★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Thursday, July 23, 2015

தமிழகத்தில் புரோட்டா, மைதா தடை வேண்டும்

மிழர்களின் பாரம்பரிய உணவுகளுக்கெதிரான திட்டமிட்ட பிரச்சாரம், மேற்கத்திய கலாச்சார நுகர்வு, தொலைக்காட்சி விளம்பரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான உணவு வகைகளாகிய கேழ்வரகு, குதிரைவாலி, கம்பு, சிறுதானியங்கள் ஆகியவற்றை நாகரிக்கத்தின் பெயரால் இழந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவு பழக்கம் தொழுநோய் போல எல்லா வயதினர்களையும் தொற்றிக்கொண்டது.
குறிப்பாக, தென்தமிழகத்தில் பரவலாக கிடைக்கக்கூடிய கெடுஉணவு பரோட்டா முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய உணவாகும், விதவிதமான வடிவங்களில், சுவைகளில் செய்து தரப்படும் புரோட்டா மனித உடலுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய மைதாவில் தயாராகிறது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பல உலக நாடுகளில் மைதாவின் பயன்பாடு தடை செய்யப்பட்டிருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவின்  தீமைகள் குறித்து  ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

கோதுமை மாவில் பென்சாயல் பெராக்சைட் (benzoyl peroxide ) என்கிற இராசயனத்தைக் கொண்டு மைதாவாக மாற்றுவதாக அறிவியல் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுவதோடு,  மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccharine , Ajino motto போன்ற உபபொருட்களும் சேர்க்கப்படுகிறதாம்.
தலைமுடிக்கு அடிக்கப்படும் சாயக்கலவையில் உள்ள Benzoyl peroxide  ரசாயனத்தால் உருவாக்கப்படும் மைதா உணவுகளை நாம் உட்கொள்ளும் போது  நீரழிவு நோய், சிறுநீரக கல், இருதய கோளாறு ஆகியவை நிச்சயம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மைதா உணவுகளின் அதீத சுவைக்கு கட்டுப்பட்டவர்களாக நாம் சத்துகள் ஏதுமற்ற, ஜீரண சக்திக்கு கெடுதல் செய்யும் புரோட்டா, போண்டா, கேக் ஆகிய மைதா உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து பாரம்பரிய உணவு வகைகளை உண்பதுடன் குழந்தைகளையும் உண்ணச் செய்வோம். தொடர்ந்து தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டப்படும் பன்னாட்டு உணவு வகைகளின் தரம் பற்றிய தெளிவு இல்லாமல் வாங்கும் பழக்கத்தை கைவிடுவோம்.
இந்திய மக்களையும், பாரம்பரிய உணவு முறைகளையும் காக்கும் பொருட்டு  இந்திய அரசு மக்களின் நலன்சார்ந்து செயல்பட்டு உடனடியாக மைதாவை தடை செய்திட வேண்டுமென மறத்தமிழர் சேனை சார்பாக கோரிக்கை வைக்கிறோம். மேலும், பன்னாட்டு ரசாயன கலப்பு உணவுகள் இறக்குமதிக்கு தடைவிதித்து உள்நாட்டு விவசாயத்திற்கு ஏதுவாக இடு பொருள், கடன் உதவி, இயற்கை உரம் ஆகியவற்றில் கவனம் செலுத்திட வேண்டுகிறோம்.