★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★
Showing posts with label அறிக்கைகள். Show all posts
Showing posts with label அறிக்கைகள். Show all posts

Friday, January 6, 2017

தூரி எம்.ஆர். இராமசாமித் தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி மீண்டும் கடிதம்

மறைந்த மாபெரும் தியாகியும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் உற்ற நண்பருமாகிய முதுகுளத்தூர் தூரி கிராமத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திடவும், அவரது பிறந்த நாளில் அரசு விழா எடுத்திடவும் வலியுறுத்தி தமிழக முதலைச்சரின் தனிப்பிரிவில் மறத்தமிழர் சேனை சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு குறித்து பரிசீலிக்கும்படி இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் முதல்வர் அலுவலகம் கோரியிருந்த நிலையில், இராமநாதபுரம், (ஊராட்சிகள்) உதவி இயக்குநர் திரு ஆ.செல்லத்துரை அவர்கள் 28.12.16 அன்று மாநில அமைப்பாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் இன்று (06.01.2017) இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் “இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.

Thursday, December 15, 2016

உறுப்பினர்கள் தகுதி இழப்பு : தலைமை முடிவு

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் (15.12.2016) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
                                                        
“மறத்தமிழர் சேனை இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி, பல்வேறு வகையான தொடர்  சிக்கல்களுக்கு, சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும், கடந்த எட்டு ஆண்டு காலத்தில் இயக்க நலன் சார்ந்து கொள்கை மாறாமல் பயணிக்கும் அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

தங்களின் மேலான அர்ப்பணிப்பு உணர்வு, தியாக மனப்பாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலப்பு மண எதிர்ப்பு – சுய சாதி காப்பு – முக்குலத்தோருக்கான அதிகார மீட்டல் – மேலாதிக்க சுரண்டல் அழிப்பு – தனித்தொகுதி மாற்றல் – வரலாற்று மீட்பு – தியாகிகள் நினைவு போற்றல் – தமிழ்த் தேசிய அரசியல் பார்வை – தனித்தமிழ் வளர்ப்பு – போதையற்ற தமிழர் நிலம் என தொடர்ந்து  மறத்தமிழர் சேனை தனக்கென தனித்த அடையாளங்களோடு செயல்பட்டு வருகிறது. இத்தனைகளையும் சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் இயக்கம் என்றென்றும் கடமைப்பட்டது ஆகிறது.

ஆயினும், இயக்கத்தின் கட்டாய நெறிமுறைகளில் ஒன்றானது, உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தங்களது உறுப்பினர் நிலையை புதுப்பித்துக் கொண்டு புதிய அடையாள அட்டை பெற்றுவிட வேண்டும் என்பது ஆகும். அந்த வகையில், கடந்த 2009 – 2010 – 2012 – 2015 – நவ 2016 ஆகிய வருடங்களை முடிவு கால அளவாகக் கொண்டு, தற்போது வரை புதுப்பித்துக் கொள்ளாமல் நீடித்து வரும் அனைத்து உறுப்பினர்களையும் இன்று முதல் தற்காலிக தகுதி நீக்கம் செய்து அறிவிக்கிறேன்.

உறுப்பினர்கள் / நிர்வாகிகள் தங்களது உறுப்பினர் நிலையை ஜனவரி -15 க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் தகுதி நீக்கம் நிரந்தரமாக்கப்படும் என்பதையும், அந்தந்த இடங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் இதன் மூலம் அறிவுறுத்துகிறேன். கள ஆய்வு / விமர்சனக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும், புதிய உறுப்பினர்கள் அனைவரையும் தொகுத்து வெளியீடாக வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” என வெளியிட்டுள்ளார். 

Sunday, June 14, 2015

மறத்தமிழர் சேனை 1,08,000 பார்வையாளர்களைக் கடந்துள்ளது, வணங்குகிறோம்.

பிறந்த பொழுதே இறந்து போவோமென அறிந்து வாழும் அடலேறுகளே ! வணக்கம்.

                       இந்த உலகத்திலே பிறந்த ஒவ்வொரு மனிதனும், தான் பிறந்து வளர்ந்ததற்கு அடையாளமாக எதையேனும் விட்டுவிட்டு செல்லவேண்டும். அப்பொழுதுதான் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். இல்லையென்றால் "கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே" நாமும் வரலாறு அற்ற, மறந்துபோன இறந்து போனவர்களில் ஒருவராக ஆகித்தான் ஆவோம். இந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மறத்தமிழர் சேனை இணையதளம் தொடங்கப்பட்ட மிகக்குறுகிய நாட்களிலேயே 1,08,000  உறவுகளை தாண்டி வெற்றிநடை போடுகிறது. நாங்கள் இணையத்தில் மட்டும் இயங்கும் 'வாய்ச்சவடால்' அமைப்பு அல்ல. அதே சமயம் இணைய அரசியலிலும் எங்களால் சிறப்பாக இயங்கமுடியும் என்பதற்கான அத்தாட்சி இது. 

                     இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இதனை, இத்தனை எளிதில் சாத்தியமாக்கிய மறத்தமிழர் சேனை நிர்வாகிகளையும், எங்கள் மீது அளவிடமுடியாத பிரியங்கொண்ட உறவினர்களையும், எவ்வளவு சிறப்பான செயல்களையும் ஒருநொடியில் உதறிவிட்டு தொடர்ந்து விமர்சிக்கும் ஆலோசகர்களையும், நெடிய பயணத்தில் உடன்வருவதைப் போல் நடித்து எங்களை பலவீனப்படுத்த முயற்சிக்கும் சக இயக்கத்தார்களையும், எதிரியாகவே இருந்தாலும் என்னதான் எழுதுகிறார்கள் என்று தினந்தினம் எங்களை பார்வையிடும் மாற்று சமூகத்தார்களையும் பெருமையுடன் வணங்குகிறோம்.
   
                                              இது நம் சமூகத்திற்கான வெற்றி. 

Saturday, June 29, 2013

விழித்தெழும் காலம் வந்துவிட்டது

வீரமிகு தேவரினமே நீ விழித்தெழும் காலம் வந்துவிட்டது.அமைதியின் பெயரால் இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் இமை மூடிக்கிடக்க வேண்டும்?
அடித்திடச் சீறுகின்ற ஆற்றலின் வர்க்கம் நீ!
உன் துடித்திடும் தோள்கள் எங்கே?
வெடித்திடும் வெற்றி முழக்கமெங்கே?
சரித்திரம் சுழழும் போதும், சமுத்திரம் குமுறும் போதும் 
பொறுத்தவன் பொங்கியெழும் போதும்,
புயல் காற்று சீறும் போதும்,
எரிமலை வெடிக்கும் போதும், இனமானம் சிதறும் போதும்
எதிர்த்தவன் வென்றதில்லை,
எவரும் இதை மறுப்பதில்லை;

பாண்டியனின் பங்காளி நீ! சோழனின் சொந்தம் நீ! சேரனின் சந்ததி நீ! மூவேந்தர், முக்கொடி, முத்தமிழ் என மும்முரசார்த்து, செங்கோலோச்சிச்  செழுங்கலை வளர்த்து. அறநெறி வழுவா அரசர்களும், நடுநிலை பிறவா நாயகர்களும், கொள்கையிற் சிறந்த கோமான்களும், நானிலம் போற்ற நாடாண்ட நங்கையர் திலகங்களும், அடிமையிருள் நீக்கப் பாடுபட்ட அடலேறுகளும், விடுதலைப்பண்பாடி வீறுகொண்டெழுந்த வீராமணிகளும் தோன்றிய  

Monday, April 2, 2012

நான் ஒரு குற்றப் பரம்பரையினன் . . .

                          நான் ஒரு குற்றப் பரம்பரையினன் என்று மார்தட்டிச் சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். ஏனென்றால் இந்த சட்டம்தான் எங்களின் எதிர்ப்பு அரசியலின் வீரத்தையும், விவேகத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தியது. வருகின்ற ஏப்ரல்-03 அன்று பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூடு நினைவு நாள்.

                          இயற்கையின் இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த சமூக, பழங்குடிகளில் ஒன்றான பிரமலைக் கள்ளர் இனத்தின் மீது சுரண்டல்களின் ஒட்டுமொத்த பழியையும் சுமத்தி சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததிலிருந்து, ஆண்ட பரம்பரையின் ஆளுமை வேகத்தை அடக்கி வைப்பதற்காக சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் குற்றப்பரம்பரைச் சட்டம்.

                         
                              காடுகட்டி நாடாண்ட கள்ளர்கள் கைநாட்டு வைப்பதா ? அகிலம் ஆண்ட நம் மீது கரும்புள்ளி வைத்திட, வந்தேறிக் கூட்டத்தின் வழிகாட்டுதலின் படி, வியாபார நோக்கில் வந்து நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையன் கொண்டு வந்த  குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, மானத்தைக் காக்க மரணத்தை முத்தமிட்ட பெருங்காமநல்லூர்  மாமறவர்கள் 17 பேர்களையும்  வணங்கி, வீர வணக்கம் செலுத்துவோம்.

                                20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, உலக அரசியல் அரங்கில் ஆங்கிலேய அரசுக்கு அச்சம் ஏற்படும் நிலை வந்தது. நாட்டுப் பற்றுடன் அரசாங்கத்தை எதிரியாக நினைத்து சட்டங்களையும் அதிகாரங்களையும் வெறுத்து வரும் தன்னரசு பற்றுதல் கொண்ட மானமுள்ள மறத்தமிழர் சேனைக் கூட்டங்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் சட்டப் பூர்வமாக ஒடுக்கி வைத்திருக்க முற்பட்டனர்.

                    அதன் காரணமாகவே இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களில் பூலம், ஆப்பநாடு, முதுகுளத்தூர் முதலிய இடங்களில் ரேகைச் சட்ட அமுல் பிரகடனம் செய்யப்பட்டது. இன்றைய தமிழீழம் முள்வேலி முகாம்களைப் போல 1930 களில் 1,35,000 பேர்  கைரேகைகள் பதியப்பட்டு தடுப்புக் காவலில் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் காங்கிரசும், திராவிட இயக்கத்தினரும் அதிகாரத்திற்காக ஆங்கிலேயரிடம் கை கட்டி நின்றுகொண்டிருந்தனர்.                    

Sunday, November 13, 2011

நாம் எங்கே செல்கிறோம் ?



தமிழர் நாடு! தமிழர் தேசியம்! மறத்தமிழர் சேனை!

1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது! ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

Tuesday, September 6, 2011

தேவரினம் தேவையில்லை - மறத்தமிழர் சேனை

  மறத்தமிழர் சேனை (maraththamizhar senai) இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் தேவரினம் தேவையில்லை  என்கிற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


Monday, August 8, 2011

தேவர் குல மரபு எது ?

மறத்தமிழர் சேனை இயக்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கை 

                                                                 தேவர் குல மரபு 


மரணமடையாமளிருப்பதால் வாழ்ந்து கொண்டிருக்கிற பலரை பார்க்கும்
போது எதையுமே தீர்மானிக்க முடியவில்லை.  தங்களுக்கு ஒரே ஒரு முறை  
கிடைத்த  இந்த மகத்தான வாழ்க்கையை நன்கு அனுபவித்து, வேறெந்த 'வலி'களுமின்றி இறந்து போகலாமென எண்ணுகின்றார்கள் போலும். மண்ணுலகைவிட்டு நீங்கி பல நூற்றுஆண்டுகளாகியும் வாழ்ந்து கொண்டிருக்கும் 'அவர்களைப்' பற்றிய நினைவு இவர்களுகேது ? சாவு பற்றிய பயமே , வாழ்வை இறுகப் பற்றிக் கொள்ளச்செய்கிறதோ!  ஒரு யுத்தத்தை வென்றவர்களில் சிலர் அரியணைக்கும் வேறு சிலர்  சிறைச்சாலைக்கும்
போவார்கள் . இது உலக நியதேயே ! சிறைச்சாலைகளின் 'நெடிய துயரங்களை '
எண்ணி போரைத் துறக்கும் மரபினர் அல்ல நாமனைவரும் .

Friday, January 7, 2011

தேவரின தோன்றல்களே வணக்கம் - maraththamizhar senai

மீண்டும் பெருமை அடைகிறோம் நீங்கள் எங்களிடம் வந்து சேர்ந்ததற்காக.

நமக்கிடையில் "அரசியல் " ஒரு பிரச்சனையாக இனி என்றுமே இருக்க முடியாது . நாம் விலகி விலகிச் செல்ல வேண்டிய அவசியமே இனி இல்லை. இருப்பதையும் நாங்கள் விரும்பவில்லை. அனைவரும் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறோம். "அரசியல் இனி நமக்கு அடிமை". நாம் அதற்கு அடிமையாயிருந்து சிதறிய காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது.

இனி அதிகமாக பேசலாம். பயந்து பயந்து குறைவாக பேசவே வேண்டாம்.