★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Sunday, June 14, 2015

மறத்தமிழர் சேனை 1,08,000 பார்வையாளர்களைக் கடந்துள்ளது, வணங்குகிறோம்.

பிறந்த பொழுதே இறந்து போவோமென அறிந்து வாழும் அடலேறுகளே ! வணக்கம்.

                       இந்த உலகத்திலே பிறந்த ஒவ்வொரு மனிதனும், தான் பிறந்து வளர்ந்ததற்கு அடையாளமாக எதையேனும் விட்டுவிட்டு செல்லவேண்டும். அப்பொழுதுதான் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். இல்லையென்றால் "கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே" நாமும் வரலாறு அற்ற, மறந்துபோன இறந்து போனவர்களில் ஒருவராக ஆகித்தான் ஆவோம். இந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மறத்தமிழர் சேனை இணையதளம் தொடங்கப்பட்ட மிகக்குறுகிய நாட்களிலேயே 1,08,000  உறவுகளை தாண்டி வெற்றிநடை போடுகிறது. நாங்கள் இணையத்தில் மட்டும் இயங்கும் 'வாய்ச்சவடால்' அமைப்பு அல்ல. அதே சமயம் இணைய அரசியலிலும் எங்களால் சிறப்பாக இயங்கமுடியும் என்பதற்கான அத்தாட்சி இது. 

                     இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இதனை, இத்தனை எளிதில் சாத்தியமாக்கிய மறத்தமிழர் சேனை நிர்வாகிகளையும், எங்கள் மீது அளவிடமுடியாத பிரியங்கொண்ட உறவினர்களையும், எவ்வளவு சிறப்பான செயல்களையும் ஒருநொடியில் உதறிவிட்டு தொடர்ந்து விமர்சிக்கும் ஆலோசகர்களையும், நெடிய பயணத்தில் உடன்வருவதைப் போல் நடித்து எங்களை பலவீனப்படுத்த முயற்சிக்கும் சக இயக்கத்தார்களையும், எதிரியாகவே இருந்தாலும் என்னதான் எழுதுகிறார்கள் என்று தினந்தினம் எங்களை பார்வையிடும் மாற்று சமூகத்தார்களையும் பெருமையுடன் வணங்குகிறோம்.
   
                                              இது நம் சமூகத்திற்கான வெற்றி. 

Tuesday, June 2, 2015

மாமன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்

சிவகங்கை சீமையின் இரண்டாம் மாமன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் அவர்களின் நினைவேந்தல் விழா ஜூன்-25 அன்று காளையார்கோவில் மாலையீட்டில் நடைபெற உள்ளது.

Thursday, May 14, 2015

மீத்தேன் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 22 இடங்களில் ONGC மூலம் மீத்தேன் எடுக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இன்று (14.05.15) காலை 10.00 மணியளவில் கருத்துக்கேட்பு கூட்டம் இராமநாதபுரம் ஆட்சியர் க.நந்தகுமார்  தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் ராஜேந்திர பாபு, உதவி ஆட்சியர் வினித் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


தமிழகத்தின் இயற்கை வளமும், கனிம வளங்களும் முன்னமே சிதைக்கப்பட்டு வருகின்றன.  இராமநாதபுரம் மாவட்டம் கடும் வறட்சியான பகுதியாகவும், சீமைக்கருவேல மரங்களின் கொடிய ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து  பெருமளவில் விவசாயமும் அழிந்து வருகிறது. இந்நிலையில், வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படும் வகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விவசாய நிலங்களை கைப்பற்றி கிணறுகள் அமைப்பது மேலும் பல இடர்களை ஏற்படுத்தும். ஆகவே மறத்தமிழர் சேனை சார்பில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கடும் எதிர்ப்பை வாக்குமூலமாகவும், எழுத்து பூர்வமாகவும் பதிவு செய்தார்கள்.

Friday, July 4, 2014

கள்ளர்- முக்குலத்தோர் (தேவர்)-பல்லவர்

கள்ளர்
தமிழகத்திலே தஞ்சை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் கள்ளர் என வழங்கப்படுகிறது. இப்பொழுது இக்குழுவினரில் நீதி மன்றங்கள் பலவும் அமைத்துத் தமது நாட்டினை ஆட்சிபுரிந்து வருகின்ற ஓர் மன்னரும், குறுநில மன்னராய் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி

வீரமும் மானமும் விஞ்சியவர் தமிழ் மறவர். இவர்களது தொன்மையையும், வாழ்க்கைச் சிறப்பையும் சங்க இலக்கியங்களான அகநானுhறு , புறநானுhறு, நற்றினை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை ஏற்றிப் போற்றுகின்றன. விழுடககொடை மறவர், பினைகழல் மறவர், பெருந்தொடை மறவர் என்பன அந்த இலக்கியங்கள்மறவர்களுக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள்.
எதிரி எமனாக இருந்தாலும் அவனை அழித்து ஒழிப்பவர் மறவர் என, பகை என கூற்றம் வரினும் தொலையான் என்பது மறவர்களுக்குக் கூலித் தொகை கூறும் கட்டியமகும். பத்தாம் நுhற்றாண்டில் சோழர்கள் பெரும் நிலை எய்துவதற்கும், பதின்மூன்றாம் நுhற்றாண்டில் பிற்காலப் பேரரசர்களாகப் பாண்டியர் பெருமிதம் கொள்வதற்கும் அரசப்படையாக நின்று உதவியவர்கள் இந்த மறவர்கள். இவர்கள் மிகுதியாகவும் தொகுதியாகவும் வாழ்ந்த நாடு (இன்றைய இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகள்) மறவர் சீமை என வாலாற்றில் குறிக்கப்படுகிறது.

இவர்களது மூத்தகுடிமகனான மறவர் சீமை மன்னர், " புனித சேது காவலன்" என வழங்கப்பட்டார். கி.பி. பதினைந்தாம் நுhற்றாண்டு முதல் தமிழ்மொழிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள மகத்தான பங்கு காலத்தால் மறைக்க முடியாதது. அவர்களது வீரம், கொடை, புலமை ஆகியவற்றைப் போற்றும்

ஸ்ரீமான் பாஸ்கர சேதுபதி

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்


இராமநாதபுரம் அரசராக இருந்து புகழ்பெற்ற ஸ்ரீமான் பாஸ்கர சேதுபதியவர்களை அறியாத தமிழர் இரார்; சற்றேறக்குறைய 40 வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை அவர் திருவிடைமருதூருக்கு வந்து ஒரு மாதம் அத்தலத்தில் தங்கியிருந்தார். அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் தலைவராக விளங்கிய ஸ்ரீ அம்பலவாண தேசிகர் திருவிடைமருதூரிலேயே இருந்து வந்தனர். இராமநாதபுர ஸமஸ்தானத்திலிருந்து திருவாவடுதுறையாதீனத்திற்கு மகமைகளும் வேறு வரும்படிகளும் உண்டு. ஆதலின் இரண்டு இடங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அம்பலவாண தேசிகர் அரசரையும் அவருடைய பரிவாரங்களையும் மிகவும் செவ்வையாக உபசரித்து வந்தார். அவருடைய உபசாரங்களிலும் ஸ்ரீ மகாலிங்கமூர்த்தியின் தரிசனத்திலும் சேதுபதி மன்னர் ஈடுபட்டு மகிழ்ந்தனர். அச்சமயம் ஒவ்வோரு நாளும் ஒரு திருவிழாவாக இருந்தது.

வரலாறு - சாதிகளின் வரலாறு


வரலாறு - சாதிகளின் வரலாறு

கள்ளர் எனப்படுவோர் தமிழகத்திலே தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் குறிக்கும். இப்பொழுது இக்குழுவினரில் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.

முக்குலத்தோர் (தேவர்)
முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.