★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Wednesday, February 29, 2012

முதல்வருடன் கூடங்குளம் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை

சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் கூடங்குளம் போராட்டக்குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கூடங்குளம் போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் உட்பட 4 பேர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு தாக்கல் செய்த அறிக்கைப்பற்றி பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.


உதயகுமார் பேட்டி

கூடங்குளம் மக்களின் அச்சம் பற்றி முதல்வருடன் விவாதிக்கப்பட்டதாக போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் உதயகுமாருடன் 4 பேர் பங்கேற்றனர். ஜெயலலிதா உடனான 15 நிமிட சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயகுமார் கூடங்குளம் வட்டார மக்களை சந்திக்குமாறு முதல்வரிடம் கேட்டுகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

Monday, February 27, 2012

மறத்தமிழர் சேனை 50,000 உறவுகளை தாண்டுகிறது , வணங்குகிறோம்

மறத்தமிழர் சேனை இணையதளம் தொடங்கப்பட்ட மிகக்குறுகிய நாட்களிலேயே  50,000 உறவுகளை தாண்டி வெற்றிநடை போடுகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இதனை, இத்தனை எளிதில் சாத்தியமாக்கிய மறத்தமிழர் சேனை நிர்வாகிகளையும், எங்கள் மீது அளவிடமுடியாத பிரியங்கொண்ட உறவினர்களையும், எவ்வளவு சிறப்பான செயல்களையும் ஒருநொடியில் உதறிவிட்டு தொடர்ந்து விமர்சிக்கும் ஆலோசகர்களையும், நெடிய பயணத்தில் உடன்வருவதைப் போல் நடித்து எங்களை பலவீனப்படுத்த முயற்சிக்கும் சக இயக்கத்தார்களையும், எதிரியாகவே இருந்தாலும் என்னதான் எழுதுகிறார்கள் என்று தினந்தினம் எங்களை பார்வையிடும் மாற்று சமூகத்தார்களையும் பெருமையுடன் வணங்குகிறோம்.
   
                                              இது நம் சமூகத்திற்கான வெற்றி. 

Sunday, February 26, 2012

பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்



-இரா.சுந்தரவந்தியத்தேவன்

சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் நூலின் முன்னுரை:

காடுகட்டி நாடாண்ட வரலாறும் குற்றப்பரம்பரையான கதையும்
-ப. சரவணன்
                                             1
பிரித்தானியக் காலனித்துவ ஆட்சி இந்தியாவில் வலுவாக வேரூன்றிய பிறகு, கி.பி. 1800களில் சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. மாகாணத்தை உருவாக்கியதுமே, காலனிய அரசு, கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் அரசின் நிதி நிலையை உயர்த்திட ரெவின்யூ போர்டு (Board of Revenue), டிரேட் போர்டு (Board of Trade & வணிகம்) ஆகியவற்றை நிறுவித் தங்களது நலன்களைப் பெருக்குவதில் தனிக்கவனம் செலுத்தியது.

கட்டபொம்மன் ( கெட்டி பொம்மு நாயக்கன் ) முதல் விடுதலை போராட்ட வீரனா ?


சில வரலாற்று பதிவுகள் .....
கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும் , அவன் வெள்ளையருக்கு எதிராக போர்புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது . வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம் நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல . நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்.

தமிழ் நாடா? திராவிட நாடா?

- தி.பரமேசுவரி 

கருணாநிதி

“1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பின் வழிகாட்டியாக இருந்த டாக்டர் நடேசனார்தான் திராவிட இயக்கத்தின் நிறுவனர். 1913 ஆம் ஆண்டு நடந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவில் திராவிடர் சங்கம் என அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டாக்டர் நடேசனார் தொடங்கிய திராவிடர் சங்கம்தான் இன்று வளர்ந்துள்ள மொழி உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதி ஆகியவற்றுக்கு அடித்தளம் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை தி.மு.க சார்பில் ஆண்டு முழுவதும் திராவிடர்களாகிய நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். இது தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விழா, தன்மான உரிமைத் திருவிழா என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்” என்று மானமிகு முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழக மக்களை... தவறு... திராவிட மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Thursday, February 23, 2012

வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை

சென்னையை கலக்கிய வங்கி கொள்ளையர்கள் சென்னை வேளச்சேரி அருகில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொள்ளையர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கொள்ளையர்கள் பதிலுக்கு தாக்கியதில் 2 காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 2 போலீசாரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த போலீசாரை பார்த்து ஆணையர் திரிபாதி ஆறுதல் கூறினார்.

தமிழக நிபுணர் குழுவினர் மக்களுக்கு எதிராக அறிக்கை அளித்தால் அணுமின் நிலையம் முற்றுகை: கூடங்குளம் போராட்டக்குழு அறிவிப்பு

ராதாபுரம், பிப்.23-
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின் நிலையத்தை மூடக்கோரி அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினர், போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Sunday, February 5, 2012

பரமக்குடி துப்பாக்கி சூடு மறத்தமிழர் சேனை கூட்டுசதி மருதமலர் குற்றச்சாட்டு

பரமக்குடி துப்பாக்கி சூடு குறித்து தாழ்த்தப்பட்டவர்களின் சார்பில் வெளிவரும்  மருதமலர் என்கிற இதழ், தனது 2011 - டிசம்பர் மாத பதிப்பில் பக்கம் 27 ல்   மறத்தமிழர் சேனையின் கூட்டுசதியால்தான் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது என குற்றம்சாட்டியுள்ளது. 

                         அதன் பிரதி 


சங்கரன்கோவில் - மறத்தமிழர் சேனை - தமிழக அரசியல்

"சங்கரன்கோவில் தொகுதியை பொதுத்தொகுதி ஆக்கு!" சர்ச்சையைக் கிளப்பும்   மறத்தமிழர் சேனை 
             என்கிற தலைப்பில்  தமிழக அரசியல் பத்திரிகையில் 28.01.2012 அன்று, பக்கம்  28 & 29 வெளியான செய்தி. 



Saturday, February 4, 2012

ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு - maraththamil ar senai

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. சிதம்பரம் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை 65 பக்கங்கள் கொண்‌டதாக இந்த தீர்ப்பின் அமைந்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கி‌ய முற்போக்கு கூட்டணி அரசு நிம்மதி அடைந்திருக்கிறது .