★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, January 6, 2017

தூரி எம்.ஆர். இராமசாமித் தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி மீண்டும் கடிதம்

மறைந்த மாபெரும் தியாகியும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் உற்ற நண்பருமாகிய முதுகுளத்தூர் தூரி கிராமத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திடவும், அவரது பிறந்த நாளில் அரசு விழா எடுத்திடவும் வலியுறுத்தி தமிழக முதலைச்சரின் தனிப்பிரிவில் மறத்தமிழர் சேனை சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு குறித்து பரிசீலிக்கும்படி இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் முதல்வர் அலுவலகம் கோரியிருந்த நிலையில், இராமநாதபுரம், (ஊராட்சிகள்) உதவி இயக்குநர் திரு ஆ.செல்லத்துரை அவர்கள் 28.12.16 அன்று மாநில அமைப்பாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் இன்று (06.01.2017) இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் “இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.


தெய்வத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களோடு சேர்ந்து நாட்டின் விடுதலைக்காக பலமுறை சிறை சென்றதோடு, தேவரைப் போலவே தமது வாழ்வையும் திருமணம் செய்யாமலேயே நாட்டிற்காக அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார். வேலூர் மத்திய சிறை, பெல்லாரி மத்திய சிறை – ஆந்திரா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறைகளில் கைதியாக இருந்த இவரது தியாகத்தைப் போற்றும் விதமாக, இந்தியாவின் 25 வது சுதந்திரதின விழாவின் போது, அன்றைய பிரதம அமைச்சர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் 15.08.1972 அன்று மத்திய அரசின் சார்பில் சிறந்த சுதந்திரப் போராட தியாகி என தாமிர பத்திரம் வழங்கி கெளரவித்துள்ளார்.

தேவர் திருமகனாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது மறைவுக்குப் பிறகு தமது 49 வது வயதில் திருமணம் செய்தவரான இவரது நாட்டுப்பற்றிற்கு சான்றாக தேவர் திருமகனார் தமது சொத்துகளில் ஒரு பாகத்தை இவரது பெயருக்கு எழுதி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவியான இரா.பூமயில் அவர்கள் தற்போது மத்திய / மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெற்று வருகிறார். கடந்த 1989 ஆம் வருடம் ஆகஸ்ட் 05 அன்று திரு.இராமசாமித்தேவர் அவர்கள் மரணம் அடைந்து விட்டார். அவரது தியாக உடல் அவரது சொந்த கிராமமான முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு, அவரது பிறந்த மற்றும் இறந்த நாட்களில் கிராம மக்களால் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டுமென அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மறத்தமிழர் சேனை சார்பாகவும் தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவிலும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை கோரிக்கை மனு அளித்து வந்துள்ளோம்.

தற்போது, இராமநாதபுரம், (ஊராட்சிகள்) உதவி இயக்குநர் திரு ஆ.செல்லத்துரை அவர்கள் 28.12.16 அன்று எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உச்சநீதிமன்ற உத்தரவையும், அரசு கடிதங்களையும் காரணமாக வைத்து அரசு ஆணை பெறப்படும் வரை அனுமதி வழங்க இயலாது என்பது போல தெரிவித்துள்ளார். நாங்கள் கோருவது அரசின் சார்பிலேயே மணிமண்டபம் அமைப்பது ஆகும். மேலும், உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவுக்குப் பிறகும் இந்தியா முழுவதும் பிரதமர், மத்திய மாநில அமைச்சர்கள், முதல்வர்கள், சபாநாயகர்கள், கட்சி தலைவர்கள் பல்வேறு இடங்களில் புதிய சிலையை நிறுவியும் திறந்தும் வருகிறார்கள். மணிமண்டபங்களும் அரசின் சார்பில் அமைக்கப்பட்டே வருகின்றன.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு 10 கோடி மதிப்பில் அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கும் பணி 16-10-2016 அன்று நமது மாவட்டத்திலேயே துவங்கியுள்ளது. இதுபோல தமிழக அரசின் சார்பில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயனுக்கு மணிமண்டபம் – நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் என 18.01.2013 க்குப் பிறகும் நூற்றுக்கணக்கான இடங்களில் சிலைகளும், மணிமண்டபங்களும் அமைக்கப்பட்டே வருகிறது.


எனவே, தாங்கள் எனது மீள்மனு மீது கூடுதல் கவனம் செலுத்தி உண்மைத்தியாகிகளின் வாழ்விற்கு அங்கீகாரமும் – மரியாதையும் செலுத்துவதில் பெரும் முனைப்போடு செயல்படும், தமிழக அரசின் சார்பில் தியாகி, தூரி எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்களின் நாட்டுப்பற்றையும், தியாக்கத்தையும் போற்றும் விதத்தில், இவரது பிறந்த நாளில் (30.09.1914) அரசு விழா எடுத்திடவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் தமிழக அரசு அரசு ஆணை வெளியிட, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பரிந்துரை செய்திடுமாறு தங்களை மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பாகவும், முதுகுளத்தூர் வட்டார கிராம பொதுமக்கள் சார்பாகவும் பணிவோடு வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.