★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Thursday, December 15, 2016

உறுப்பினர்கள் தகுதி இழப்பு : தலைமை முடிவு

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் (15.12.2016) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
                                                        
“மறத்தமிழர் சேனை இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி, பல்வேறு வகையான தொடர்  சிக்கல்களுக்கு, சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும், கடந்த எட்டு ஆண்டு காலத்தில் இயக்க நலன் சார்ந்து கொள்கை மாறாமல் பயணிக்கும் அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

தங்களின் மேலான அர்ப்பணிப்பு உணர்வு, தியாக மனப்பாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலப்பு மண எதிர்ப்பு – சுய சாதி காப்பு – முக்குலத்தோருக்கான அதிகார மீட்டல் – மேலாதிக்க சுரண்டல் அழிப்பு – தனித்தொகுதி மாற்றல் – வரலாற்று மீட்பு – தியாகிகள் நினைவு போற்றல் – தமிழ்த் தேசிய அரசியல் பார்வை – தனித்தமிழ் வளர்ப்பு – போதையற்ற தமிழர் நிலம் என தொடர்ந்து  மறத்தமிழர் சேனை தனக்கென தனித்த அடையாளங்களோடு செயல்பட்டு வருகிறது. இத்தனைகளையும் சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் இயக்கம் என்றென்றும் கடமைப்பட்டது ஆகிறது.

ஆயினும், இயக்கத்தின் கட்டாய நெறிமுறைகளில் ஒன்றானது, உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தங்களது உறுப்பினர் நிலையை புதுப்பித்துக் கொண்டு புதிய அடையாள அட்டை பெற்றுவிட வேண்டும் என்பது ஆகும். அந்த வகையில், கடந்த 2009 – 2010 – 2012 – 2015 – நவ 2016 ஆகிய வருடங்களை முடிவு கால அளவாகக் கொண்டு, தற்போது வரை புதுப்பித்துக் கொள்ளாமல் நீடித்து வரும் அனைத்து உறுப்பினர்களையும் இன்று முதல் தற்காலிக தகுதி நீக்கம் செய்து அறிவிக்கிறேன்.

உறுப்பினர்கள் / நிர்வாகிகள் தங்களது உறுப்பினர் நிலையை ஜனவரி -15 க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் தகுதி நீக்கம் நிரந்தரமாக்கப்படும் என்பதையும், அந்தந்த இடங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் இதன் மூலம் அறிவுறுத்துகிறேன். கள ஆய்வு / விமர்சனக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும், புதிய உறுப்பினர்கள் அனைவரையும் தொகுத்து வெளியீடாக வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” என வெளியிட்டுள்ளார். 

Monday, November 28, 2016

குற்றப்பரம்பரை அரசியல் - பெருங்காமநல்லூர் வீரம்

பிரித்தானியக் காலனித்துவ ஆட்சி இந்தியாவில் வலுவாக வேரூன்றிய பிறகு, கி.பி. 1800களில் சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. மாகாணத்தை உருவாக்கியதுமே, காலனிய அரசு, கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் அரசின் நிதி நிலையை உயர்த்திட ரெவின்யூ போர்டு (Board of Revenue), டிரேட் போர்டு (Board of Trade & வணிகம்) ஆகியவற்றை நிறுவித் தங்களது நலன்களைப் பெருக்குவதில் தனிக்கவனம் செலுத்தியது. இதே நேரத்தில் உதயமான இந்தியத் தேசியக் காங்கிரஸ்’ (1885) கட்சியின் செயல்பாட்டினால் கலக்கமுற்ற காலனிய அரசு, தன்னுடைய அதிகாரத்தை மேலும் பலப்படுத்த எத்தனித்தது.- குறிப்பாக, ‘சூரத் மாநாட்டில் (1907) காங்கிரசாரிடையே ஏற்பட்ட மிதவாத & தீவிரவாதப் பிளவின் காரணமாக உருவான திலகரின், தலைமையிலான தீவிரவாத அமைப்பினரின் செயல்பாட்டினை எதிர் கொள்ள முடியாது அது திணறியது.

இத் தீவிரவாத அமைப்பை ஒடுக்கி அடக்குவதற்காகச் சட்டவிடிவிலான பல்வேறு சதிகளைப் பிரிட்டிஷ் அரசு தீட்டியது. இதன் மறு பகுதியாக, இங்குப் பரம்பரையாக உடல் வலிமை கொண்டு செல்வாக்குச் செலுத்திவந்த சில தீரமான உள்நாட்டுக் குழுக்களையும் எதிர் கொள்ளும் வகையில் & அவர்களையும் தம் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்து அடிமைப்படுத்தும் நோக்கில் & பல குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் காலனிய அரசு குற்றவியல் பரம்பரைச் சட்டம் & 1871’ (Criminal Tribes Act 1871) போன்ற சட்டங்கள், மேலும், உள்ளூர் பிரஜைகள் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்வதைத் தடுத்து நிறுத்தவும், முஸ்லீம்களைக் காங்கிரசிலிருந்து தனிமைப்படுத்தவும் பல்வேறு தந்திரோபாயங்களை மேற் கொண்டது. (தமிழகத்தில், பிறமலைக் கள்ளர்கள் காங்கிரசில் சேருவதைப் பெரும்பாலும் தடுத்து நிறுத்தியதற்காகக் கள்ளர் சமூக அபிவிருத்திஅதிகாரியாகப் பணி புரிந்த கி.ரி. இராஜா அய்யருக்கு வெள்ளைய அரசு ராவ்பகதூர்பட்டம் வழங்கியது. முஸ்லீம்களுக்குச் சலுகைகள்அளித்துக் காங்கிரசிலிருந்து பிரித்ததை, ‘மிண்டோ மார்லிசீர்திருத்தம் அம்பலப் படுத்தியது. இவற்றையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.)

Thursday, November 17, 2016

தூரி இராமசாமித்தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட மறத்தமிழர் சேனை கோரிக்கை

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சேவகராகவும் வாழ்ந்து மறைந்த பெரியவர் தூரி இராமசாமித் தேவர் அவர்களின் பிறந்த நாளில் அரசு விழா எடுக்கவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இன்று (17.11.16) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இதனை தாங்கள் பல முறை தங்களது சுதந்திர தின உரைகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.

Monday, November 14, 2016

சீர்மரபினர் மக்களின் உண்ணாநிலை அறப்போராட்டம்

ரமக்குடி, 13.11.016 அன்று சீர்மரபினர் பட்டியலில் இருக்கக்கூடிய சாதியினர்களை மீண்டும் டி.என்.டி என அறிவித்து சாதிச் சான்றிதழ் வழங்கிட வலியுறுத்தி தேவரினப் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் தலைமையில் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் அனைத்து அமைப்புகளும் பங்கேற்ற உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் C.M.T.ராஜாஸ் தேவர் அவர்கள், தேவரினப் புலிப்படை மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

சீர்மரபினர் சாதிப் பட்டியலில் வரக்கூடிய 68 சாதிகளுக்கும் துரோகம் இழைக்கும் விதமாகப் போடப்பட்ட அரசாணை எண் 1310 / நாள்: 30.07.1979 ஐ ஆளுகின்ற அதிமுக அரசு உடனே ரத்து செய்திடவும், பத்து சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கிடவும் வலியுறுத்தி அனைவரும் பேசினர்.

மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் பேசுகையில் மறவர் கள்ளர் இன மக்களின் பண்டைய வாழ்க்கை முறை பற்றியும் அவர்களின் மீது குற்றப்பரம்பரைச் சட்டம் புகுத்தப்பட்டதன் காரணங்கள் குறித்தும், இன்றைய தேவரின இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டங்கள் குறித்தும், சுதந்திரத்திற்காக ஒரு சிறு அசைவைக்கூட செய்திடாத தலித் மக்கள் இன்று இட ஒதுக்கீட்டு முறைகளால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிரம்பி வழிகிற நிலைகுறித்தும் விளக்கிப் பேசியதோடு, தமது நீண்ட நாளைய கொள்கை முழக்கமான விகிதாச்சார இட ஒதுக்கீடு கோரிக்கையில் இருந்து தற்போதைய தேவையான டி.என்.டி போராட்டங்களின் அவசியம் குறித்தும் பேசினார்.

Sunday, November 13, 2016

இராமநாதபுரம் சீர்மரபின நல சங்க உண்ணாநிலை போராட்டம்

இராமநாதபுரம் மாவட்ட சீர்மரபினர் நல சங்கம் 13.11.016 அன்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பாக உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது. மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தென்மண்டல தலைவர் மு.செந்தூர்பாண்டியன் அவர்கள், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் C.M.T.ராஜாஸ் தேவர் அவர்கள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி செந்தில் அவர்கள் வழக்கறிஞர் ஜோதிபாசு அவர்கள், மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்க செயலாளர் இராஜேந்திரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் உரிமைகளுக்கு எதிராகப் போடப்பட்ட அரசாணை 1310 / 30.07.1979 ஐ உடனே ரத்து செய்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட வலியுறுத்தி அனைத்து இயக்க முன்னோடிகளும் சிறப்புரை ஆற்றினார்கள்.

Thursday, November 10, 2016

ஸ்ரீ ராஜராஜ தேவர் 1031 வது சதய விழா

உலகப்புகழ் பெற்ற அதிசயங்களில் ஒன்றான தஞ்சை பெருவுடையார் திருக்கோவில் எழுப்பி, அனைத்து மதங்களுக்கும் பொதுவான கொடையளித்து, வரலாற்றில் இனியொருவன் வீரத்திற்காகப் பேசப்படாதபடி சோழப்பேரரசை கலிங்கம் முதல் ஈழம் வரை விரித்த மாமறவன் ஸ்ரீ ராஜராஜ தேவர் என்கிற அருண்மொழித்தேவர் பிறந்த நாள் விழா ஐப்பசி சதய நாளான நவம்பர்-09-2016 அன்று தஞ்சை மண்ணில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்களும், மராட்டிய மன்னர் வழி அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே அவர்களும், உதவி ஆணையர் ஜெ.பரணிதரன் அவர்களும் முன்னின்று ராஜராஜ சோழனின் 1031 வது சதய விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Thursday, July 28, 2016

தேசிய சீர்மரபினர் ஆணையம் தமிழகத்தில் ஆய்வு

தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம் ( Criminal Tribes Act ) நம்மீது புகுத்தப்பட்ட நூற்றாண்டினை கடந்து விட்டோம். ஆயினும், அந்த கொடிய சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நிலத்தின் பழங்குடிகளான நம்முடைய மக்கள் இன்னமும் அவற்றிலிருந்து மீட்சி பெறாமல் பொருளாதார நலிவடைந்த  சமுகமாகவே அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள்.

இந்தியாவை அடிமைப்படுத்தி அரசாட்சி நிகழ்த்திய பிரித்தானிய அதிகாரிகளின் கட்டளைகளுக்கு கட்டுப்படாத; அடிமையாக இல்லாத சமூகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக 1871 இல் முதன்முதலாக குற்றப்பரம்பரை சட்டம் நிறைவேற்றப்பட்டது. வட இந்திய மக்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டாலும் 1911 இல் தென் இந்தியாவிற்கும்; குறிப்பாக தமிழகத்தில் பிரமலைக்கள்ளர் சமூகத்தினர்களுக்கும் புகுத்தப்பட்டது.

1920 ஆம் வருடம் இந்த சட்டத்தினை எதிர்த்து திரண்ட பிரமலைக்கள்ளர்கள் மீது பெருங்காமநல்லூர் கிராமத்தில் வைத்து துப்பாக்கிசூடு நிகழ்த்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அரசுத்தரப்பில் பதினாறு வீரமறவர்கள் என்று உறுதி செய்யப்படுள்ளது. இவர்களில் மாயாக்காள் என்கிற வீரமங்கையும் ஒருவராவார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கள்ளர் குல தெய்வங்களுக்கு தாகம் தணிக்க நீர் ஊற்றியவர்தான் அந்த தாய். இந்த கொடுமையான சட்டத்தின் காரணமாக கள்ளரின வேங்கைகள் இரவானால் காவல்நிலையத்தில் தங்க வேண்டும். கைரேகை வைத்துக் கொள்ள வேண்டும். வெளியூர் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் காவல் நிலையத்தில் சொல்லி அனுமதி வாங்கித்தான் செல்ல வேண்டும்.

ஆங்கிலேய அரசாட்சிக்கு எதிராக வலிமையோடு போராடிய சமூகங்கள் மீதெல்லாம் இந்த குற்றப் பரம்பரைச் சட்டம் பாய்ச்சப்பட்டது. தமிழகத்தில் மட்டும் கள்ளர், மறவர், குறவர், வலையர், ஒட்டர் உள்ளிட்ட 89 சாதியினர்கள் மீது புகுத்தப்பட்டது. இதன் காரணமாக கடுமையான துயரங்களையும், வலிகளையும் அனுபவித்தனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, ஜார்ஜ் ஜோசப் போன்ற ஆளுமைகளின் தொடர் போராட்டத்தினாலும், எதிர்ப்பினாலும் குற்றப் பரம்பரை சட்டம் 1947 இல் ஆங்கிலேய அரசால் திரும்பப் பெறப்பட்டது.

முறைகேடான சட்ட வடிவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தங்களது வாழ்வை சீரமைத்துக் கொள்வதற்கு பள்ளிகளும், நிவாரண திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. அவைகளும் சுதந்திர அரசால் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டுவிட்டன. டி‌என்‌டி என்று வழங்கப்பட்டு வந்த சாதி சான்றிதழும் டி‌என்‌சி என வழங்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து மதுரை சீர்மரபினர் நல சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருவதோடு, மத்திய – மாநில அரசு அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டு வருகின்றது. திரு.காசிமாயன் போன்ற செயற்பாட்டாளர்களின் பெருமுயற்சியின் காரணமாக 23.07.2016 அன்று தேசிய சீர்மரபினர் நல ஆணையம் தமிழகம் வந்தது.

மதுரை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய சீர்மரபினர் நல ஆணைய தலைவர் பிகு ராம்ஜி இதாதே, பழங்குடியின சீர்மரபினர் நல உறுப்பினர் ஷரவன் சிங் ரத்தோட் தலைமையிலான குழுவினர் சீர்மரபின சமூகங்களிடம் குறைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலர் இந்திரவள்ளி, கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் செல்வக்குமார், உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா ஆகியோர் உடனிருந்தனர்.

தேசிய ஆணையத்தலைவர் பிகுராம்ஜி இதாதே அவர்களிடம் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், மறத்தமிழர் சேனை மாநில தொண்டர் சேனை செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன் அவர்கள் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சார்ந்த பல்வேறு இயக்கத்தினர்கள் தங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக மனுவாக அளித்தனர். மேலும், தென்இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் கே.சி.திருமாறன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், பசும்பொன் தேசிய கழகம் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தேவரின கட்சிகளைச் சார்ந்தவர்களும் மனு அளித்தனர்.

கோரிக்கை மனுக்களை பெற்ற ஆணைய தலைவர் பிகு ராம்ஜி இதாதே அவர்கள் “அனைத்து மனுக்களையும் பரிசீலித்து மத்திய அரசின் கவனத்திற்கு நிச்சயம் எடுத்துச் சென்று இழந்த உரிமைகளை மீண்டும் பெற்றுத்தருவேன்” என்று உறுதியளித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து குழுவினர் சீர்மரபின மக்களின் வாழ்விடங்கள், பணியிடங்களை நேரில் ஆய்வு செய்திட மதுரை செல்லூர், கீரைதுறை, வெள்ளக்கல் ஆகிய பகுதிகளை சென்று பார்வையிட்டனர். குழுவினர்களுடன் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், மாநில தொண்டர் சேனை செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன், மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், அகமுடையார் அரண் மாநில ஒருங்கிணைப்பாளர் சோ.பாலமுருகன், சீர்மரபினர் நல சங்க நிர்வாகிகள் திருமதி. மஞ்சு கணேஷ், காசிமாயன் மற்றும் பலர் உடன் சென்றனர்.

தேசிய சீரமரபினர் ஆணையத்தின் சார்பில் இரண்டாம் நாள் ஆய்வுப்பயணம் 24.07.2016 அன்று காலை தென்பரங்குன்றம் பகுதியில் இருந்து துவங்கியது. மறத்தமிழர் சேனை, அகமுடையார் அரண், அகில இந்திய பார்வர்ட் பிளாக், சீர்மரபினர் நல சங்கம் உள்ளிட்ட இயக்கங்களின் நிர்வாகிகளும் உடனிருந்தனர். தென்பரங்குன்றம் மலையடிவாரத்தில் குடில் அமைத்து தங்கியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து பெருங்காமநல்லூர் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடம், நினைவு தூண், உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி, 58 கிராம கால்வாய் திட்ட பணிகள், வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் முடித்து இரவு கோடைக்கானல் வந்தடைந்தனர்.


25.07.2016 அன்று காலை கோடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. மூன்று நாள் ஆய்வுகளிலும் மறத்தமிழர் சேனை மாநில மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர் சோ.பாலமுருகன், கள்ளர் நாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், சீர்மரபினர் நலசங்க நிர்வாகிகள் காசிமாயன், திருமதி மஞ்சு கணேஷ், உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் செட்டில்மெண்ட் துரைமணி, மறத்தமிழர் சேனை மாநில மாநில தொண்டர் சேனை செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன், மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் ஜெயராஜ், ஆந்திர டி‌என்‌டி சங்க தலைவர் சுப்பாராவ், சீர்மரபினர் நலசங்க தலைவர் டாக்டர் ஜெபமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.