★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★
Showing posts with label மது ஒழிப்பு. Show all posts
Showing posts with label மது ஒழிப்பு. Show all posts

Tuesday, October 2, 2012

மது ஒழிப்பு பொதுக்கூட்டம் மறத்தமிழர் சேனை கொள்கை முழக்கம்

றத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில் தமிழத்திலே நிலவக்கூடிய மதுவிற்பனை என்னும் அரக்கனை ஒழித்திட தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டினம் நகர், சேதுராஜா தெருவில் மதுவிலக்கினை அமல்படுத்திட வலியுறுத்தி 30-09-2012 அன்று மாலை 6.00 மணியளவில் மதுஒழிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனை திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் காயல் எம்.முருகன் அவர்கள் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் துர்க்கை ஈஸ்வரன் அவர்கள், மாவட்ட துணைத்தலைவர் நங்கை எஸ்.முருகன் அவர்கள், மாவட்ட பொருளாளர் கே.சந்தானக்கிருஷ்ணன் அவர்கள், காயல்பட்டினம் நகர தலைவர் எஸ்.காசிபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.