★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Wednesday, February 29, 2012

முதல்வருடன் கூடங்குளம் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை

சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் கூடங்குளம் போராட்டக்குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கூடங்குளம் போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் உட்பட 4 பேர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு தாக்கல் செய்த அறிக்கைப்பற்றி பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.


உதயகுமார் பேட்டி

கூடங்குளம் மக்களின் அச்சம் பற்றி முதல்வருடன் விவாதிக்கப்பட்டதாக போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் உதயகுமாருடன் 4 பேர் பங்கேற்றனர். ஜெயலலிதா உடனான 15 நிமிட சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயகுமார் கூடங்குளம் வட்டார மக்களை சந்திக்குமாறு முதல்வரிடம் கேட்டுகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 


இனியன் குழு மீது புகார்

இனியன் தலைமையிலான குழு கூடங்குளத்தில் 2 மணி நேரமே இருந்தது என்று புகார் தெரிவித்துள்ளார். கூடங்குளம் வட்டார மக்களை சந்தித்து  வல்லுனர் குழு கருத்து கேட்கவில்லை எனவும் முதல்வரிடம் கூடங்குளம் போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் புகார் தெரிவித்துள்ளார். அணு உலை கட்டிடம் குறித்து எனக்கு எந்தவித ஐயமும் இல்லை எனவும் அணு உலைகளிலிருந்து வரும் கதிரியக்க கசிவு குறித்தே மக்களிடம் அச்சம்  நிலவுகிறது என்றும் கதிரியக்க கசிவு குறித்து விஞ்ஞானிகள் முரண்பட்ட தகவல்களை தருவதாகவும் உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆயுள் காலம் முடிந்த பிறகு கூடங்குளம் அணுமின் நிலையம் செயலிழக்க செய்யப்படும் என்றும் அவ்வாறு செயலிழக்க செய்யும்போது ஏற்படும் விளைவுகள்  குறித்து விளக்கம் அளிக்கவும் முதல்வரிடம் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.