★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Wednesday, January 18, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - புறக்கணிப்போம்

திருநெல்வேலி : சங்கரன்கோவில் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சங்கரன்கோவிலை  அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவை அடுத்து  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் எஸ். முத்துச்செல்வி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துச்செல்வி சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக உள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ., சங்கரலிங்கத்தின் மகள் ஆவார்.


                                                          சங்கரன்கோவில் தொகுதி 1967 முதல் தனித்தொகுதியாக  இருந்து வருகிறது. தொடர்ந்து 45 வருடங்களாக தனித்தொகுதியாகவே இருந்துவரும்  சங்கரன்கோவில் தொகுதியை  பொதுத்தொகுதியாக மாற்றவேண்டுமென மறத்தமிழர் சேனை உள்ளிட்ட அனைத்து பெரும்பான்மை சமூக இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் "தேர்தலை புறக்கணிக்க முடிவு" செய்துள்ளோம்.


                         "இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒருங்கிணைத்த அம்பேத்கர் கூட ரிசர்வு தொகுதிகள் ஒதுக்கீடுகள் பத்தாண்டுகளுக்கு இருந்தால் போதுமென்றுதான் கோரிக்கை வைத்தார். ஆனால் கடந்த 1967 முதல் தொடர்ந்து 45 வருடங்களாக சங்கரன்கோவில் தனித் தொகுதியாகவே இருந்து வருகிறது. கடந்த பல வருடங்களாக சங்கரன்கோவிலை  பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டுமென மறத்தமிழர் சேனை உள்ளிட்ட பெரும்பான்மை சமூக இயக்கங்கள்  தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில்,  தற்பொழுது முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
                      
                      இத்தொகுதியில் வாழுகின்ற 17 சதவிகிதமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மீதமுள்ள 83 சதவிகித பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக மக்களின் அரசியல் உரிமைகளை அடியோடு 50,60 வருடங்களுக்கு தகர்த்தெறிவதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் எங்கள் மீது  மறைமுகத் தீண்டாமையை திணித்து வருகிறது. 'அரசியல் பொருளாதார நிலைகளில் உயர்வடைய' என்ற காரணத்தினால் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையின் மூலம் கருப்பசாமி நான்கு முறையும் இனி சிவப்புசாமி ஏழுமுறையும் எம்.எல்.ஏ., வாக இருந்துவிட்டால் மட்டும் சமூக நீதி ஏற்பட்டுவிடுமா?
                              ரிசர்வு தொகுதிகளை எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. தாழ்த்தப்பட்ட சமூகம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமென்றாலும் ரிசர்வு தொகுதி ஏற்பாடுகளை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் ஒரே தொகுதி நீண்டகாலம் தனித்தொகுதியாகவே இருப்பது நியாயமல்ல. ஒவ்வொரு தேர்தலுக்கும் ரிசர்வு தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் சமூகங்களுக்கிடையே பகைமை ஏற்படாது. தாழ்த்தப்பட்டோரின் அரசியல் தளமும் விரிவடையும்.

                            தற்போதைய சூழலில் 1947 க்கு  பின்பு சுதந்திர இந்தியாவில் பிறந்த தாழ்த்தப்பட்டவர் அல்லாத எந்த குடிமகனும் இந்த தொகுதியில் எம்.எல்.ஏ., ஆக இயலாது என்பது, இது ஒரு சாதி, சமய சார்பற்ற சனநாயக நாடுதான் என்கிற நிலையை கேலிக்குரியதாக மாற்றியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இதைவிட கொடுமை இந்த தொகுதியை பொறுத்த வகையில் நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்தையுமே தனித்தொகுதிகளாக வைத்திருப்பதுதான்.
                       
                       தனித்து களம் கண்டாலே வெற்றி பெற்றுவிடக் கூடிய  அளவில், எங்கள் இனமக்கள் அதிகமாக பரவி வாழக்கூடிய சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த, அருகருகேயுள்ள  இரண்டு தொகுதிகளையும் தொடர்ந்து  தனித்தொகுதிகளாகவே வைத்திருப்பதன் மூலம் ஜமீன்களாகவும், மன்னர்களாகவும், போர்ப்படை தளபதிகளாகவும் உலவிவந்த சொந்த மண்ணிலேயே, எங்களை அடிமைகளாக ஆக்க முயலுகிறார்கள். எங்களின் நியாயமான உரிமைகளையும், உணர்வுகளையும் சிதைத்துவிட்டு இடைத்தேர்தலை நடத்திவிடலாம் என்று தேர்தல் ஆணையம் செயல்படுமேயானால்  நாங்கள் ஒட்டுமொத்தமாக 'தேர்தலை புறக்கணித்து'  வாக்குசாவடிகளுக்கு செல்லமாட்டோம். தேர்தல் நாளன்று வீடுகள் தோறும், கிராமங்கள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி எங்கள் எதிர்ப்புகளை கடுமையாக தெரிவிப்போம்."
                               
                     என்கிற நிலைப்பாட்டை அனைத்து மக்களும் அறிகின்ற வகையில் மறத்தமிழர் சேனையின் சார்பில் அறிவித்து வருகின்றோம். இதனிடையே நடிகர் மு.கார்த்திக் அவர்களை தலைவராக கொண்ட அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வருகின்ற சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. திரைப்பட நடிகர் கார்த்திக் அவர்களுக்கு யாராவது அரசியல் பாடம் நடத்த வேண்டும். அதுவரை இப்படியான கோமாளித்தன அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டே இருப்பார். அவரால் முடிந்தால் ஒரு வேட்பாளரை நிறுத்தட்டும் முடிந்தவரை நம் பலத்தை நாம் நிரூபிக்கலாம். இடைத்தேர்தலில் ஆளும்கட்சியே வெற்றிபெற வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது 'பிரதர்'. இதில் உங்களின் ஆதரவை மதிக்கப் போவதில்லை அவர்கள்.
                     கடந்த சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு  நிகழ்ந்த அவமானம் உங்களுக்கானது  மட்டும் அல்ல.