★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, July 4, 2014

ஸ்ரீமான் பாஸ்கர சேதுபதி

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்


இராமநாதபுரம் அரசராக இருந்து புகழ்பெற்ற ஸ்ரீமான் பாஸ்கர சேதுபதியவர்களை அறியாத தமிழர் இரார்; சற்றேறக்குறைய 40 வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை அவர் திருவிடைமருதூருக்கு வந்து ஒரு மாதம் அத்தலத்தில் தங்கியிருந்தார். அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் தலைவராக விளங்கிய ஸ்ரீ அம்பலவாண தேசிகர் திருவிடைமருதூரிலேயே இருந்து வந்தனர். இராமநாதபுர ஸமஸ்தானத்திலிருந்து திருவாவடுதுறையாதீனத்திற்கு மகமைகளும் வேறு வரும்படிகளும் உண்டு. ஆதலின் இரண்டு இடங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அம்பலவாண தேசிகர் அரசரையும் அவருடைய பரிவாரங்களையும் மிகவும் செவ்வையாக உபசரித்து வந்தார். அவருடைய உபசாரங்களிலும் ஸ்ரீ மகாலிங்கமூர்த்தியின் தரிசனத்திலும் சேதுபதி மன்னர் ஈடுபட்டு மகிழ்ந்தனர். அச்சமயம் ஒவ்வோரு நாளும் ஒரு திருவிழாவாக இருந்தது.

வரலாறு - சாதிகளின் வரலாறு


வரலாறு - சாதிகளின் வரலாறு

கள்ளர் எனப்படுவோர் தமிழகத்திலே தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் குறிக்கும். இப்பொழுது இக்குழுவினரில் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.

முக்குலத்தோர் (தேவர்)
முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

Monday, February 24, 2014

பாரத் சேனா கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

பாரத் சேனா கட்சியின் கோவை மாநகர மாவட்டத்தின் சார்பில் 23.02.14, அன்று மாலை 6.00 மணியளவில் கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகில் மாபெரும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு பாரத்சேனா மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் கோவை எஸ்.ஆர்.ஜெகதீஸ் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் டவுன்ஹால் பிரேம்ஜீ அவர்களும் பி.ஜெ.குமார் அவர்களும் முன்னிலை வகித்தனர். பாரத்சேனா மாநில பொதுச்செயலாளர் செந்தில்கண்ணன் அவர்களும், மாநில அமைப்பு செயலாளர் உங்கள் சிவா அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

Tuesday, August 20, 2013

MARATHTHAMIZHAR SENAI


MARATHTHAMIZHAR SENAI | மறத்தமிழர் சேனை | maravar | kallar | agamudaiyar World No.1 Tamil Website

Saturday, June 29, 2013

விழித்தெழும் காலம் வந்துவிட்டது

வீரமிகு தேவரினமே நீ விழித்தெழும் காலம் வந்துவிட்டது.அமைதியின் பெயரால் இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் இமை மூடிக்கிடக்க வேண்டும்?
அடித்திடச் சீறுகின்ற ஆற்றலின் வர்க்கம் நீ!
உன் துடித்திடும் தோள்கள் எங்கே?
வெடித்திடும் வெற்றி முழக்கமெங்கே?
சரித்திரம் சுழழும் போதும், சமுத்திரம் குமுறும் போதும் 
பொறுத்தவன் பொங்கியெழும் போதும்,
புயல் காற்று சீறும் போதும்,
எரிமலை வெடிக்கும் போதும், இனமானம் சிதறும் போதும்
எதிர்த்தவன் வென்றதில்லை,
எவரும் இதை மறுப்பதில்லை;

பாண்டியனின் பங்காளி நீ! சோழனின் சொந்தம் நீ! சேரனின் சந்ததி நீ! மூவேந்தர், முக்கொடி, முத்தமிழ் என மும்முரசார்த்து, செங்கோலோச்சிச்  செழுங்கலை வளர்த்து. அறநெறி வழுவா அரசர்களும், நடுநிலை பிறவா நாயகர்களும், கொள்கையிற் சிறந்த கோமான்களும், நானிலம் போற்ற நாடாண்ட நங்கையர் திலகங்களும், அடிமையிருள் நீக்கப் பாடுபட்ட அடலேறுகளும், விடுதலைப்பண்பாடி வீறுகொண்டெழுந்த வீராமணிகளும் தோன்றிய  

Saturday, October 27, 2012

மாவீரர்களின் 211 வது குருபூஜை விழா

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 211 வது குருபூஜை விழா 27-10-2012 அன்று மறத்தமிழர் சேனை சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டது.













எழுச்சிமிக்க கூட்டத்தின் நடுவே மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் 





மேலும் செய்திகள் விரைவில் ஏற்றப்படும்.









Tuesday, October 2, 2012

மது ஒழிப்பு பொதுக்கூட்டம் மறத்தமிழர் சேனை கொள்கை முழக்கம்

றத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில் தமிழத்திலே நிலவக்கூடிய மதுவிற்பனை என்னும் அரக்கனை ஒழித்திட தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டினம் நகர், சேதுராஜா தெருவில் மதுவிலக்கினை அமல்படுத்திட வலியுறுத்தி 30-09-2012 அன்று மாலை 6.00 மணியளவில் மதுஒழிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனை திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் காயல் எம்.முருகன் அவர்கள் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் துர்க்கை ஈஸ்வரன் அவர்கள், மாவட்ட துணைத்தலைவர் நங்கை எஸ்.முருகன் அவர்கள், மாவட்ட பொருளாளர் கே.சந்தானக்கிருஷ்ணன் அவர்கள், காயல்பட்டினம் நகர தலைவர் எஸ்.காசிபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.