★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Wednesday, June 8, 2016

தனித்தொகுதிகள் துயரத்தின் நிழல் - பாகம் மூன்று

                                                        -புதுமலர் பிரபாகரன் 

“சுதந்திரமானது இன்னும் களத்தடி நெல்லாகவே இருக்கிறது. கருக்காய், கரும்புழுதி, இடையிடையே வைக்கோல், செத்தையெல்லாம் நிரம்பியதாகவே இருக்கிறது. இது அப்படியே களஞ்சியத்திற்கு போய் சேருமா? சேராது. சேரக்கூடாது. காலம் வரும்போது காற்றில் தூற்றி கழிக்க வேண்டியவற்றைத் தானாகவே கழித்து விட வேண்டும்.”
                   -தேவர் திருமகனார்.

 உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்கிற பெருமிதங்களுக்கு மத்தியில் சுதந்திர இந்தியாவில் பிறந்திருந்தும், மக்கள் செல்வாக்கு அமைந்திருந்தும் தம் வாழ்நாள் முடிவதற்குள் ஒருமுறையேனும் சட்டமன்ற: நாடாளுமன்ற அவைகளுக்குள் நுழைந்து விட முடியாதா என்கிற ஏக்கத்துடன் தமது அரசியல்  சுதந்திரத்தின் எல்லை குறித்த எவ்வித விவாதமுமின்றி கடந்து செல்லும் தலித்துகள் அல்லாத 83சதவிகித இந்திய பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களும்,  கிருத்துவ, முஸ்லீம் சிறுபான்மை மக்களும் மிகக்சரியாக தமது எதிர்கால அரசியல் குறித்த பார்வைகளை / உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது. 
        இந்திய அரசியலமைப்பை ஒருங்கிணைத்த அம்பேத்கார்கூட தனித்தொகுதி ஒதுக்கீடுகள் பத்தாண்டுகளுக்கு இருந்தால் போதுமென்றுதான் கோரிக்கை வைத்தார். அடிமை இந்தியாவில் முஸ்லீம்கள் கிருத்துவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் தலித்துகள் என அனைவருக்குமே இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட்டன. கால நீட்சியில் அவை ஒவ்வொன்றாக நீக்கப்பட்டுவிட்டன. ஆனால், சுதந்திர இந்தியாவில் சகல அறங்களையும் துடைத்துவிட்டு தலித்துகளுக்கு மட்டுமே இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
        தலித் என்கிற அடையாளத்தின் பிறிதொரு முகமாக நிரந்தர வாய்ப்புகள் என்பது வலுவாக கட்டமைக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களும் எஸ்.சி./எஸ்.டி ஊழியர்களால் நிரம்பி வழியும் இன்றைய சூழலிலும், அரசியலில் முழுமையான ஆதிக்கசக்தியாக தலித்துகள்  மாறிவிட்ட நிலையிலும்   தனித்தொகுதி அரசியல் நீக்கப்படாமல், காலநீட்டிப்பு செய்யப்பட்டு நூற்றாண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அதனினும் கொடுமையாக பல தொகுதிகள்  தொடர்ந்து 53 வருடங்களுக்கும் மேலாக தனித் தொகுதிகளாகவே இருந்து வருவதும், அவை மீண்டும் மீண்டும் பொதுத்தொகுதிகளாக மாற்றப்படாமல் தனித்தொகுதிகளாகவே நீட்டித்து வரப்படுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.

தனித்தொகுதிகள் துயரத்தின் நிழல் - பாகம் இரண்டு

                                               -புதுமலர் பிரபாகரன் 

“கொள்கை புனிதமாக இருந்தால் மட்டும் போதாது; அதற்கான வேலைத்திட்டமும் தூய்மையானதாக இருக்க வேண்டும்”
        –மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

இந்திய அரசியல் சூழலுக்குள் சிக்கித் திணறும் தமிழக பெரும்பான்மை சமூகங்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை பறித்துவரும் தனித்தொகுதிகளின் பரிணாம வளர்ச்சியானது ஆங்கிலேய சுரண்டல் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியிலிருந்து பிறப்பெடுத்த வறட்டுவளர்ச்சி சிந்தனையாகும்.

தமிழ் மண்ணில் சுதந்திரமாக ஆட்சி செலுத்திய அரசர்கள் ஆலயங்களுக்கும், அந்தணர்களுக்கும் கணக்கற்ற கொடைகளை வழங்கிட, ஏனைய தமிழ்ச்சாதியினர் உற்பத்தி, வணிகத்தில் தன்னிறைவாக செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். கால ஓட்டத்தில் மதத்தால் வேறுபட்ட நவாபுகள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியால் புறக்கணிக்கப்பட்ட பிராமணர்கள் வருமானத்திற்கான மாற்று வழி தேடலாயினர்.
ஆங்கிலத்தை நீச மொழி யென்று விமர்சித்து வந்திருந்த நிலையில், கடுமையான உடல் உழைப்பின்றி மாத ஊதியம் பெறும் புதிய ஊழிய வர்க்கத்தின் துவக்கம் அறிந்து, ஆங்கிலம் கற்று ஆங்கிலேயர்களுக்கு தொண்டு புரியலாயினர். இதே ஊழியத்தில் வேளாளர், முதலியார் சாதிகளும் முன்னணியில் இருந்தன. ஆங்கிலேய உற்பத்தியின் விற்பனை சந்தையாக தமிழகம் மாறிய போது, இங்குள்ளவர்களின் பொருளாதாரம் நசிவடைந்து வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. கொஞ்சம் காலந்தாழ்ந்து ஆங்கிலம் கற்கவும் வேலையில் சேரவும் மற்ற சமூகங்களும் முற்பட்டபோது பிராமணர்களின் ஆதிக்கம் அவர்களுக்கு தடையாக அமைந்தது. ஆகவே மற்ற சமூகங்கள் பகைமை கொண்டதோடு பிராமணர்களின் ஆதிக்கத்தை அடக்கவும், முடக்கவும் அனைத்து வகைகளிலும் போராடி வந்தன.

தனித்தொகுதிகள் துயரத்தின் நிழல் - பாகம் ஒன்று

                                  -புதுமலர் பிரபாகரன்    
                       
                         மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
                      பழித்தது ஒழித்து விடின்  –குறள்

       லகிலேயே மக்களாட்சி நடைபெறும் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா ஆகுமென பள்ளிப்பருவம் முதல் பாடத்திட்டம் வாயிலாக நமக்குள் புகுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை அதுவாக இல்லாமல் வாக்களிக்க மட்டுமே உரிமையுள்ள குடிமகன்களாக அரைநூற்றாண்டு காலம் நம்மை புறக்கணிக்கும் வரலாற்று சூதுகளின் துவக்கத்தையும் அறியவேண்டியது அவசியமாகிறது. பல்வேறு மொழி, மதம், நாகரிகம், பண்பாடு, வரலாறு, பழக்கவழக்கங்கள் கொண்ட ஒன்றோடொன்று தொடர்பில்லாத பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்தியா என்கிற நாடு கட்டமைக்கப்பட்ட வழித்தடம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது மட்டுமல்ல பல வேடிக்கைகளும் நிறைந்தது ஆகும்.


       இந்தியப் பெருநாடு மண்வளம், தட்ப-வெப்பநிலை, உணவுமுறை, கலாச்சாரம், வழிபாடு, தெய்வநம்பிக்கை ஆகியவைகளில் பெருமாறுதல் கொண்ட சிறிய, பெரிய தனித்தனி நாடுகளாக செயல்பட்டு வந்தநிலையில், பழங்காலந்தொட்டு இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்நிய படையெடுப்பு, பண்பாட்டு தாக்குதல்களை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியின் கீழ்தான் ஒரே ஆட்சிக்குட்பட்ட நாடாக இந்தியா உருப்பெற்றது. ஆங்கிலேய கொடுங்கோலாட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்ட காலங்களில்  இது ஒரே நாடு நாம் ஒரே மக்கள் என்கிற எண்ணம் தொடர் போராட்டங்களால் மக்கள் மனதில் ஏற்படுத்தப்பட்டது.


Tuesday, June 7, 2016

maraththamizhar senai state organizer pudhumalar prabhakaran visiting card

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் வரவேற்பு அட்டை. (புதுமலர் பிரபாகரன் விசிட்டிங் கார்ட்) பயன்பாட்டாளர்களுக்காக......


புதுமலர் பிரபாகரன் முகவரி

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின்  முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்.

சு.புதுமலர் பிரபாகரன், முதுகலை., ஆய்வியல் நிறைஞர்., (வரலாறு)
மாநில அமைப்பாளர்,
மறத்தமிழர் சேனை,
12/338, திருவரங்கம் சாலை,
நேதாஜி நகர்,
பரமக்குடி- 623707.
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழர் நாடு.
அகவி : 99421 33644, 99521 33644.

pudhumalar prabhakaran address

maraththamizhar senai state organizer pudhumalar prabhakaran address.

S.Pudhumalar Prabhakaran, M.A., M.Phil., (History)
State Organizer,
Maraththamizhar Senai,
12/338, Thiruvarangam Salai,
Nethaji Nagar,
Paramakudi- 623707.
Ramanathapuram -District,
Thamizhar Nadu.
Cell No: 99421 33644, 99521 33644.

Sunday, May 1, 2016

இராமநாதபுரத்தில் சிங்கம் கூட்டணி வேட்புமனு தாக்கல்

மறத்தமிழர் சேனை, அகில இந்திய பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, தீ அமைப்பு ஆகியவைகள் இணைந்து சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்க பார்வர்ட் பிளாக் கட்சியின் சிங்கம் சின்னத்தோடு  'சிங்க கூட்டணி' அமைத்தது.


சிங்க கூட்டணியின் சார்பில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் மு.செந்தூர் பாண்டியன் அவர்கள் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு கடந்த 29-04.2016 அன்று நண்பகல் 1.45 மணியளவில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மறத்தமிழர் சேனை, தேசிய மறுமலர்ச்சி இயக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக வந்து இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்