★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Sunday, December 4, 2011

பார்வர்டு பிளாக் கட்சியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

திருச்சி:
                                         "திருச்சி பார்வர்டு பிளாக் கட்சியின் அலுவலகத்தை சூறையாடிவர்கள் மீது கொடுத்த புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்கள் மீது முதல்வரிடம் புகார் கொடுப்பேன்,'' என்று மாநிலச்செயலாளர் கதிரவன் கூறினார்.



                     திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இக்கட்டிடத்தின் உரிமையாளர் சுரேஷ், கட்சியின் நிர்வாகியாக உள்ளார். இக்கட்டிடத்தில் திண்டுக்கல் வேலுநாயுடு பிரியாணி என்ற பெயரில் கடை வைத்துள்ள கார்த்திக், "கடையை காலி செய்ய மறுத்ததால், சுரேஷ் கடையை அடித்து நொறுங்கியதாக' உறையூர் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.

                         கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த சிலர், ஃபேன், கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரை போலீஸார் வாங்க மறுத்துவிட்டனர்.
பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலச்செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான கதிரவன் நேற்று காலை கட்சி அலுவலகத்தை பார்வையிட்டார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


                                இதுகுறித்து கதிரவன் கூறியபோது, ""ஒரு தேசிய கட்சியின் அலுவலகத்தை சூறையாடிய கார்த்திக்கை உடனடியாக கைது செய்ய வேண்டும். எங்கள் கட்சி நிர்வாகி சுரேஷ் கொடுத்த புகாரை போலீஸார் வாங்க மறுக்க, இன்ஸ்பெக்டர்கள் நுண்ணறிவுப்பிரிவு சுகுமார், உறையூர் பால்சுதர் தான் முக்கிய காரணம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வரை சந்தித்து புகார் கொடுக்க உள்ளேன்,'' என்றார். எம்.எல்.ஏ., கதிரவன் தலைமையில், கட்சியினர் கரூர் பைபாஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தநிலையில், திடீரென சாலைமறியல் செய்ய முயன்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

                     நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மறத்தமிழர் சேனை கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வழியுறுத்துகிறது.

-maraththamilar senai