-புதுமலர் பிரபாகரன்
“சுதந்திரமானது இன்னும் களத்தடி நெல்லாகவே இருக்கிறது. கருக்காய், கரும்புழுதி, இடையிடையே வைக்கோல், செத்தையெல்லாம் நிரம்பியதாகவே இருக்கிறது. இது அப்படியே களஞ்சியத்திற்கு போய் சேருமா? சேராது. சேரக்கூடாது. காலம் வரும்போது காற்றில் தூற்றி கழிக்க வேண்டியவற்றைத் தானாகவே கழித்து விட வேண்டும்.”
“சுதந்திரமானது இன்னும் களத்தடி நெல்லாகவே இருக்கிறது. கருக்காய், கரும்புழுதி, இடையிடையே வைக்கோல், செத்தையெல்லாம் நிரம்பியதாகவே இருக்கிறது. இது அப்படியே களஞ்சியத்திற்கு போய் சேருமா? சேராது. சேரக்கூடாது. காலம் வரும்போது காற்றில் தூற்றி கழிக்க வேண்டியவற்றைத் தானாகவே கழித்து விட வேண்டும்.”
-தேவர் திருமகனார்.
உலகின் மிகப்பெரிய
ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்கிற பெருமிதங்களுக்கு மத்தியில் சுதந்திர
இந்தியாவில் பிறந்திருந்தும்,
மக்கள் செல்வாக்கு அமைந்திருந்தும் தம் வாழ்நாள் முடிவதற்குள் ஒருமுறையேனும்
சட்டமன்ற: நாடாளுமன்ற அவைகளுக்குள் நுழைந்து விட முடியாதா என்கிற ஏக்கத்துடன் தமது
அரசியல் சுதந்திரத்தின் எல்லை குறித்த
எவ்வித விவாதமுமின்றி கடந்து செல்லும் தலித்துகள் அல்லாத 83சதவிகித இந்திய
பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை
மக்களும், கிருத்துவ, முஸ்லீம் சிறுபான்மை மக்களும் மிகக்சரியாக தமது எதிர்கால அரசியல் குறித்த
பார்வைகளை / உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது.
இந்திய அரசியலமைப்பை ஒருங்கிணைத்த அம்பேத்கார்கூட
தனித்தொகுதி ஒதுக்கீடுகள் பத்தாண்டுகளுக்கு இருந்தால் போதுமென்றுதான் கோரிக்கை
வைத்தார். அடிமை இந்தியாவில் முஸ்லீம்கள், கிருத்துவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும்
தலித்துகள் என அனைவருக்குமே இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட்டன. கால நீட்சியில் அவை
ஒவ்வொன்றாக நீக்கப்பட்டுவிட்டன. ஆனால், சுதந்திர இந்தியாவில் சகல
அறங்களையும் துடைத்துவிட்டு தலித்துகளுக்கு மட்டுமே இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு
வருகிறது.
தலித் என்கிற அடையாளத்தின் பிறிதொரு முகமாக
நிரந்தர வாய்ப்புகள் என்பது வலுவாக கட்டமைக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களும்
எஸ்.சி./எஸ்.டி ஊழியர்களால் நிரம்பி வழியும் இன்றைய சூழலிலும், அரசியலில் முழுமையான ஆதிக்கசக்தியாக தலித்துகள் மாறிவிட்ட நிலையிலும் தனித்தொகுதி அரசியல் நீக்கப்படாமல், காலநீட்டிப்பு செய்யப்பட்டு நூற்றாண்டுகளை
நிறைவு செய்ய உள்ளது. அதனினும் கொடுமையாக பல தொகுதிகள் தொடர்ந்து 53 வருடங்களுக்கும் மேலாக தனித்
தொகுதிகளாகவே இருந்து வருவதும், அவை மீண்டும் மீண்டும்
பொதுத்தொகுதிகளாக மாற்றப்படாமல் தனித்தொகுதிகளாகவே நீட்டித்து வரப்படுவதும்
வாடிக்கை ஆகிவிட்டது.
