★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Saturday, July 28, 2012

viruthunagar

மறத்தமிழர் சேனை "விருதுநகர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்" 29-07-2012 அன்று மாலை 4.00 மணியளவில் விருதுநகரில் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் M.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் மாநில அமை...ப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், மாநில துணைப் பொதுச் செயலாளர் T.R.K.மணிகண்டன் அவர்கள், மாநில தொண்டர் சேனை செயலாளர் பசும்பொன் மு.முத்துக்குமார் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Thursday, July 5, 2012

அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயற்குழு


அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டமும், இராமநாதபுரம் மாவட்ட அரசியல் ஆலோசனை கூட்டமும் 03-07-2012 அன்று கமுதி தேவர் மகாலில் மாலை 03.00 மணியளவில் தமிழ் மாநில பொதுச்செயலாளர் P.V.கதிரவன் M.L.A அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.   

கூட்டத்தில் பார்வர்ட் பிளாக் மாநில தலைவர் M.K.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மாநில தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் R.மாயத்தேவன், திருப்பூர் ராஜசேகர், திண்டுக்கல் ஜெயராமன், கமுதி ராஜேஸ்வரன், முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநில தொழிலாளர் அணிச்செயலாளர் ஆனந்தமுருகன் இராமநாதபுரம் மறவர் முன்னேற்ற சங்கம் தலைவர் முத்துப்பாண்டி, செல்வக்குமார், தெளிச்சாத்தநல்லூர் மாரிசெல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கமுதி கோட்டைமேட்டில் அமைந்துள்ள தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எவ்வித வளர்ச்சியுமின்றி இருப்பதால் உடனடியாக அரசு தலையிட்டு I.A.S அளவில் நிர்வாக அதிகாரியை நியமித்து பல்வேறு சிறப்பு பாடபிரிவுகள் மற்றும் கட்டிடம் விடுதி போன்ற வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


              மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில் “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களாலும், வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களாலும் வழிநடத்தப்பட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியானது, தேவர் தந்த தேவர் P.K.மூக்கையாத் தேவர் அவர்களுக்குப் பிறகு ஒரு திறமையான, வலிமையான தலைவர் இன்றி திணறிவருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் கட்சியான பார்வர்ட் பிளாக் கட்சி உசிலம்பட்டி தொகுதிக்குள் மட்டுமாக முடங்கி போய்விட்டது. இந்நிலை மாறவேண்டுமெனில் அந்தந்த பகுதிக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும். விரிவான செயல்திட்டமும், செயல் படுத்துவதற்கு ஆனந்தமுருகனைப் போன்ற தன்னலமில்லா போராளிகளையும் உருவாக்க வேண்டும். வலுவான போராட்டங்களும், முறையான நடைமுறை விதிகளும் பின்பற்றப்படாத எந்த இயக்கமும் பின்னடைவை சந்திக்கும் என்பதற்கு பார்வர்ட் பிளாக் முன்னுதாரணம் ஆகிவிட்டது. தற்பொழுது திரு கதிரவன் அவர்கள் உசிலம்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆளும் கூட்டணி அரசிலும் அங்கம் வகிக்கிறார். இத்தகைய சூழலில் தமிழக முதல்வரிடம் நம் இனம் சார்ந்த, நலன் சார்ந்த முக்கியமான முடிவுகளில் ஒப்புதல் வாங்கிவிடலாம். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அவர்களின் திருநாமத்தை சூட்ட வலியுறுத்தி கடந்த 20 வருடங்களாக போராடிவருகிறோம்.  தமிழக அரசிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவேயில்லை. ஆனால் எந்தவிதமான போராட்டத்தையும் நடத்தாமலே இம்மானுவேலுவின் சமாதிக்கு 2.60 கோடி பணத்தை பொதுப்பணித்துறை மூலமாக பெற்றுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட அரசாணையின் மூலமாக, சேதுபதிசீமையில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் சிலை அமைக்கப்பட்டு விடும் என்கிற நம்பிக்கையில் மண் விழுந்ததுதான் முக்கியம்.

     இன்றைய தமிழக அரசு நமது உரிமைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. உண்மையான தியாகிகளுக்கு மதிப்பளிக்கப் போவதுமில்லை. ஆக இந்த குள்ளநரித்தனங்களை தட்டிக்கேட்கும் இடத்திலே இருக்கக்கூடிய தாங்கள் தான் இதனை சீர்செய்திட வேண்டும். அப்படி செய்கின்ற பொழுதில் இந்த இயக்கம் தானாகவே வலுப்படத் தொடங்கும் என்பதில் ஐயமில்லை” என்று கூறினார்.  

Tuesday, June 26, 2012

மன்னர் முத்துவடுகநாதத் தேவர் 240 வது நினைவுநாள் விழா

வானமே வசப்படினும், மானமே பெரிதென வாழும் மறத்தமிழர் கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனையின் வீரவணக்கம்.

சிவகங்கை சீமை ஆண்ட வீரமறவன் மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதத் தேவர், கௌரி நாச்சியார் அவர்களின் 240 வது நினைவுநாள் விழா 25-06-2012 அன்று மாலை 4.00 மணியளவில் காளையார்கோவில் மன்னர் மாலையீடில் நடைபெற்றது. 

சங்க கால இலக்கியங்களிலும், இந்த ஈராயிரம் ஆண்டுகளில் சில நூற்றாண்டுகளில் வரலாற்றிலும் பதிவான தமிழினத்தின் வீர வரலாறு எங்கள் சிவகங்கை சீமை மண்ணில் வெளிப்பட்டது.

இந்த வீரத்திருமகனின் வாழ்க்கையே , தமிழினத்தின் கைகளில் உள்ள அத்துணை காவியங்களில், இலக்கியங்களில் கூறப்பட்ட வீர வரலாறுகள் யாவும் உண்மையே என்பதை நிரூபணமாக்கியது.

மறத்தமிழர் சேனையை கட்டமைத்து ‘எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு, 240 வது நாளான இன்று (25-06-2012) மாலை 4.50 மணியளவில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.


எதிர்வரும் காலங்களில் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களின் புகழை இளைஞர்களிடம் எடுத்துசெல்லும் விதமாக; மன்னரது வீரவரலாற்றை மாணவர்களிடம் பரப்பும் விதமாக இந்நிகழ்வை மிகப்பிரமாண்டமாக நடத்துவது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

Tuesday, June 19, 2012

சேதுபதி தேசிய நெடுஞ்சாலை பெயர்ப்பலகை நீக்கம்

இராமநாதபுரம் பசும்பொன் நகர் சாலை விலக்கிலிருந்து இராமேஸ்வரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 49 க்கு "சேதுபதி தேசிய நெடுஞ்சாலை" என்கிற பெயரை மத்திய அரசு சூட்டியது. இது அவர்களே வலிய சூட்டியதில்லை. பாம்பன் பாலம் கட்டிய தருணத்தில் அந்தபாலத்திற்கு இராமநாதபுரம் மன்னர்கள் சேதுபதி பெயர் சூட்ட தமிழ்நாடு தேவர் பேரவை கோரிக்கை வைத்தது. அதனை மறுத்து இந்திராகாந்தி பெயர் வைக்க முயற்சி மேற்கொண்டனர். இதனை கடுமையாக எதிர்த்த தேவர்களுக்கு அஞ்சி அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி பாலம் திறக்கும் தேதியை தள்ளிவைத்து சமாதானம் பேச முற்பட்டதன் விளைவாக அந்த சாலைக்கு சேதுபதி பெயரும் பாலத்திற்கு இந்திராகாந்தி பெயரும் வைக்கப்பட்டது.
தற்போது தேசிய நெடுஞ்சாலையில் "சேதுபதி தேசிய நெடுஞ்சாலை எல்கை ஆரம்பம்" என்கிற பெயர் பலகையை நெடுஞ்சாலை துறையினர் நீக்கியுள்ளனர். இதனை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மறத்தமிழர் சேனையின் சார்பாக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து தேவர்களின் அடையாளங்களை அழிக்க முற்படும் மத்திய அரசை கண்டித்து போராட்டகளம் புக தயாராக இருங்கள்.
 
 
 

Monday, June 18, 2012

அகில இந்திய பார்வர்டு பிளாக் - மறத்தமிழர் சேனை சந்திப்பு


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக இலங்கை பயணம் மேற்கொண்டு, போரினால் காயம்பட்ட ஈழ மக்களை சந்தித்து ஆறுதல்கூறி, கள ஆய்வு நடத்தி அவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை கண்டறிந்து இன்று (16-06-2012) காலை தாயகம் திரும்பிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக பொதுச்செயலாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமாகிய அண்ணன் P.V.கதிரவன் அவர்களை இன்று மாலை மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் சந்தித்து நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். உடன் மாநில தொண்டர்சேனை செயலாளர் பசும்பொன் மு.முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள்.

மறத்தமிழர் சேனை கொடி விளக்கம்.

கொடியிலே இடம்பெற்றுள்ள சிவப்பு நிறம் நம் முன்னோர்களின் தியாகத்தையும், போரினால் இழந்த குருதியையும் நினைவு படுத்தும். மனிதன் உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் கீழ்நோக்கி மண்ணிலே விழுகின்றன என்பதால் கொடியின் கீழ்ப்பகுதி சிவப்பு நிறத்தில் உள்ளது. மஞ்சள் நிறம் குருதி இழந்து நாம் அடையும் வெற்றியை குறிக்கும். வெற்றி க்கான , மங்களகரமான நிறம் மஞ்சள் , நாம் அடைந்த வெற்றியின் பயனாக ஏற்றப்படும் கொடியானது மேல்நோக்கியே ஏற்றப்படும். ஆகவே கொடியின் மேல்பகுதி மஞ்சள் நிறத்தில் உள்ளது. நடுவில் அமைக்கப்பட்டுள்ள வில், அம்பு, புலி மூவேந்தர்களையும், மூவேந்தர்களின் வழித்தோன்றல் நாம் என்பதையும் நினைவு படுத்தும் வகையிலே நமது கொடி அமைக்கப்பெற்றது.

மூவேந்தர்களாகவும் , மூவேந்தர்களின் படை மரபினர்களாகவும் வாழ்ந்த நம் முன்னோர்கள் போரும் , போர் நிமித்தமான வாழ்வுமாக இந்த உலகிலே நடமாடியவர்கள். அவர்கள் எந்த நிழையிலும் உலவுத்தொழிலை செய்தவர்கள் அல்ல. எனவேதான் நம் கொடியில் பச்சை நிறம் இடம்பெறவில்லை. மறத்தமிழர் சேனை கொடிக்கான விளக்கம் இதுவே, இந்த பதிவை வாசித்த, நேசித்த, துவேசித்த உங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும்.

Thursday, June 14, 2012

தொண்டி நகரம் - எஸ்.வையாபுரிப் பிள்ளை

தமிழ்நாட்டுப் பண்டை நகரங்களுள் ஒன்றாகிய தொண்டியின் வரலாறு தமிழ்நாகரிகத்தின் தொன்மைக்கு ஓர் அறிகுறி. இந்தப் பெயரை அறியாதவர்கள் மிகச் சிலரே. இராமநாதபுரம் ஜில்லாவில் இராமநாதபுரத்திற்குச் சில மைல் தூரத்தில் தொண்டி என்னும் ஒரு சிறு நகரம் இருக்கிறது. அதைத்தான் நம்மவர் சிலர் கேட்டிருக்கலாம். அதற்கு மிகமிக முற்பட்டு, சுமார் 2000 வருஷங்களுக்கு முன், சிறந்து விளங்கிய தொண்டி என்ற நகரம் ஒன்று மேல்கடற் கரையிலே இருந்தது. சேரனுக்குரிய ஒரு கடற்கரை பட்டினமாக இது விளங்கியது. இந்தப் பட்டினம் தமிழுலகில் மட்டும் பெருமை பெற்றிருந்தது அன்று. எகிப்திய கிரேக்கனொருவன் எழுதிய பெரிப்ளூஸ் என்ற பிரயாண நூலில் இந்நகரத்தைக் குறித்திருக்கிறான். இந்நூல் தோன்றிய காலம் சுமார் கி.பி.60. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று டாக்டர் ஷாவ் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில், தொண்டி கேரளபுத்திர ராஜ்யத்தைச் சார்ந்த மிகப் பிரசித்தி பெற்ற பட்டினம் என்றும், முசிறிப் பட்டினத்திற்கு 500 ஸ்டேடியா (சுமார் 57 1/2 மைல்) தூரத்தில் கடற்கு அருகில் தனிப்பட்ட சிறப்புடன் விளங்கி நின்றது என்றும், இரண்டு பட்டினங்களையும் இணைத்து ஓர் ஆறு ஓடியதென்றும் குறிக்கப் பட்டிருக்கிறது.