★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Wednesday, January 4, 2012

பெரியாறு அணை - நிபுணர் குழு அறிக்கை - maraththami zhar senai

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆலோசனை சொல்ல சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது.   நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினர் டெல்லியில் நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.  அப்போது, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் அணைக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சி.டி. தத்தே, டி.கே. மேத்தா குழுவின் அறிக்கையை ஏற்கக்கூடாது என்று கேரள அரசு வாதிட்டது.
 
 
                                     இதற்கு தமிழக அரசு சார்பில், முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. நிலநடுக்கத்தால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நில நடுக்கங்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட தத்தே, மேத்தா குழுவினர் அறிக்கை குறித்து விவாதிக்க நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு நேற்று 2-வது நாளாக கூடியது. அப்போது தத்தே, மேத்தா குழுவினர் அறிக்கை பிரிக்கப்பட்டு அதில் தெரிவித்துள்ள விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நீண்ட விவாதத்துக்கு பிறகு நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
 
                                    1979-ம் ஆண்டு முதல் முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை. முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவானதாக உள்ளது. நில நடுக்கங்களால் அணைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தொழில்நுட்ப குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
 
                                    2010-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் அணையின் தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மீற முடியாது. எனவே அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க உத்தரவிட முடியாது.தற்போதைய நிலையே நீடிக்கவேண்டும்.
 
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 
                                 தனது இறுதி அறிக்கையை அடுத்த மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவும், அதை இறுதி செய்வதற்காக வருகிற 24, 25-ந்தேதிகளில் மீண்டும் கூடவும் ஆனந்த் குழு முடிவு செய்துள்ளது.