★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★
Showing posts with label கீழத்தூவல். Show all posts
Showing posts with label கீழத்தூவல். Show all posts

Thursday, September 14, 2017

60 ஆம் ஆண்டு கீழத்தூவல் தியாகிகள் ஐவர் வீரவணக்க கூட்டம் மறத்தமிழர் சேனை சார்பில் நடைபெற்றது.

பரமக்குடி, செப்.14, பரமக்குடியில் கீழத்தூவல் தியாகிகள் ஐவர் வீரவணக்க அறுபதாம் ஆண்டு நாளை முன்னிட்டு மறத்தமிழர் சேனை சார்பில் பரமக்குடி தேவர் மகாலில் கீழத்தூவல் தியாகிகள் ஐவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், ஐவர் நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்து மணிமண்டபம் அமைக்க வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளின் உடல்குறித்த உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். வறுமையில் வாடும் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடும், தகுதிக்கு ஏற்ப அரசுப்பணியும் வழங்கிட வேண்டும். பரமக்குடி வைகை ஆற்றை தூய்மைப்படுத்தி குடிநீர் திருட்டை தடுத்திட வேண்டும். வைகை ஆற்றில் கட்டிட, குப்பை கழிவுகளை கொட்டுகிறவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் பாண்டித்துரை தேவர், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் சி.எம்.டி.ராஜா, மறத்தமிழர் சேனை மாநில துணைப்பொதுச் செயலாளர் முத்துக்குமார பாண்டியன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நவநீதன், மறத்தமிழர் சேனை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன், வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மதுரைவீரன் ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை மாநில மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ் தேவன், தேசிய முக்குலத்தோர் கழகம் மாநில பொதுச்செயலாளர் மனோஜ்பாண்டியன், மூமுக மாவட்ட செயலாளர் வீ.எம்.சேகர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாணவர் அணி செயலாளர் அடைக்கலம், அதிமுக நகர் மீனவரணி துணை தலைவர் இராமகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் கார்த்திக்சேதுபதி, துரைப்பாண்டியன், பசும்பொன் தேசிய கழகம் சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய.பாரதி தேவர், வெள்ளைச்சாமி தேவர் பாசறை சிவகங்கை வடக்கு மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் பெரியமந்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மறத்தமிழர் சேனை பரமக்குடி ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

Sunday, September 10, 2017

கீழத்தூவல் படுகொலை

கீழத்தூவல் துப்பாக்கி சூடு மாமறவர்கள் ஐவர் வீரவணக்க நாள் நிகழ்வில் மறத்தமிழர் சேனை பங்களிப்புகள்



Thursday, August 25, 2011

வேங்கைகள் வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம்

1957 ம் வருடம் கீழத்தூவல் ( keezhaththooval ) மண்ணில் காமராஜ் நாடாரின் வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட கீழத்தூவல் வேங்கைகள் ஐவருக்கு  வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற உள்ளது.

செப்-14 மாலை 4 .00 மணியளவில் நடைபெறுகின்ற பேரணியிலும், மாலை 6.00 மணியளவில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்திலும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் P.V.கதிரவன் அவர்கள், திரைப்பட நடிகர் கருணாஸ் அவர்கள், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள், பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி அவர்கள், தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை தலைவர் எஸ்.ஆர்.தேவர் அவர்கள்,  தமிழ்நாடு தேவர் பார்வர்டு பிளாக் தலைவர் இரா.ஜெயச்சந்திர தேவர் அவர்கள், தேவர் தேசிய பேரவை தலைவர் K.C.திருமாறன் அவர்கள்,வீரகுல அமரன் இயக்க தலைவர் கி.இரா.முருகன் அவர்கள், முக்குலத்தோர் எழுச்சி கழகம் தலைவர் V.K.கவிக்குமார் அவர்கள், வீரத்தமிழர் முன்னணி தலைவர் மு.இரா. சிறுவயல் ரமேஷ் அவர்கள், கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.

Monday, November 29, 2010

கீழத்தூவல் நினைவேந்தல் 2010 - வேங்கைகள் வீரவணக்க நாள்

1957 ம் வருடம் கீழத்தூவல் ( keezhaththooval ) மண்ணில் காமராஜ் நாடாரின் வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட கீழத்தூவல் வேங்கைகள் ஐவருக்கு  53 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம் 14.09.2010 அன்று மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தலைமையில் கீழத்தூவல் கிராமத்தில் நடைபெற்றது. 

கிராம பொதுமக்களின் சார்பில் காலை 10.00 மணியளவில் இறந்துபோன ஐவரின் நினைவாக முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் கட்டப்பட்டுள்ள நினைவுத்தூன் அருகில் பொங்கல் வைத்து, தேங்காய் பழம், மாலைகளோடு  வழிபாடு நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த இளைஞர்கள் பெருந்திரளாக 'நினைவு ஜோதி' எடுத்து ஓடி வந்தனர்.  கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.