★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★
Showing posts with label உரை வீச்சு. Show all posts
Showing posts with label உரை வீச்சு. Show all posts

Monday, February 24, 2014

பாரத் சேனா கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

பாரத் சேனா கட்சியின் கோவை மாநகர மாவட்டத்தின் சார்பில் 23.02.14, அன்று மாலை 6.00 மணியளவில் கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகில் மாபெரும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு பாரத்சேனா மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் கோவை எஸ்.ஆர்.ஜெகதீஸ் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் டவுன்ஹால் பிரேம்ஜீ அவர்களும் பி.ஜெ.குமார் அவர்களும் முன்னிலை வகித்தனர். பாரத்சேனா மாநில பொதுச்செயலாளர் செந்தில்கண்ணன் அவர்களும், மாநில அமைப்பு செயலாளர் உங்கள் சிவா அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

Tuesday, October 2, 2012

மது ஒழிப்பு பொதுக்கூட்டம் மறத்தமிழர் சேனை கொள்கை முழக்கம்

றத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில் தமிழத்திலே நிலவக்கூடிய மதுவிற்பனை என்னும் அரக்கனை ஒழித்திட தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டினம் நகர், சேதுராஜா தெருவில் மதுவிலக்கினை அமல்படுத்திட வலியுறுத்தி 30-09-2012 அன்று மாலை 6.00 மணியளவில் மதுஒழிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனை திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் காயல் எம்.முருகன் அவர்கள் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் துர்க்கை ஈஸ்வரன் அவர்கள், மாவட்ட துணைத்தலைவர் நங்கை எஸ்.முருகன் அவர்கள், மாவட்ட பொருளாளர் கே.சந்தானக்கிருஷ்ணன் அவர்கள், காயல்பட்டினம் நகர தலைவர் எஸ்.காசிபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தனர். 

Friday, March 18, 2011

தமிழர் களம்- கரூரில் புதுமலர் பேச்சு.

தேடிச் சோறுநிதந் தின்று – பல
         சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
         வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
         கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
          வீழ்வே னென்று நினைத் தாயோ ?
                                     என்கிற மகாகவியின் வரிகளுக்கு ஒப்பான வாழ்வை, இத்தரணியிலே மேற்கொண்டு உதாரண கர்த்தாக்களாக திகழ்கின்ற தனித்தமிழர் சேனையின் தலைவர் அய்யா நகைமுகன் அவர்களே, எங்கெல்லாம் தமிழன் ரத்தம் சிந்துகின்றானோ அங்கெல்லாம் தனது குருதியும் கொட்டப் பட்டதாக துடிதுடித்துப் போகும் உணர்ச்சிக் கவிஞர் அய்யா காசி ஆனந்தன் அவர்களே, தமிழ் நிலத்திற்கு ஒவ்வாத திராவிட அரசியலை வேரறுக்க நித்தமொரு களம் காணும் அறிஞர் குணா அவர்களே, எழுகதிர் ஆசிரியர் அருகோ அவர்களே, தன்மானத் தமிழ் மறவர் கூட்டமைப்பின் தலைவர் புலவர்.பாவிசைக்கோ அவர்களே, மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் செந்தில்மள்ளர் அவர்களே, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களே, இந்த கரூர் மாநகரத்திலே தமிழர்களத்தின் சார்பில் இங்கே சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தமிழர் பெருவிழா மாநாட்டிற்கு அழைத்து எமக்கும், எமது இயக்கத்திற்கும் பெருமை சேர்த்த தமிழர்களம் பொதுச்செயலாளர் அண்ணன் திரு.அரிமாவளவன் அவர்களே, நாம் தமிழர் இயக்கத்தின் செரோன் அவர்களே, கூட்டத்திலே பெருந்திரளாக கலந்து கொண்டிருக்கிற ஆன்றோர்களே, சான்றோர்களே, உங்கள் அனைவருக்கும் நான் சார்ந்த மறத்தமிழர் சேனையின் சார்பில்