பசும்பொன் தேசிய கழகம் தலைவரும், தேவரின் பேரனும், எங்களுக்கெல்லாம் நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசியல் களத்திலே போராளியாக சுழன்று வந்தவருமான கோவில்பட்டி நா.வெள்ளைச்சாமித் தேவர் அவர்கள் இன்று (07-11-11) மதியம் மாரடைப்பில் மரணம் அடைந்தார்.
புளிச்சிக்குளம் எஸ்டேட்டில் பொதுமக்கள் பார்வைக்கு அவர்களது தெய்வீக உடலுக்கு இன்று இரவு 7 -00 மணியளவில் மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், காடுவெட்டியார், சிற்றரசு, தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா, ந.இந்திரகுமார், நகைச்சுவை நடிகர் கருணாஸ், மதுரை மாவட்டசெயலாளர் மு.முத்துக்குமார், பரமக்குடி ஒன்றிய செயலாளர் மகாதேவன், பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.