கூட்டம் நடைபெறும் பகுதியில் இருவரது ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமாஜ்வாடிக் கூட்டத்தில் இன்று அஸம் கான் அகிலேஷ் யாதவின் பெயரை முன்மொழிந்தார், ஷிவ்பால் சிங் யாதவ் வழிமொழிந்தார்.


அகிலேஷ் யாதவுக்கு 38 வயதாகிறது. உ.பி.முதல்வரானால் இதுவரை பதவி வகித்தவர்களில் இளமையானவர் என்ற பட்டம் அகிலேஷ்க்கு கிடைக்கும்.